Sunday, December 19, 2010

DLL பிரச்சினைக்கும் தீர்வு

சில நேரங்களில் நம் கணினியில் ஏதாவது மென்பொருள் அல்லது
விளையாட்டு நிறுவி விட்டு அடுத்த முறை கணினியை திறந்ததும்
ஏதோ DLL கோப்பு Missing என்று செய்தி வரும்.  இது போன்ற
பிழை செய்திகளுக்கு எளிய முறையில் தீர்வு காணலாம் இதைப்
பற்றித் தான் இந்தப்பதிவு.


Dynamic-link library என்று சொல்லக்கூடிய DLL கோப்புகள் விண்டோஸ்
இயங்குதளத்திற்கு மிக முக்கியமானது என்றே சொல்லலாம்.
இப்படி முக்கியமான DLL கோப்புகள் பல நேரங்களில் கணினி
எதிர்பாராமல் Shutdown  செய்வதாலும் புதிதாக நாம் நிறுவும்
மென்பொருள் பழைய DLL கோப்பை மாற்றிவிடுவதனாலும்
பிழைச் செய்தியை காட்டுகிறது. இது போன்ற பிரச்சினைக்காக நாம்
விண்டோஸ் மறுபடியும் இண்ஸ்டால் செய்யத் தேவையில்லை.
கோப்பை தரவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
எந்த DLL கோப்பு இல்லை என்று செய்திவருகிறதோ அந்த DLL
இணையதள முகவரி

 :http://www.dll-files.com

இந்ததளத்திற்கு சென்று எந்த DLL கோப்பு இல்லை என்று செய்தி
வருகிறதோ அந்த கோப்பின் பெயரை   படம் 1-ல் இருப்பது போல்
இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து Search என்ற பொத்தானை
அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் தேடிய DLL
கோப்பு இருக்கும். எந்த பயனாளர் கணக்கும் இல்லாமல் எளிதாக
தரவிரக்கலாம். தரவிரக்கிய DLL கோப்பை நம் கணியில் எப்படி
நிறுவ வேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கின்றனர்.கணினி
வைத்திருக்கும் நம் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக

டிவிடி வீடியோக்களை யூடியூப்பிற்கு அப்லோட் செய்வது எப்படி?

திருமணம், பிறந்தநாள் போன்ற முக்கியமான விழாக்களை வீடியோ கமெரா மூலம் ரெக்காட் செய்து வைத்திருப்பீர்கள்.
அவற்றை டிவிடிகளாக ரெக்காட் செய்து வைத்திருந்தால் இந்த வீடியோக்களை எவ்வாறு நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வது. யூடியூப்பில் போட்டுவிட்டால் அனைவரும் பார்த்து ரசிக்கலாமல்ல?
யூடியூப்பிற்கு அப்லோட் செய்வதற்கான படிமுறைகள் இங்கே.


1. முதலில் டிவிடி பைல்களை கணனிக்கு காப்பி செய்துவிடுங்கள். இதற்கு VidCoder    டூலைப்பயன்படுத்தலாம்.

இதை ரன் செய்து டிவிடியை கணனியில் இட்டதும் Source   என்ற இடத்தில் டிவிடியில்  VIDEO_TS  எனும் பால்டரை தேர்வு செய்தல் வேண்டும்.

2.கன்வர்சேசனை தொடங்குவதற்கு    VidCoder  அழுத்தி அல்லது Ctrl + T   இல் எல்லா டைட்டில்களையும் தேர்வு செய்து என்கோட்டை அழுத்துங்கள். (டிவோல்ட் செட்டிங்கை மாற்ற வேண்டாம்) வீடியோவின் அளவைப்பொறுத்து என்கோட் செய்வதற்கு நேரம் எடுக்கலாம்.

3. யூடியூப்பில் வீடியோ நேரம் 15 நிமிடமே பார்க்கும் படியாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். எனவே டிவிடி வீடியோக்களையும் அதற்கேற்றால் போல ஸ்பிலிட் செய்ய வேண்டும். இதற்கு Mக4ஆணிது என்ற மென்பொருளை பயன்படுத்துங்கள்.

4. இனி வீடியோக்களை யூடியுப்பிற்கு அப்லோட் செய்ய ஜாவா மூலம் இயங்கும் டூலை பயன்படுத்தினால் வீடியோக்களை பிரித்து தரவேற்ற வசதியாக இருக்கும். யூடியூப்பின் அப்லோட் பக்கத்திற்கு சென்று  upload video  என்பதை கிளிக் செய்யுங்கள்

5. தனித்தனியாக 15 நிமிடங்கள் கொண்ட வீடியோக்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு யூடியூப்பின் அனோட்டேஷன் என்ற வசதியை பயன்படுத்தலாம்.  முதலாவது வீடியோவை தேர்வு செய்து அனோட்டஷன் எடிட்டரில் கடைசியில் ஸ்கோரல் செய்து வீடியோ நிறைவு பெறும் இடத்தில்
speech bubble   மூலமாக இரண்டாவது வீடியோவின் இணைப்பை தர வேண்டும். இவ்வாறு எல்லா கிளிப்புகளுக்கும் செய்து விட்டால் அனைத்து வீடியோக்களும் தொடர்ச்சியாக பார்க்க முடியும்.  இதன் பிளே லிஷ்ட் வசதிமூலம் எல்லா வீடியோ இணைப்புக்களையும் ஒரே பக்கத்தில் பார்க்கும் படி செய்து விடலாம்.

ஹாட்டிஸ்க், யு.எஸ்.பி, மற்றும் கமெரா டிவைஸ்களில் இல் இருந்து அழிக்கப்பட்ட பைல்களை பெறுவதற்கு

கணனியில் அல்லது யு.எஸ்.பி டிவைஸ் போன்றவற்றில் இருந்து தவறுதலாக முக்கியமான சில பைல்கள்
அல்லது படங்கள் போன்ற டாக்குமென்ட்களை திடீரென அழித்து விட்டீர்களாயின் என்ன செய்வது? அவற்றை மீளவும் பெறுவதற்கு Undelete 360 என்ற மென்பொருள் உதவுகிறது. அழிக்கப்பட்ட பைல்களை தேடுவதற்கு இந்த மென்பொருளை நிறுவி பின்னர் main interface
 இல் Search
என்பதை கிளிக் செய்ததும்,  அழிக்கப்பட்ட பைல்களின் விபரங்கள் காட்டப்படும். இதில் குறிப்பிட்ட பைல் என்ன நிலையில் இருக்கிறது அதாவது அதை ரீகவர் செய்ய முடியுமா அல்லது ஓவர் ரைட் செய்யப்பட்டுள்ளாதா என்பதை அறிய முடியும்.  அவசரத்தில் பைல்களை அழித்துவிட்டீர்களாயின் இனி கவலையில்லை அவற்றை உடனடியாக ரீகவர் செய்ய இந்த இலவச மென்பொருளை டவுண்லோட் செய்து வையுங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு பயன்படும்.



Thursday, December 16, 2010

சன் டிவி மற்றும் கலைஞர் டிவி – தொலைக்காட்சி பயங்கரவாதம் : எம்.எஸ்.ஆர்

தமிழக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக சன் டிவி மற்றும் கலைஞர் டிவி வழங்கும் தொலைக்காட்சி பயங்கரவாதம்
இன்று ஊடகம் என்றாலே வெறும் பொழுது போக்கு சாதனமாக பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.ஒரு சிலரே அதை செய்தி அறிந்து கொள்வதற்கான சாதனமாக மட்டும்புரிந்து கொண்டுள்ளனர்.

ஊடகத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள புகழ்பெற்ற ஊடக விமர்சர்கரும் மொழியியலின் தந்தையுமானஅறிஞர் நோம் சாம்ஸ்கி    கூறுவதிலிருந்து துவங்குவோம்.    எந்த மாதிரி சமூகத்தில் நாம் வாழ விரும்புகிறோம்? எந்த மாதிரி யான அரசியல் அமைப்பில் நாம் வாழ விரும்புகிறோம் என்பதை பொறுத்தே ஊடகத்தின் பங்கு என்ன என்பதை முடிவு செய்ய முடியும். அதாவது சமூகத்தை ஜனநாயகமாகவோ சர்வாதிகாரமாகவோ மாற்றுவதில் ஊடகமானது தீர்மானகரமான பங்காற்றுகிறது .  
ஒரு சமூகம் அது ஜனநாயக சமூகமாக இருக்க வேண்டுமானால் மக்கள் தங்களை நிர்வகித்துக்கொள்ளும் வழிமுறைகளில் பங்கேற்பதற்கு அனைத்து வழிமுறைகளும் இருக்க வேண்டும் அதற்கான தகவல்கள் இலவசமாகவும் சுதந்திரமாகவும் கிடைக்க வேண்டும் இதுதான் ஜனநாயகம் ஆகும்.இதற்கு எதிரான நிலை .  மக்கள் தங்களை நிர்வகித்துக் கொள்வதை தடுப்பது.அதற்கான தகவல்களை வெட்டிச் சுருக்கியும் குறுக்கியும் தருவது.முழுமையான தகவல்கள் பெறவிடாமல் கட்டுபடுத்துவது.    இதன் மூலம் மக்களை அதிகாரத்திலுள்ளவர்களின்
விருப்பத்திற்கேற்றவாறு மாற்றுவது.

