Thursday, September 23, 2010

தாஷ்கன்ட் ஓபன் இரட்டையர் காலிறுதியில் சானியா ஜோடி



தாஷ்கன்ட்,செப்.24 தாஷ்கன்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் காலிறுதிச் சுற்றுக்கு சானியா மிர்ஸா, இத்தாலியின் மரியா எலினா கேமரின் ஜோடி தகுதி பெற்றுள்ளது.
மகளிர் ஒற்றையர் சுற்றில் சானியா முதல் சுற்றிலேயே தோற்றுள்ள நிலையில் தற்போது இரட்டையர் பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சானியாகேமரின் ஜோடி, உக்ரைன் சகோதரிகளான லியும்டிலாநதியா கிசோனக் ஜோடியை 62, 63 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில், அலெக்சான்ட்ரா டுல்கெரு, மக்தலீனா ரிபேரிகோவா ஜோடியை சந்திக்கவுள்ளது சானியா இணை.

பந்துவீச்சு பயிற்சியில் மாற்றம் தேவை வெங்கடேஷ் பிரசாத்


பெங்களுர்,செப்.24
இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு பயிற்சியில் மாற்றம் தேவை என இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
இது அவர் கூறியது வருமாறு:
இந்திய பந்து வீச்சாளர்களின் அணுகுமுறையில் பிரச்சனை உள்ளது, அதுதான் இன்றைய பந்து வீச்சு பலவீனங்களுக்குக் காரணம். பந்து வீச்சாளர்கள் தினமும் காலையில் உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்லவேண்டும், வலையில் நீண்ட நேரம் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபடவேண்டும். வலையில் 20 நிமிடங்களுக்குப் பந்து வீசி விட்டு மேட்சில் வந்து 20 ஓவர்களை வீச முடியாது. வலைப் பயிற்சியில் பந்து வீச்சு பயிற்சியைப் பார்த்து நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன், இப்போதெல்லாம் நிறைய பயிற்சி அளிக்கப்படுகிறது, இருந்தும் பந்து வீச்சாளரகளிடம் கட்டுப்பாடு இல்லை. வீரர்கள் தங்கள் அணிக்கும், பயிற்சியாளருக்கும் மிக முக்கியமாக தங்களுக்கு தாங்களே நேர்மையாக இருக்க வேண்டும், இல்லையெனில் மாற்றங்களைக் காண முடியாது.இஷாந்த் ஷர்மாவை பயிற்சியில் ஈடுபடுவதில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் . தற்போது அவரது பந்து வீச்சில் மணிக்கட்டின் நிலை சரியாக அமையவில்லை. விரல்களும் பந்தின் தையல் மீது சரியாக உட்காரவில்லை.மாறாக மணிக்கட்டை சுழற்றுகிறார்.இதனால்தான் அவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது .
இதேபோல் பிரவீண் குமாரின் மணிக்கட்டு நிலை சிறப்பாக உள்ளது, அவரை டெஸ்ட் போட்டியில் தேர்வுசெய்வது அவசியம் என்று கூறியுள்ளார்.

சாம்பியன் லீக் அரையிறுதியில் இன்று சென்னைபெங்களூர் மோதல்

போர்ட் எலிசபெத், செப். 24
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் 20/20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றது.
போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வாரியர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 136 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹஸ்ஸி 50 ரன்களை குவித்தார். கேப்டன் தோனி 31 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் ஆடினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வாரியர்ஸ் அணி வீரர்கள் ஒற்றை ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் வாரியர்ஸ் அணி இருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முரளிதரனின் சிறப்பான பந்துவீச்சால் வாரியர்ஸ் அணியின் அனைத்து விக்கெட்டுகளும் பறிபோனது. இதனையடுத்து பத்து ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஏ'' பிரிவில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரன்ரேட் அடிப்படையில் முதலிடம் நீக்கம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
வாரியர்ஸ் (தென்னாப்பிரிக்கா), விக்டோரியா (ஆஸ்திரேலியா) ஆகிய 3 அணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் தலா 6 புள்ளிகள் பெற்றுள்ளன. சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நிகர ரன்ரேட் +2.050 ஆகும். வாரியர்ஸ் அணியின் ரன்ரேட் +0.588 ஆகும். விக்டோரியாவின் ரன்ரேட் +0.366.
இந்நிலையில் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெறும். நாளை நடைபெறும் 2வது அரை யிறுதியில் ""பி'' பிரிவில் முதலிடத்தை பிடித்த சவுத் ஆஸ்திரேலியா அணியும் ""ஏ'' பிரிவில் 2வது இடத்தை பிடித்த வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. அதை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, இரண்டு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றன. ஒரு பிரிவில் இடம் பெற்ற அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதி அதன் அடிப்படையில் லீக் போட்டியின் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் மோதும் இரு அணிகளும் சமபலம் கொண்டுள்ளதால் ஆட்டத்தில் பரபரப்பு பஞ்சமிருக்காது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் ஒப்பிடும் போது சென்னை சற்று பின்தங்கியுள்ளதாகத் தான் தெரிகிறது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் டிராவிட், கோலி,உத்தப்பா,மனிஸ் பான்டே, ரோஸ் டெய்லர் ,கேமருன் ஓயிட் என படை நீளுகிறது. சென்னை அணியில் ஹசி,விஜய் மட்டுமே தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருகின்றனர். மற்றவர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் சென்னை அணியால் இறுதி போட்டிக்கு செல்ல முடியும். இதே போல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பவுலிங் தரவரிசையில் டேல் ஸ்டெயின்,பிரவின் குமார்,வினய் குமார் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். இவர்களுக்கு பக்க பலமாக அணித் தலைவர் கும்ப்ளேவும் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். பெங்களூர் அணியைப் போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் வேகப்பந்து வீச்சில் போலிங்கரை தவிர யாரும் சிறப்பாக பந்து வீச்சில் சரியாக செயல்படவில்லை. பந்துவீச்சு ,பேட்டிங் ஆகிய இரண்டு துறைகளிலும் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டால் மட்டும் தான் பெங்களூர் போன்ற சிறந்த அணியை வெல்ல முடியும். இந்நிலையில் சென்னை அணிக்கு சற்று ஆறுதலாக காயம் காரணமாக காலிஸ் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆடமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது.