Friday, October 8, 2010

காமன்வெல்த் கலக்கும் ஈழத் தமிழர்

 ஜிம்னாஸ்டிக்ஸில் 2 தங்கம் வென்றார்.
 புதுடெல்லி,அக்.9 
டெல்லியில்  நடைபெறும்  19வது    காமன்வெல்த் போட்டியில்  ஈழத் தமிழர் பிரஷாந்த் செல்லத்துரை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சார்பாக  விளையாடி தங்கம் வென்றுள்ளார். செல்லத்துரை ஆஸ்திரேலிய ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள முக்கிய வீரர் ஆவார். ஆஸ்திரேலியாவுக்காக டெல்லி காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்று கொடுத்துள்ளார். குதிரை வீரன் என்று ஆஸ்திரேலிய வீரர்களால் செல்லமாக அழைக்கப்படும் செல்லத்துரை சரியான உயரம். இதனால்தான் இந்தப் பெயரை வைத்துள்ளனராம் சக ஆஸ்திரேலிய வீரர்கள். காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்காக ஈழத் தமிழர் ஒருவர் கலக்கிக் கொண்டிருப்பது இனப்போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். இவரது பெயர் பிரஷாந்த் செல்லத்துரை. பூர்வீகம் ஈழம். இவரது குடும்பத்தினர் இலங்கையில்  இனக் கலவரம் பெரிதாக வெடித்த 1983ம் ஆண்டு அங்கிருந்து இடம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்றனர். தற்போது சிட்னியில் வசித்து வருகிறது செல்லத்துரையின் குடும்பம்.24 வயதேயாகும் செல்லத்துரை ரேடியாலஜி மாணவர் ஆவார். ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்தது செல்லத்துரைக்கு எளிதாக இருக்கவில்லையாம். கடும் போராட்டங்கள், கடின பயிற்சி , கடுமையான முயற்சிக்குப் பின்புதான் அணியில் இடம் கிடைத்ததாம்.  இவரது இந்த முயற்சியின் பயனாக காமன்வெல்த் போட்டியின் இரு போட்டிப் பிரிவுகளில் கிட்டத்தட்ட 15,000 புள்ளிகள் வரை பெற்றள்ளார் . ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் இந்த அளவுக்கு அதிக பட்ச புள்ளிகள் கிடைப்பது மிகவும் அரிதான விஷயம். அந்த அளவில் செல்லத்துரை ஒரு சாதனையே படைத்துள்ளார்.  கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த குழுப் போட்டியில் கிடைத்த  ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த  முதல் காமன்வெல்த் தங்கம் கிடைத்தது.இந்த அணியில் செல்லத்துரை முக்கியமான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.  இதேபோல செல்லத்துரை இன்னொரு தங்கத்தையும் வென்றுள்ளார். இவரது இந்த வெற்றி இன உரிமை போராட்டத்தில் காயப்பட்டு போயுள்ள ஓட்டு மொத்த தமிழர்களுக்கும்  ஆறுதல் அளிக்கலாம்.

No comments:

Post a Comment