ஊடகத்தின் மூலம் மக்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றி விட முடியும் என்பதற்கு உலக வரலாற்றில் நடந்த இரண்டு உதாரணங்களை இங்கே காண்போம்.

1916ல் முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது அமெரிக்காவில் உட்ரோ வில்சனின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.வில்சனின் அரசும் போரில் ஈடுபட்டிருந்தது.ஆனால் அன்றைய மக்களோ போரில் தங்களது நாடு ஈடுபடுவதை விரும்பவில்லை.ஐரோப்பிய நாடுகள் நடத்தும் போரில் சம்பந்தமில்லாமல் நாம் ஏன் ஈடுபட வேண்டும் என நினைத்தனர்.அவர்கள் அமைதியை விரும்புபவர்களாக இருந்தனர்.வில்சன் அரசின் நடைமுறைகள் மூலம் போருக்கு மக்களின் ஆதரவைத்திரட்ட எவ்வளவோ முயற்சித்து பார்த்தார்.மக்கள் கண்டுகொள்ளவே இல்லை.கடைசியில் ஊடக்த்தின் பக்கம் தமது பார்வையைத் திருப்பினார்.கீரில் என்பவரின் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்து மொத்த ஊடக்த்தையும் கட்டுபடுத்தும் அதிகாரத்தையும் அளித்தார்.
அத்தனை ஊடகங்களும் அனைத்து வித பொய்ப் பித்தலாட்டஙகளை கையாண்டு போர் வெறியை மக்களிடம் உருவாக்கின. ஆறே மாதத்தில் மக்கள் போர் வெறியர்களாக மாறினர்.உலகினை காப்பாற்ற வேண்டுமானால் ஜெர்மானிய மக்களை கைகால் வேறாக வெட்டிக் கொலை செய்ய வேண்டும் என்று வெறியுடன் மாறினர்.    ஊடகம்தான் சமாதானத்தை அமைதியை விரும்பிய மக்களை இரத்த வெறி பிடித்த போர்வெறியர்களாக மாற்றியது .
இரண்டாவது வரலாற்று நிரூபணம் – ரசியாவில் புரட்சி வெற்றி பெற்றது .அதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் சிவப்பு வண்ணம் குறித்தும் தீவிரமான பிரச்சாரம் செய்யப்பட்டது.இதன் விளைவாக பல தொழிற்சங்கங்கள் கலைக்கப்பட்டன.ஊடகத்தின் சுதந்திரமும் கருத்துச்சுதந்திரமும் ரத்து செய்யப்பபட்டது. இந்த இரண்டு வரலாற்று சம்பவங்களும் இட்லரின் கோயபல்சின் வெற்றிகரமன ஊடக பிரச்சாரத்திற்கு முன்னரே நடைபெற்றவை.
இதன் வெற்றியை முன்வைத்தே இட்லர் கோய பல்சை வைத்து வரலாற்று புகழ்மிக்க பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டான் என்பதை சாம்ஸ்கி குறிப்பிடுகிறார்.
இந்த இரண்டு உதாரணங்களையும் இங்கு விரிவாக குறிப்பிட்டதன் நோக்கமே தமிழகம் எத்தகைய அபாயத்தை நோக்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.மேலும் முக்கியமாக ஊடகமாக அதிலும் காட்சி ஊடகம் மிகவும் சக்தி வாய்ந்தது அதன் மூலம் யாரைஸயம் எப்படியும் மாற்றிவிட முடியும் என்பதை உணரவுமே இந்த வரலாற்று உதாரணங்கள்.
இப்போது தமிகத்தின் மிகப்பெரும் ஆதிக்க சக்தியாக வளர்ந்து விட்ட சன் டிவி மற்றும் கலைஞர் டிவி ஊடகங்களை பார்ப்போம்.
முதலாக ,இந்த ஊடகங்கள் எந்த நோக்கத்தோடு யாரால் நடத்தப்படுகின்றன ? அமெரிக்காவில் எம்.பி.ஏ முடித்து விட்டு திரும்பிய பேரன் கலாநிதி மாறனுக்கு பொழுது போக்கிற்கான வேலைவாய்ப்பாக கட்சிப் பணத்தில் பூமாலை வீடியோ இதழ் துவங்க கருணாநிதியால் அனுமதி அளிக்கப்பட்டது.அது தோல்வி அடையவே தனியார் தொலைக்காட்சி அனுமதியளிக்கப்பட்ட காலத்தில் சன் டிவிக்கு அனுமதியளிக்கப்பட்டது.
கட்சிப்பண்த்தில் கட்சி அலுவலகத்தில் சன் டிவி தொடங்கப்பட்டு அதன் அரவணைப்போடு வளர்ந்தது.இது அனைவரும் அறிந்த வரலாறு.அனைவரும் அறியாத ஒன்று சமூக சீர்திருத்தங்களை பரப்புவதற்காகவோ அல்லது சமூக சிந்தனையோடே  சன் டிவி தொடங்கப்படவில்லை.
80 களின் முற்பகுதியில் உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட தொடங்கிய நேரம். உலக சந்தைகளின் ஒருங்கிணைப்பு நடைபெற்று கொண்டிருந்த காலம் . எந்த நாட்டவரும் எந்த நாட்டிலும் தொழில் தொடஙகலாம் அனுமதிகள் சட்டஙகள் மற்றும் உரிமங்கள் தேவையில்லை என் நாடுகளின் கதவுகள் தாராளமாக திறந்து விடப்பட தாராளமயமாக்கல் கொள்கைகள் அநேகமாக அனைத்து நாடுகளிலும் அமல்படுத்தப்பட துவங்கிய காலத்தில் பன்னாட்டுக்கம்பெனிகளுக்கும் தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கும் மிக விரிவான விளம்பரங்களும் தொடர்பு முறைகளும் அந்தந்த நாட்டுக்கு மக்களின் பண்பாட்டிற்கு ஏற்ப தேவைப்பட்டன.
பன்னாட்டு கம்பெனிகளின் சரக்குகளுககு விளம்பரங்களுக்கு அந்தந்த மொழியிலேயே தொலைக்காட்சி சேனல்கள் தேவைப்பட்டன.பன்னாட்டுக்ககம்பெனிகளின் ஒரு சரக்கு உலகம் முழுவதும் விற்கப்பட வெறும் பொருளாதார உலகமயமாக்கல் மட்டுமின்றி பண்பாட்டு உலகமயமாக்கலும் அவசியமாகும் .
அதாவது இந்திய அளவில் பல மொழி பேசும் தேசிய இனத்தின் கலாச்சார வேறுபாடுகள் பன்னாட்டுக்கம்பெனிகளின் சரக்குக்ளை விற்பதற்க இடைஞ்சலாக உள்ளன.எனவே வளமான தேசிய இன பண்பாட்டு வேறுபாடுகளை அழித்து ஒரே மாதிரியான மேற்கத்திய பண்பாட்டுடன் ஆங்கிலக்கலப்புடனான் பண்பாட்டு பரப்பல் மேற்கொள்ளப்பட வேண்டும் .இதைத்தான் எல்லா சேனல்களும் செய்கின்றன.
எல்லா சேனல்களிலும் வெள்ளைத்தோல் சிகப்பழகு தொப்புள் தெரியும் ஜீன்ஸ் உடை பீசா உணவு உள்ளிட்ட துரித உணவு, நுனி நாக்கு ஆங்கிலம் கலந்த மொழி பேசுவதுதான் சரக்கு விற்பனைக்கு சௌகரியமான ஒன்று என்பது பன்னாட்டு கம்பெனிகளின் வியாபார யுத்தி.
பன்னாட்டு மூலதனத்தின் இந்த தேவைகளை அமெரிக்க வார்ப்பும் இயல்பிலேயே தீவிர கம்யூனிச எதிப்பாளருமான கலாநிதி சரியாக புரிந்து கொண்டார்.(அத்துடன் அவர் முதல் முதலாக சன் டிவியை தொடங்கியதால் பன்னாட்டுக் கம்பெனிகளின் விளம்பரசந்தையை கைப்பற்றுவதும் எளிமையாகிற்று. தனியார் தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் அடிப்படை ஆதாரங்கள் ஆகும் .விளம்பரங்களிலிருந்து கிடைக்கும் வருவாயுடன் ஒப்பிடும்போது கேபிள் சந்தாவிலிருந்து கிடைக்கும் வருவாய் குறைவானது.(அதையும் சன் டிவி விட்டு வைக்க வில்லை என்பது வேறு விட்யம்)கேபிள் சந்தாவை மட்டும் நம்பி யாரும் தொலைக்காட்சி சேனல்கள் துவங்குவதில்லை என்பதை வலியுறுத்தவே இதைக் குறிப்பிடுகிறோம். .
தொலைக்காட்சியின் உயிர்நாடியாக இருப்பது விளம்பரங்கள்தான்.எனவே விளம்பரங்களுக்கு எதிரான விடயங்களோ கம்பெனிகளுக்கு எதிரான விடயங்களோ எதுவுமே தொலைக்காட்சி சேனல்களில் இடம் பெற வாய்ப்பே இல்லை.இங்கு விளம்பரங்களுக்குத்தான் நிகழ்ச்சிகளே அன்றி நிகழ்ச்சிகளுக்காக விளம்பரங்கள் அல்ல.நாட்டின் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தையையும்(பெருந்தன்மையுடன்தான்) வழங்குவது பெப்சியாகவோ அல்லது யூனிநாராக இருக்கும்.எனவே அதிகமான சந்தையைக்கொண்ட(பார்வையாளர்களைக்கொண்ட)ஒரு நிகழ்ச்சிக்குத்தான் கம்பெனிகள் விளம்பரதாரர்களாக இருப்பர்.
எனவே முழுமையாக செய்தி உட்பட விளம்பரதாரர்களுக்கு ஏற்பவே வடிவமைக்கப்படும்.என்வே சமூக சிந்தனையாவது பெரியார் மொழியில் சொன்னால் வெங்காயாமாவது,இங்கு எப்போதும் இலாப நோக்கம்தான்,விளம்பரத்திற்குத்தான்.
விளம்பரங்களுக்கான கட்டணம் வினாடிக்கு இவ்வளவு எனவும் ஒரு நாளில் பார்வையாளர்களின் எண்ணிக்கையையொட்டி பிரைம் டைம் பாதி பிரைம் டைம் கால் பிரைம் டைம் (மாலைநேரம்,பிற்பகல் மற்றும் காலை நேரம் ) என பிரிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
வலிமையான அரசியல் அதிகார பலத்துடன் முதன்முதலாக தனியார் தொலைக்காட்சியாக களமிறங்கிய சன் டிவியின் இலாபம் பத்தாண்டுகளுக்கு முன்னதாக சில நுறு கோடிகளாக இருந்தது, இப்போது பல ஆயிரம் கோடிகளைத்தாண்டி விட்டது என்பது அனைவருமே அறிந்த ஒன்று.இன்று சன் டிவி நெட்வொர்க்கில் 95 மில்லியன் குடும்பங்களை(ஒன்பதரைக்கோடி) சென்றடையும் 20 சேனல்கள்உள்ளன.
வெளிநாடுகளில் வாழும் தென்னிந்தியர்களைக் அதிகம் கொண்டஅமெரிக்கா,கனடா,சிங்கப்பூர், மற்றும் மலேசியாஇலங்கை,தென்னாப்பிரிக்கா,ஆஸ்திரேலியா,நியூசிலாந்து போன்ற 27 நாடுகளிலும் சன் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பு எட்டுகிறது. 45 எஃஎம் வானொலி நிலையங்களை வைத்துள்ளனர்.கூட்டாக 1.2 மில்லியன் விற்பனை கொண்ட 2 நாளிதழ்கள்,4 பருவ இதழ்கள்,5.5 மில்லியன் சந்தாதாரர்களை எட்டும் சன் டைரக்ட் டி.டி.எச் சேவை,கேபிள் சந்தையில் மூன்றில் இரண்டு பங்கை கையில் வைத்திருக்கும் 90 கோடி ரூபாய் புரளும் சுமங்கிலி கேபிள் விஷன் என்ற கிளை நிறுவனம்.இவ்வளவு நிறுவனங்களோடு 2007 முதல் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத் தொழிலும் இறங்கியுள்ளது. (திரைப்படத்துறையிலுள்ள ஆதிக்கம் குறித்து பின்னர் விரிவாகக் காண்போம்)சன் நெட் வொர்க்கின் மொத்த மதிப்பு ரூ 1000 கோடி.
மும்பை பங்குச் சந்தை இணையதளம் அளித்துள்ள தகவலின்படி
சன் நெட் வொர்க்கின் மொத்த பங்குகளின் இன்றைய சந்தை மதிப்பு ரூபாய் 18 ஆயிரத்து 307 கோடி.சன் குழுமத்தின் ஒரு பங்கின் மதிப்பு ரூபாய் 464 ஆகும்.சமீபத்தில் விமானப் போக்குவரத்து துறையிலும் நுழைந்திருக்கிறது.ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் சுமார் 37.7 விழுக்காடு பங்குகளை வாங்கி இருக்கிறது.இன்று இந்திய அளவில் அதிலும் தனியார் துறையில் அதிக சம்பளம் ஈட்டும் மூத்த நிர்வாகி கலாநிதி மாறன்தான்.அவரது சம்பளம் ரூ 37 கோடிரூபாய் ஆகும்.
ஆக,ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது சன் நெட் வொர்க் இன்று ஒரு பிரம்மாண்டமான பன்னாட்டுக்கம்பெனியாக வளர்ந்துள்ளது என்பது வெளிப்படையானது. சன் டிவி நெட்வொர்க் பன்னாட்டு மூலதனத்தின் உறுதியான கூட்டாளியாக அதன் பண்பாட்டு ஆன்மாவாகவும் செயல்படுகிறது.அது மக்களின் பார்வையில் அவர்களுக்கு சாதகமாக அதிலும் தமிழர்களுக்காக நிகழ்ச்சிகள் தயாரிக்கும் என்று நினைப்பதும் எதிர்பார்ப்பதும் எவ்வளவு பாமரத்தனமானது?
கோடிக்கணக்கான பணத்தை இலாபமாக ஈட்டும் சன் டிவி நெட்வொர்க் என்ற பன்னாட்டுக் கம்பெனியின் உண்மை முகத்தை அதாவது அதன் பண்பாட்டு முகத்தை காண்போம்.
உலகமயமாக்கலின் கொள்கைகளின் உருட்டு திரட்டு வடிவமாகவும் பன்னாட்டுக்கம்பெனிகளின் தேவைகளுக்காகவே பிறப்பெடுத்ததுமான சன் டிவியின் பண்பாட்டு கருத்தியல் மிகவும் கொடூரமானது.அதன் மொழியிலேயே கூற வேண்டுமானால் உலக தொலைக்காட்சி வரலாற்றில் தமிழகத்தில் முதன் முறையாக நிறவெறியையும் மறைமுகமாக நுட்பமான சாதியத்தையும் மேட்டுக்குடித்தன திமிரையும் முன்வைத்தது.
சன் டிவி நிகழ்ச்சிகள் அனைத்தும் முழுமையான பொழுது போக்கு சார்ந்த நிகழ்ச்சிகளாக உள்ளன.அதில் 80 விழுக்காடு சினிமா சார்ந்தவை. மீதி யுள்ளவை நகரஞ்சார்ந்த மேட்டுக்குடி மக்களினால் தயாரிக்கப்பட்டு அவர்களின் பார்வையில் முன் வைக்கப்பட்டன. 20 ஆண்டுகளுக்கு முன்னதாக ஊடகம் என்பது வெறும் பொழுது போக்கிற்கான விடயம் அல்ல .ஊடகத்தின் மூலமாக நல்ல கருத்துகளை கூறி சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மிக சொற்பமான அளவில் அரசல் புரசலாக வாதங்கள் நடந்து வந்தன.சன் டிவி வந்த பின்னர் அந்த பார்வையையே முற்றிலுமாக ஒழித்து கட்டி ஊடகம் என்பதை மாற்றுக்கேள்விக்கே இடமில்லாத ஒரு பொழுது போக்கு தொழிற்சாலையாக மாற்றியது.
இங்கு பெரும்பான்மையான மக்களுக்கு நிகழ்ச்சிகளும் இல்லை ,நிகழ்ச்சிகளில் இடமுமில்லை.இங்கு சிகப்பழகும் வெள்ளைத்தோலும் கவர்ச்சியும்தான் இடம்பெறுவதற்கான தகுதி என்ற நிறவெறி இனவெறி மற்றும் சாதியம் கலந்த பார்வையே உள்ளது .வெயிலில் உழைத்து கருத்துப்போன முகங்களுக்கு இங்கு இடமில்லை.
கிராமங்களில் மிகப்பெரிய அளவில் மரணங்கள் நிகழ்ந்தால் அல்லது விசித்திரமான மூட நம்பிக்கைகள் கடைபிடிக்கப்பட்டாலோதான் கிராமப்புற மனிதர்கள் சின்னத்திரை வெளிச்சத்திற்கு வருவார்கள். கருப்பு நிறத்தை உடையவர்கள் சாதாரண தோற்றம் உடையவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களால் சாதனைகளை படைத்த பெரிய திரை உலகில் நடைபெற்ற எந்த மாற்றங்கள் சின்னத்திரை உலகில் நுழையக்கூட முடியவில்லை.
நிறத்தில் அப்படி ஒரு பாகுபாடு காட்டப்படும்போது சாதி யப்பாகுபாடு என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.துப்புரவுத் தொழிலாளி நிலைக்கு மேல் எந்த தலித் மக்களுக்கும் இடம் இருந்ததில்லை.அவர்கள் நிகழ்ச்சி தயாரிப்பில் இடம் பெறுவது நினைத்து பார்க்க முடியாதது.
25 ஆண்டுகளுக்கு முன்னதாக வார இதழ்களிலும் மாத இதழ்களிலும் அட்டைபடங்களில் ஆபாசப்படங்கள் போட்டதற்கு எதிர்ப்பு போராட்டஙகள் நடத்தப்பட்டு அப்பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.ஆனால் உலகமயமாக்கல் அமல்படுத்தப்பட்ட பின்னர் அப்போராட்டங்கள் இல்லை .இந்த சூழ்நிலையில் அந்த ஆபாசங்களை விட 100 மடங்கு ஆபாசங்களை காட்சி படங்களாக காண்பித்தது.சில ஆண்டுகளுக்கு முன்னதாக துணிச்சலாக மிட் நைட் மசாலா என்ற பெயரில் ஆபாசங்களை அரங்கேற்றியது.
இன்று அதை விட பல மடங்கில் ஆபாச நடனங்களுடன் திரைப்பட விழாக்களை ஒளிபரப்பி வருகிறது.பெண்களை போகப்பொருளாக பாவிக்கும் சன் டிவியின் கொள்கை எப்போதும் எந்த சூழ்நிலையிலும் மாறியதே இல்லை. எப்படியும் வாரம் ஒரு திரைவிழாவோ பாராட்டு விழா அல்லது முதல்வருக்கு பாராட்டு விழா நடந்தால் அதன் ஒளிபரப்பு உரிமையை பெறுவதில் கலைஞர் டிவிற்கும் சன் டிவிக்கும் கடும்போட்டியே நடைபெறுகிறது.
கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு போட்டியாக ஆடவரெல்லாம் ஆட வரலாம் என்ற வெளிப்படையான ஆடை அவிழ்ப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பி கடும் கண்டனத்திற்குள்ளாகி அந்நிகழ்ச்சியை கைவிட்டது நினைவுக்கு வரலாம். சன் டிவியின் ஆபாசக் கலாச்சாரத் தொழிற்சாலையின் உற்பத்தியை பற்றி மக்களுக்கு இன்னும் விரிவாக கூற வேண்டிய அவசியமே இல்லை.நித்யானந்த விவகாரம் குறித்த அதன் நீலப்பட ஒளிபரப்பு ஒன்றே போதும்.
சரி,பெரும்பான்மையான மக்களான விவசாயிகள் ,தொழிலாளர்கள் தலித் மக்கள் ஆகியோருக்கு சன் டிவியில் இடம் பெறுவதில்லை என்றால் யார் தான் அதில் இடம் பெறுகிறார்கள் ? வேறு யார் .நடிக நடிகைகள்தான்அதில் சந்தேகமே வேண்டாம்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏறக்குறைய சன் டிவியின் தொடக்க நாளிலிருந்தே எனலாம்,அது தீபாவளி,பொங்கல் கிருத்துமஸ்(ரமலானுக்கும் பக்ரீத்திற்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது வேறுவிடயம்)சுதந்திர நாளாக இருக்கட்டும் அல்லது எந்த நாளாக இருந்தாலும் காலையில் எழுந்தவுடன் தமிழ் மக்கள் தரிசனம் செய்வது ஏதாவது சினிமாக்காராக இருப்பார்கள்.ஒரு நாடு என்றோ மக்கள் என்றோ சினிமாக்காரர்களைத்தான் சன் டிவி கருதுகிறது.ஆதாரம் வேண்டுமென்றால் நீங்களே சோதித்து பாருங்கள். குடியரசு தினத்தன்று குடியரசு நாளின் பெருமை குறித்து அசினோ நயன்தாரவோ பேட்டி அளித்து கொண்டிருப்பார்கள்அதே போல தமிழர் திருநாளன்று தமிழ் மொழியின் சிறப்பு குறித்து தமன்னா கலந்துரையாடிக் கொண்டிருப்பார்.  

நன்றி: நோம் சாம்ஸ்கி ,தமிழ்மணம்

Wednesday, December 15, 2010

தொலைபேசி எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது?

 இந்திய அரசியலில் தொலைபே ஒட்டுக் கேட்பது  தொடர்பாக தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் இவ்வேளையில் அது தொடர்பான ஒரு தொழில் நுட்ப விடயங்கள் தாங்கி வரும் இக்கட்டுரையை, கட்டுரையாளர் ரவிச்சந்திரன் அவர்களுக்கான  நன்றிகளுடன் இங்கே தருகின்றோம்.
தொலைபேசி எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது?

இந்திய அரசியலை தற்போது மையம் கொண்டு தாக்கி வரும் புயல் ஒட்டு கேட்கப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுகள். இதனால் வெளிவரும் பல அரசியல் தகிடு தத்தங்கள். நான் அரசியல் தெரியாத ஒரு அப்பாவி:((( ஆனால் இந்த தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றி நன்றாக தெரியும். பல தொலை பேசி/செல்பேசி நிறுவனங்களுக்கு இந்த ஒட்டு கேட்கும் தொழில் நுட்ப கட்டமைப்பை வடிவமைத்து கொடுத்திருக்கிறேன். தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றிய சிறிய விளக்கம்.


Lawful Interception (LI) Gߣx |õmi¾ÒÍ \¢÷uP |£ºPÎß öuõø»÷£] ÷£a_PøÍ Jmk ÷Pm£uØPõP ITU (International Telecommunication Union & http://www.itu.int ) ©ØÖ® ANSI (American National Standards Institute & http://www.ansi.org ) ÷£õßÓ {¯© Aø©¨¦PÍõÀ HØ£kzu¨£mh uPÁÀ £Ô©õØÓ Áøµ¯øÓ.  


இதன்படி ஒவ்வொரு தொலைபேசி/செல்பேசி நிறுவனத்தின் கட்டமைப்பிலுள்ள தொலைபேசியை எப்படி ஒட்டு கேட்க வேண்டும் அதற்கான தேவையான கட்டமைப்பு தொழில்நுட்பம் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப் படும் தொழில்நுட்பம் என்பதால் மிகக் கடுமையான பலத்த பாதுகாப்பு வரையறைகள் இந்த தொழில்நுட்பத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.



நாம் தொலைபேசி வழியாக பேசும் பேச்சுகள் தொலைபேசி கட்டமைப்பிலுள்ள பல விசைமாற்றிகள் (Switches) வழியாக கன நேரத்தில் கடத்தி செல்லப்படுகின்றன.
விசைமாற்றியில் ஒரு கொக்கி போட்டு பேசுபவர்கள் இருவருக்கும் தெரியாத வகையில் விசைமாற்றி அவர்கள் பேசுவதை அப்படியே ஒரு காப்பி எடுத்து CBI, RAW  போன்ற உளவுத்துறை நிறுவனத்திலிருக்கும்  LEMF (Law Enforcement Monitoring Facility)  என்றழைக்கப்டும் ஒட்டு கேட்கும் நிலையங்களுகு அனுப்பி வைத்து விடும்.
சற்று விரிவாக பார்க்கலாம்...

உளவுத்துறை ஒருவரை சந்தேகத்திற்குரிய நபர் என்று அடையாளம் கண்டு கொண்டவுடன் அவ்ருடைய தொலைபேசியை ஒட்டுகேட்க வேண்டும் என்ற வாரண்டை உளவுத்துறை அதிகாரி LEMF  செண்டரில் உள்ள கம்யூட்டரில் பதிவு செய்வார்.



உடனே அந்த தகவல் அந்த சந்தேக நபரின் தொலைபேசி நிறுவனதிலுள்ள  (IMC (Interception Management Centre) ) எனப்படும் கம்யூட்ருக்கு HI-1 (Hand Over Interface-1)  என்ற தகவல் பாதை வழியாக வந்து சேரும். அதை நிர்வாகம் செய்யும் அதிகாரி யார்? ஏன்? என்ற எந்த கேள்வியும் கேட்காமல் உடனே அந்த தொலைபேசி எண்ணை ஒட்டு கேட்க ஐMஇயில் பதிவு செய்து விடுவார்.

இந்த ஐMஇயை ஆபரேட் செய்வதற்கு பலத்த பாதுகாப்பு வரையறைகள் உள்ளன. அவ்வளவு சுலபமாக இதை யாரும் ஹேக் செய்ய முடியாது. ஐMஇ கம்யூட்டரை நிர்வகிக்க ஐகூக் மற்றும் அNகுஐ நியமனப்படி தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை தொலைபேசி நிறுவணம் பின்பற்றா விட்டால் அதன் லைசன்ஸ் ரத்து செய்யப் பட்டு விடும். இது தெரியாமல்தான் நீரா ராடியா தன்னுடைய நிறுவனமான டாடா நிறுவன செல்பேசி வழியே பேசினால் யாரும் ஒட்டு கேட்க மாட்டார்கள் என்ற தப்புக் கணக்கு போட்டு “வல்லவனுக்கு வல்லவன்” இந்த உலகத்தில் உண்டு என்ற உண்மையை உணராமல் மாட்டிக் கொண்டார்:( ஒரு சில முறை தப்பு செய்து மாட்டிக்கொள்ளவில்லை என்றால் நாம் செய்யும் தப்பை யாராலும் கண்டு கொள்ள முடியாது என்ற அகம்பாவம் மனிதனுக்கு வந்து விடுகிறது. எனவே தொடர்ந்து தப்புகளை செய்கிறான். ஆனால்... “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு கொள்வான்” இதுதான் உண்மை.Law of Average!


சந்தேக நபர் கால் செய்யும்போதோ அல்லது அவருக்கு கால் வரும்போதோ அந்த தொலைபேசி எண் ஒரு சந்தேகப் பேர்வழியின் எண் என்று விசைமாற்றி (Switch)க்கு தெரிந்து விடும். உடனே அவர் யாருக்கு போன் செய்கிறார் அல்லது யாரிடமிருந்து போன் வருகிறது என்ற தகவல்களை  HI-2 (Hand Over Interface-2)  என்ற தகவல் பாதை வழியாக உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF செண்டருக்கு அனுப்பி விடும். உடனே... பழைய படத்தில் வில்லன் நம்பியார், பி.ஸ்.வீரப்பா அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் சிவப்பு கலர் பல்பில் லைட் எரிவது போல் ஃஉMஊ செண்டரில் உட்கார்ந்திருக்கும் உளவுத்துறை அதிகாரியின் மேசையில் சிவப்பு கலர் அலராம் அடிக்க ஆரம்பித்து விடும். அவர் ஒரு ஹெட்போனை மாட்டிக்கொண்டு ரெடியாக உட்கார்ந்து விடுவார்.

இப்போது இருவரின் தொலைபேச்சுகளை விசைமாற்றி கொக்கி போட்டு அப்படியே  LEMF  செண்டருக்கு HI-3 (Hand Over Interface-3)  என்ற தகவல் பாதை வழியாக அனுப்பி வைத்து விடும்.இந்த பேச்சுகள்  LEMF   செண்டரிலுள்ள ஹார்டு டிஸ்க்கில் MP-3 பைலாக சேமிக்க படும். ஆனால்.. நம் ஊடகங்கள் (Media) டேப் என்று சொல்லி ஏதோ டேப்பில்தான் ரெக்கார்ட் செய்யப்ப்டுகிறது என்று நம் காதில் பூ சுற்றிக் கொண்டுள்ளார்கள்:)       இந்த காலத்தில் யார் டேப் பயன்படுத்துகிறார்கள்? டேப்பில் பதிவு செய்தல் ஒரு காயலான் கடை தொழில்நுட்பம்:)))
தேவைப்ப்ட்டால் இந்த பேச்சுகளை  CBI, RAW, Economic Enforcement, State Police போன்ற பல உளவுத்துறை நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அந்தந்த உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF  செண்டருக்கு அனுப்பி வைக்க முடியும். எனவே சந்தேக நபர் பேசுவதை பல உளவுத்துறை நிறுவனங்கள் ஒரே சமயத்தில் கண்காணிக்க முடியும்.
தொலைபேசி பேச்சுகள் மட்டுமன்றி சந்தேக நபர்களின் மின்னஞ்சல் ((E-mail), ), மின் அரட்டை (Chat) போன்றவைகளையும் இதே தொழில் நுட்ப அடிப்படையில் ஒட்டு கேட்கலாம்.
போனில் பேசும்போது பார்த்து சூதனமா பேசுங்க... சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளாதீர்கள்:)))

Tuesday, October 26, 2010

வெறிநாய் குதறலின்
வேட்டைக் களத்தில்
அம்மா என்றலறி
உயிர்விட்ட
எம் தமிழ் உறவுகள்

இது மனித உரிமை மீறலல்ல
என்று
அந்தகர்கள் கூட
அருவெருக்க சொல்லமாட்டார்கள்

ஐ.நா.
என்ன சொல்லும்?

உலகெல்லாம்
சோறு தேடியோடி
உணர்விழந்தாபோனான் தமிழன்

உரக்கக்குரல் கொடுக்க
உரிமை நிலை நாட்ட
ஒரு தமிழன் எங்கே?



நன்றி 
வித்திய  ஷங்கர் 
குவியலாய்
குண்டு துளைத்த
உடல்கள்
குழந்தை முதியவர்
ஆண் பெண்
பேதம் பாராமல் பாய்ந்த
சிங்கள அரசின்
சீற்றம்
இலங்கை
இறுதிப்போரில்
எம் தமிழர்
உயிர் பிரிந்த
இழிநிலை இது

Friday, October 8, 2010

காமன்வெல்த் கலக்கும் ஈழத் தமிழர்

 ஜிம்னாஸ்டிக்ஸில் 2 தங்கம் வென்றார்.
 புதுடெல்லி,அக்.9 
டெல்லியில்  நடைபெறும்  19வது    காமன்வெல்த் போட்டியில்  ஈழத் தமிழர் பிரஷாந்த் செல்லத்துரை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சார்பாக  விளையாடி தங்கம் வென்றுள்ளார். செல்லத்துரை ஆஸ்திரேலிய ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள முக்கிய வீரர் ஆவார். ஆஸ்திரேலியாவுக்காக டெல்லி காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்று கொடுத்துள்ளார். குதிரை வீரன் என்று ஆஸ்திரேலிய வீரர்களால் செல்லமாக அழைக்கப்படும் செல்லத்துரை சரியான உயரம். இதனால்தான் இந்தப் பெயரை வைத்துள்ளனராம் சக ஆஸ்திரேலிய வீரர்கள். காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்காக ஈழத் தமிழர் ஒருவர் கலக்கிக் கொண்டிருப்பது இனப்போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். இவரது பெயர் பிரஷாந்த் செல்லத்துரை. பூர்வீகம் ஈழம். இவரது குடும்பத்தினர் இலங்கையில்  இனக் கலவரம் பெரிதாக வெடித்த 1983ம் ஆண்டு அங்கிருந்து இடம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்றனர். தற்போது சிட்னியில் வசித்து வருகிறது செல்லத்துரையின் குடும்பம்.24 வயதேயாகும் செல்லத்துரை ரேடியாலஜி மாணவர் ஆவார். ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்தது செல்லத்துரைக்கு எளிதாக இருக்கவில்லையாம். கடும் போராட்டங்கள், கடின பயிற்சி , கடுமையான முயற்சிக்குப் பின்புதான் அணியில் இடம் கிடைத்ததாம்.  இவரது இந்த முயற்சியின் பயனாக காமன்வெல்த் போட்டியின் இரு போட்டிப் பிரிவுகளில் கிட்டத்தட்ட 15,000 புள்ளிகள் வரை பெற்றள்ளார் . ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் இந்த அளவுக்கு அதிக பட்ச புள்ளிகள் கிடைப்பது மிகவும் அரிதான விஷயம். அந்த அளவில் செல்லத்துரை ஒரு சாதனையே படைத்துள்ளார்.  கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த குழுப் போட்டியில் கிடைத்த  ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த  முதல் காமன்வெல்த் தங்கம் கிடைத்தது.இந்த அணியில் செல்லத்துரை முக்கியமான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.  இதேபோல செல்லத்துரை இன்னொரு தங்கத்தையும் வென்றுள்ளார். இவரது இந்த வெற்றி இன உரிமை போராட்டத்தில் காயப்பட்டு போயுள்ள ஓட்டு மொத்த தமிழர்களுக்கும்  ஆறுதல் அளிக்கலாம்.

Sunday, October 3, 2010

காமன்வெல்த் வரலாறு ஒரு பார்வை

சென்னை,அக்.4
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளின் கூட்டமைப்பே காமன்வெல்த் நாடுகள் எனப்படுகின்றன. இந்த நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பே காமன்வெல்த் அமைப்பாகும். காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைமையகம் லண்டனில் உள்ளது. இப்போட்டிகளை நிர்வகிக்க, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. போட்டிக்கான விதிமுறைகள், போட்டியில் இடம்பெறும் விளையாட்டுகள், போட்டி நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பொறுப்புகளையும் இந்த சம்மேளனம் கவனித்து வருகிறது. காமன்வெல்த் கூட்டமைப்பில் இப்போது 54 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால் வழக்கமாக காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெறும் அணிகள் மொத்தம் 71. பிரிட்டிஷ் ஆட்சிக்கு உள்பட்ட ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகள்  தனி அணியை அனுப்புகின்றன. இதேபோல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு உள்பட்ட பல சிறிய பிரதேசங்களும் தனி அணியை அனுப்புவதால் 71 அணிகள் இதில் இடம்பெற்றுள்ளன.  இந்த நாடுகள் பங்குபெறும் விளையாட்டுப் போட்டிகளே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளாகும். 

காமன்வெல்த்திற்கான விதை
காமன்வெல்த் போட்டிகள் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான முதல் விதையை விதைத்தவர் ஆஸ்ட்லே கூப்பர். 1891ம் ஆண்டு பத்திரிகை ஒன்றில் அவர் எழுதிய கட்டுரையில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ள நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் புரிந்துணர்வை அதிகரிக்கவும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம் என்று ஆலோசனை கூறியிருந்தார். அதன் பின்னர் 1911ம் ஆண்டு மன்னர் ஜார்ஜ் பதவியேற்ற போது அதைக் கொண்டாடும் விதமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலனி நாடுகளான ஆஸ்திரேலியா, தென்னாப்பரிக்கா, கனடா ஆகிய நாடுகள் பங்கேற்றன.

காமன் வெல்த் பெயர்கள்:
காமன்வெல்த் போட்டி பல பெயர் மாற்றங்களை கொண்டு நடத்தப்பட்டது. 1930ம் ஆண்டு முதல் 1950 வரை நடந்த நான்கு போட்டிகள், பிரிட்டிஷ் பேரரசு விளையாட்டுகள் என அழைக்கப்பட்டன. அதற்குப் பின் 1954 முதல் 1966 வரையிலான போட்டிகள், பிரிட்டிஷ் பேரரசு மற்றும் காமன்வெல்த் போட்டிகள் என அழைக்கப்பட்டன.
1970 மற்றும் 1974ம் ஆண்டு நடந்த இரு போட்டிகள், பரிட்டிஷ் காமன் வெல்த் விளையாட்டுகள் என அழைக்கப்பட்டன. 1978ம் ஆண்டு முதல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என அழைக்கப்படுகிறது.
முதல் போட்டி
பிறகு 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் ஒலிம்பக் போட்டிகள் நடந்தன.  அதில்  கனடா உள்ளிட்ட பரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு உள்பட்ட நாடுகள் பங்கேற்றன. அப்போது கனடா அணியின் மேலாளராக பணியாற்றிய மெல்வில்லே மார்க்ஸ் ராபன்சன்  வீரர்களுக்கு இடையே நட்புணர்வை ஏற்படுத்த காலனி ஆதிக்க நாடுகளுக்கு இடையே நட்பு ரீதியிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டியது அவசியத்தை  உணர்ந்து அதற்கான தீவிர முயற்சி மேற்கொண்டார். அவரது முயற்சியின் காரணமாக முதலாவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930ம் ஆண்டு நடைபெற்றது.
இப்போட்டி, கனடாவின் ஹாமில்டனில் 1930 ஆம் ஆண்டு  நடந்தது.
மொத்தம் 11 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றன. தடகளம், குத்துச் சண்டை, லான் பால், படகு வலித்தல், நீச்சல் மற்றும் மல்யுத்தம் உள்ளிட்ட ஆறு போட்டிகள் மட்டுமே இதில் நடத்தப்பட்டது. ஆண்கள் தான் அனைத்திலும் பங்கேற்றனர். நீச்சல் போட்டியில் மட்டும் பெண்கள் பங்கேற்றனர். இதில், இங்கிலாந்து 60 பதக்கங்களுடன் (25 தங்கம், 22 வெள்ளி, 13 வெண்கலம்) முதலிடத்தை தட்டிச் சென்றது.

இடம் பெறும் விளையாட்டுகள்: 
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில்  35 விளையாட்டுகள் அங்கீகரிக்கப்பட்டடுள்ளன. எனினும் இவை அனைத்தும் போட்டிகளில் இடம்பெறுவதில்லை. டெல்லியில் நடைபெறும்  போட்டிகளில் மொத்தம் 17 விளையாட்டுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்த முறை டென்னிஸ் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

முதன் முதலாக இந்தியா:

1934ம் ஆண்டு  லண்டனில் நடந்த 2 வது காமன்வெல்த் போட்டியில்தான்  இந்தியா முதன் முறையாக பங்கேற்றது.  
அதில் இந்திய மல்யுத்த வீரர் ரசித் அன்வர் 74 கி.கி வெல்டர் வெயிட் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார். இது தான் இந்தியா, காமன்வெல்த் போட்டியில் கைப்பற்றிய முதல் பதக்கமாகும். 
இந்தியாவின் முதல் தங்கம் : 
கடந்த 1958 ம் ஆண்டு வேல்சில் நடந்த காமன்வெல்த் போட்டியில், இந்தியாவின் மில்கா சிங் (400 மீ. ஓட்டம்), லீலா ராம் சங்வான் (மல்யுத்தம், ஹெவிவெயிட்) ஆகியோர்  காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கு கொண்டு தங்கம் வென்று அசத்தினர்.    
ஆசிய கண்டத்தில் காமன் வெல்த் :
முதன் முதலாக ஆசிய கண்டத்தில் காமன்வெல்த் போட்டிகள் கடந்த 1998ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூரில் போட்டிகள் நடத்தப்பட்டன. 
இப்படிப்பட்ட பல வரலாறுகளை கொண்ட காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் பலத்த ஆதரவு மற்றும் எதிர்ப்புகளுக்கிடையே முதன் முதலாக நடைபெறுகிறது.

Thursday, September 23, 2010

தாஷ்கன்ட் ஓபன் இரட்டையர் காலிறுதியில் சானியா ஜோடி



தாஷ்கன்ட்,செப்.24 தாஷ்கன்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் காலிறுதிச் சுற்றுக்கு சானியா மிர்ஸா, இத்தாலியின் மரியா எலினா கேமரின் ஜோடி தகுதி பெற்றுள்ளது.
மகளிர் ஒற்றையர் சுற்றில் சானியா முதல் சுற்றிலேயே தோற்றுள்ள நிலையில் தற்போது இரட்டையர் பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சானியாகேமரின் ஜோடி, உக்ரைன் சகோதரிகளான லியும்டிலாநதியா கிசோனக் ஜோடியை 62, 63 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில், அலெக்சான்ட்ரா டுல்கெரு, மக்தலீனா ரிபேரிகோவா ஜோடியை சந்திக்கவுள்ளது சானியா இணை.

பந்துவீச்சு பயிற்சியில் மாற்றம் தேவை வெங்கடேஷ் பிரசாத்


பெங்களுர்,செப்.24
இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு பயிற்சியில் மாற்றம் தேவை என இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
இது அவர் கூறியது வருமாறு:
இந்திய பந்து வீச்சாளர்களின் அணுகுமுறையில் பிரச்சனை உள்ளது, அதுதான் இன்றைய பந்து வீச்சு பலவீனங்களுக்குக் காரணம். பந்து வீச்சாளர்கள் தினமும் காலையில் உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்லவேண்டும், வலையில் நீண்ட நேரம் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபடவேண்டும். வலையில் 20 நிமிடங்களுக்குப் பந்து வீசி விட்டு மேட்சில் வந்து 20 ஓவர்களை வீச முடியாது. வலைப் பயிற்சியில் பந்து வீச்சு பயிற்சியைப் பார்த்து நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன், இப்போதெல்லாம் நிறைய பயிற்சி அளிக்கப்படுகிறது, இருந்தும் பந்து வீச்சாளரகளிடம் கட்டுப்பாடு இல்லை. வீரர்கள் தங்கள் அணிக்கும், பயிற்சியாளருக்கும் மிக முக்கியமாக தங்களுக்கு தாங்களே நேர்மையாக இருக்க வேண்டும், இல்லையெனில் மாற்றங்களைக் காண முடியாது.இஷாந்த் ஷர்மாவை பயிற்சியில் ஈடுபடுவதில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் . தற்போது அவரது பந்து வீச்சில் மணிக்கட்டின் நிலை சரியாக அமையவில்லை. விரல்களும் பந்தின் தையல் மீது சரியாக உட்காரவில்லை.மாறாக மணிக்கட்டை சுழற்றுகிறார்.இதனால்தான் அவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது .
இதேபோல் பிரவீண் குமாரின் மணிக்கட்டு நிலை சிறப்பாக உள்ளது, அவரை டெஸ்ட் போட்டியில் தேர்வுசெய்வது அவசியம் என்று கூறியுள்ளார்.

சாம்பியன் லீக் அரையிறுதியில் இன்று சென்னைபெங்களூர் மோதல்

போர்ட் எலிசபெத், செப். 24
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் 20/20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றது.
போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வாரியர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 136 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹஸ்ஸி 50 ரன்களை குவித்தார். கேப்டன் தோனி 31 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் ஆடினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வாரியர்ஸ் அணி வீரர்கள் ஒற்றை ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் வாரியர்ஸ் அணி இருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முரளிதரனின் சிறப்பான பந்துவீச்சால் வாரியர்ஸ் அணியின் அனைத்து விக்கெட்டுகளும் பறிபோனது. இதனையடுத்து பத்து ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஏ'' பிரிவில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரன்ரேட் அடிப்படையில் முதலிடம் நீக்கம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
வாரியர்ஸ் (தென்னாப்பிரிக்கா), விக்டோரியா (ஆஸ்திரேலியா) ஆகிய 3 அணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் தலா 6 புள்ளிகள் பெற்றுள்ளன. சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நிகர ரன்ரேட் +2.050 ஆகும். வாரியர்ஸ் அணியின் ரன்ரேட் +0.588 ஆகும். விக்டோரியாவின் ரன்ரேட் +0.366.
இந்நிலையில் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெறும். நாளை நடைபெறும் 2வது அரை யிறுதியில் ""பி'' பிரிவில் முதலிடத்தை பிடித்த சவுத் ஆஸ்திரேலியா அணியும் ""ஏ'' பிரிவில் 2வது இடத்தை பிடித்த வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. அதை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, இரண்டு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றன. ஒரு பிரிவில் இடம் பெற்ற அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதி அதன் அடிப்படையில் லீக் போட்டியின் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் மோதும் இரு அணிகளும் சமபலம் கொண்டுள்ளதால் ஆட்டத்தில் பரபரப்பு பஞ்சமிருக்காது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் ஒப்பிடும் போது சென்னை சற்று பின்தங்கியுள்ளதாகத் தான் தெரிகிறது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் டிராவிட், கோலி,உத்தப்பா,மனிஸ் பான்டே, ரோஸ் டெய்லர் ,கேமருன் ஓயிட் என படை நீளுகிறது. சென்னை அணியில் ஹசி,விஜய் மட்டுமே தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருகின்றனர். மற்றவர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் சென்னை அணியால் இறுதி போட்டிக்கு செல்ல முடியும். இதே போல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பவுலிங் தரவரிசையில் டேல் ஸ்டெயின்,பிரவின் குமார்,வினய் குமார் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். இவர்களுக்கு பக்க பலமாக அணித் தலைவர் கும்ப்ளேவும் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். பெங்களூர் அணியைப் போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் வேகப்பந்து வீச்சில் போலிங்கரை தவிர யாரும் சிறப்பாக பந்து வீச்சில் சரியாக செயல்படவில்லை. பந்துவீச்சு ,பேட்டிங் ஆகிய இரண்டு துறைகளிலும் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டால் மட்டும் தான் பெங்களூர் போன்ற சிறந்த அணியை வெல்ல முடியும். இந்நிலையில் சென்னை அணிக்கு சற்று ஆறுதலாக காயம் காரணமாக காலிஸ் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆடமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது.

Wednesday, September 22, 2010

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கரைக்க அரபிக் கடலை நோக்கி செல்லும் பக்தர்கள்

சர்வதேச போட்டிகளிலிருந்து


சைடுபாட்டம் ஓய்வு
லண்டன்,செப்.23
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான 32 வயதுடைய சைடு பாட்டம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த 2001ல் லார்ட்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
இதுவரை இவர் 22 டெஸ்ட் போட்டிகளில் 313 ரன்களையும், 79 விக்கெட்டுகளையும், 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 133 ஓட்டங்களையும், 29 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.மேலும் 8 சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் பந்து வீச்சில் 23 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இறுதியாக இவர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் விளையாடினார். தனது ஓய்வு குறித்து கூறிய சைட்பொட்டம்:
கடந்த ஒன்பது ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடியதை மிகப் பெருமையாக கருதுகிறேன். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற சரியான நேரம் வந்ததால், ஓய்வு பெறுகிறேன்.
நியூசிலாந்துக்கு எதிராக முதலாவது ஹாட்ரிக் விக்கெட் பெற்றது மற்றும் மேற்கிந்திய தீவில் நடந்த இருபது20 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் விளையாடியது உள்ளிட்டவை, கிரிக்கெட் அரங்கில் எனது மறக்க முடியாத நினைவுகளாக கருதுகிறேன். எதிர்வரும் 2011இல் நடக்கவுள்ள ஐ.பி.எல்., தொடரில் விளையாட விருப்பமுள்ளதாக கூறினார்.

கால்பந்து போட்டியில் மீண்டும் கோல்டன் கோல்


புதுடெல்லி, செப்.23
உலக கால்பந்தின் வழக்கமான நடைமுறையில் இருந்த கோல்டன் கோல் எனும் நடைமுறை மீண்டும் அமல்படுத்த சர்வதேச கால்பந்து அமைப்பு திட்டமிட்டு வருகிறது. கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு அந்த நேரத்தில் எந்த அணி கோல் அடிக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதற்கு கோல் டன் கோல் எனும் பெயரிடப்பட்டது .முதல் நிமிடத்திலேயே ஒரு கோல் போடப்பட்டாலும் ஆட்டம் முடிவடையும். எதிரணிக்கு போராடும் வாய்ப்பு தரப்படமாட்டாது. இந்த விதிமுறைக்கு உலக அணிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் கடந்த 1998 மற்றும் 2002ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் கோல்டன் கோல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.இந்த விதிமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்டது இத்தாலி அணி என்று அப்போது கூறப்பட்டது.
கடந்த 2002ம் ஆண்டில் நடந்த ஐரோப்பிய கோப்பை கால்பந்தில், இறுதிவரை இத்தாலியும், பிரான்ஸ்ஸும் வந்தன. இதிலும் கோல்டன் கோல் நடைமுறைப்படுத்தப்பட்டு கடைசியில் பிரான்ஸ் 21 என்ற கோல் கணக்கில் ஐரோப்பிய கால் பந்து கோப்பை கைப்பற்றியது. இறுதி ஆட்டம் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இத்தாலி அணி வீரர்கள் விரக்தி அடைந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த விதிமுறை தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள பிபா தலைவர் செப் பிளேட்டர் :
கடந்த 1995 முதல் 2005 வரை நாக் அவுட் சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தால் கோல்டன் கோல் எனும் நடைமுறை அமுலில் இருந்தது.
தற்போது, மீண்டும் கோல்டன் கோல் விதிமுறையை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு வருகிறோம்.தற்போதுள்ள கூடுதல் நேரத்தில் பெரும்பாலான அணிகள் தடுப்பாட்டத்தை மட்டும் கடைப்பிடிக்கின்றன. இதனால் கூடுதல் நேர ஆட்டம் போரடித்துப் போகிறது. இதனால் கூடுதல் நேர ஆட்டத்தை கோல்டன் கோல் விதிமுறையுடன் செயல்படுத்த திட்டமிடப்படுகிறது. அப்போது தான் வீரர்கள் தடுப்பாட்டத்தை கைவிட்டு தாக்குதல் ஆட்டத்தில் இறங்குவார்கள் என்று கூறினார்.

சென்னையில் உலகப் படகுப் போட்டி


சென்னை, செப்.23
உலக நாடுகள் பங்கேற்கும் சர்வதேச அளவிலான பாய்மரப் படகு போட்டி அக்டோ பர் 3ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாய்மரப் படகு சங்கத் தலைவர் அசோக் தக்கார்:
தமிழ்நாடு படகோட்டும் சங்கத்தின் சார்பில் இந்திய சர்வதேச பாய்மரப் படகு போட்டியை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 3 முதல் 10ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
வங்காள விரிகுடா கடலில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, ஈரான், ஸ்லோவேனியா, மியான்மர், ஆகிய நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர். சுற்றுச்சூழல், இயற்கை ஆதார வளங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் இளைஞர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், பாய்மரப் படகு ஓட்டுவதை ஆபத்தாக கருதாமல் ஓர் ஆரோக்கியமான விளையாட்டுப் போட்டியாக பிரபலப்படுத்தும் நோக்கத்துடனும் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன .
இப்போட்டி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 8 வயதிலிருந்து 15 வயது வரை உள்ள போட்டியாளர்களுக்கு "சிங்கிள் ஹாண்டட் ஆப்டிமிஸ்ட்' என்ற படகுகளும், 15 வயதிலிருந்து 20 வயது வரை உள்ள போட்டியாளர்களுக்கு "டபுள் ஹாண்டட்' என்ற படகு வகைகளும் கொடுக்கப்படும்.
மொத்தம் 9 சுற்றுகளாக இந்தப் போட்டிகள் 8 நாள்கள் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றடையும் படகுகளுக்கு இந்திய படகு போட்டிகள் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் சார்பில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று கூறினார்.

குண்டு வெடிப்பு சம்பவ எதிரொலி காமன்வெல்த் புறக்கணித்தனர் இங்கிலாந்து வீரர்கள்

லண்டன்,செப்.23
டெல்லி ஜூம்மா மசூதி அருகே நடந்த வெடிகுண்டு விபத்து சம்பவத்தை தொடர்ந்து காமன்வெல்த் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வீரர் வீராங்கனைகள் விலகியுள்ளனர்.
டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் பல நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் டெல்லி ஜூம்மா மசூதி வெடிகுண்டு விபத்து , போட்டி நடைபெறும் ஜவஹர்லால் விளையாட்டு மைதானத்திற்கு வீரர்கள் செல்ல, மைதானத்தின் தெற்கு வாயிலில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த நடை மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பல வெளிநாட்டு வீரர்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது.
இது பற்றி வீரர்கள் கூறியது வருமாறு:
இங்கிலாந்தின் டிரிபிள் ஜம்ப் வீரர் பிலிப்ஸ் :
எனக்கு குடும்பமும் குழந்தைகளும் உள்ளனர். பதக்கங்களைவிட என்னுடைய பாதுகாப்புதான் முக்கியம். அதேபோல் என்னுடை குழந்தைகளுக்கும் நான் முக்கியம்' என்று கூறி காமன்வெல்த் போட்டியினை புறக்கணித்துள்ளார்.
பிரிட்டன் வீராங்கனைகள் கிறிஸ்டைன் ஓகுருகே, டோப்ரிஸ்கி ஆகியோரும் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.
ஓகுருகே 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நடப்பு காமன்வெல்த் சாம்பியன் ஆவார்.
லிசா டோப்ரிஸ்கே 1500 மீட்டர் ஓட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆவார்.
முன்னதாக, வட்டு எறிதல் சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய வீரர் டேனி சாமுல்ஸ் போட்டியில் கலந்து கொள்வதை தவிர்ப்பதாக அறிவித்துவிட்டார்.

காமன்வெல்த் போட்டி உலக ஊடகங்கள் அச்சம்!

புதுடெல்லி, செப். 23
டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டி குறித்து சர்வதேச ஊடகங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் குறித்து உலக ஊடகங்கள் பதறியபடியே எழுதுகின்றன. குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வெடிகுண்டு விபத்தும், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்த அசம்பாவித நிகழ்வும் குறித்த கேள்வியை சர்வதேச ஊடகங்கள் எழுப்ப காரணங்களாகி விட்டன.
இதுகுறித்து பல்வேறு பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ள கட்டுரையின் சுருக்கம் வருமாறு:

Sunday, August 8, 2010

/கடைசி டெஸ்ட்
425 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது இலங்கை
கொழும்பு,ஆக.5
இந்தியா இலங்கை மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றுவருகிறது.இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேரமுடிவில் 425 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
இரண்டாவது நாள் ஆட்டம்
முதல் நாள் ஆட்டமுடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது இலங்கை அணி.நேற்று சமரவீரா 65 ரன்னுடனும், மேத்ஹீஸ் 26 ரன்னுடனும் தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கி விளையாடினார்கள்.ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இந்த ஜோடி நிதான போக்கை கடைபிடித்தது.இந்த ஜோடிகளின் சீரான ஆட்டத்தால் இலங்கை அணி 88.5 வது ஓவரில் 300 ரன்னை தொட்டது.
ஒஜா அபாரம்
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடியை ஒஜா பிரித்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மேத்யுஸ் 45 ரன்னில் ஒஜாவின் பந்தில் எல்.பி.டபிள்ஹீயு ஆகி வெளியேறினார். மேத்யுஸ் அவுட்டாகியபோது இலங்கை அணியின் ஸ்கோர் 330 ஆக இருந்தது. 5வது விக்கெட்டுக்கு இனைந்த இந்த ஜோடி 89 ரன் எடுத்தது.அடுத்ததாக பிரசன்ன ஜெயவர்த்தனே களமிறங்கினார்.இவரை வந்த சிறிது நேரத்திலேயே பெவிலியனுக்கு அனுப்பினார் ஒஜா.இவரது விக்கெட்டையும் எல்.பி.டபிள்ஹீயு முறையிலேயே ஒஜா கைப்பற்றினார்.
சமரவீரா சதம்
பிரசன்ன ஜெயவர்த்தனே9 ரன்களே எடுத்தார்.அடுத்து ரந்தீவுடன் ஜோடி சேர்ந்த சமரவீரா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 229 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 60வது டெஸ்ட்டு போட்டியில் விளையாடும் அவருக்கு இது 12வது சதம் ஆகும். இந்தியாவுக்கு எதிராக இது 3வது சதமாகும்.சமரவீராவின் ஆட்டத்தால்தான் நேற்று இலங்கை அணியின் ரன்கள் எண்ணிக்கை ஒரளவுக்கு உயர்ந்தது. இந்த இரு ஜோடிகளும் மதிய உணவு இடைவேளையின்வரை ஆட்டமிழக்காமல் சமரவீரா 107 ரன்னுடனும், ரந்தீவ் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 369 ரன் எடுத்திருந்தது.
விரைவாக விழுந்த விக்கெட்டுகள்
அதன் பிறகு களமிறங்கிய இந்த ஜோடியால் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடமுடியவில்லை.ரந்தீவ் 8 ரன்கள் எடுத்திருந்த போது சேவாக் பந்துவீச்சில் டிராவிட்டிம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த வீரர்களை இந்திய வீரர் இஷாந்த சர்மா தனது வேகத்தில் வீழ்த்தினார்.மலிங்கா 4 ரன்னிலும், மெண்டீஸ் 3 ரன்னிலும், வெளிகேந்திரா 4 ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர்.அபாரமாக விளையாடி சமரவீரா 137 ரன்கள் எடுத்து கடைவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.முடிவில் இலங்கை அணி 138 ஓவரில்425 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்தியா தரப்பில் ஓஜா 4 விக்கெட்டுகளும், இசாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், சேவாக் மற்றும் மிஸ்ரா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதில் சங்கக்காரா, மகிளா ஜெயவர்த்தனே , மேத்தீயுஸ், பிரசன்னா ஜெயவர்த்தனே ஆகியோர் ஒஜாவின் சுழலில் சிக்கினார்கள்.
சேவாக் அபாரம்
இதன் பிறகு இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடியது.இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சேவாக்கும்தமிழக வீரர் விஜய்யும் களமிறங்கினர்.இன்னிங்ஸ் ஆரம்பித்தவுடன் முதல் நான்கு ஒவர் அமைதியாக இருந்த சேவாக் பிறகு தனது வழக்கமான அதிரடியை காட்டத் தொடங்கினார்.அதிலும் இலங்கையின் வெலகேதரா வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.ஒவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து இலங்கை அணியிரை படாய்படுத்தினார்.இவருக்கு பக்கபலமாக விளையாடிக் கொண்டிருந்த விஜய் மலிங்காவின் பந்துவீச்சில் ஆப் சைடில் அடிக்க அது அவருக்கு ஆப்பாக அமைந்துவிட்டது.விஜய் அடித்த அந்த பந்தை மெண்டிஸ் அழகாக கேட்ச் பிடித்து அவரை 14 ரன்களில்வெளியேற்றினார்.
நிதான ஆட்டம்
இதன் பிறகு டிராவிட் களமிறங்கினார்.வழக்கம் போல் அவர் தனது நிதான ஆட்டத்தை தொடர்ந்தார்.மறுமுனையில் சேவாக் தனது வழக்கமான ஆட்டத்தை தொடர்ந்தார்.இந்நிலையில் பொறுமையாக அடிக்கொண்டிருந்த டிராவிட் மேத்யு வீசிய பந்தினை தவறுதுலாக கால்காப்பினுள் வாங்கி 23 ரன்களில் வெளியேறினார்.அவர் அவுட்டாகும்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.இதன் பிறகு சாதனை மன்னன் சச்சின் களமிறங்கினார்.சச்சின் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார்.மறுமுனையில் சேவாக் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஆட்டம் பாதிப்பு
போதிய வெளிச்சமின்மையால் நேற்றைய ஆட்டம் இரண்டு ஓவர்களுக்கு முன்னாதாக முடிக்கப்பட்டது.இந்த இரண்டு ஓவர்கள் விளையாடப்பட்டிருந்தால் சேவாக் தனது 21சதத்தை நிறைவு செதிருப்பார்.முடிவில் இந்திய அணி 2விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது.

சச்சினுக்கு பாராட்டு
அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்ததற்காக சச்சின் தெண்டுல்கருக்கு நாடாளுமன்றத்தில் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கேள்வி நேரத்துக்கு முன்பு பேசிய சபாநாயகர் மீராகுமார், சச்சின் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
அடுத்தடுத்து சாதனைகள் மூலம் இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை தேடித்தரும் அவர்,
தற்போது 169வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்றுள்ளவர் என்ற பெருமையை பெற்றுள்ளதற்காக, மக்களவை உறுப்பினர்கள் சார்பில் சச்சினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

சாதனைகளின் சிகரம் சச்சின் சைமண்ட்ஸ்


சிட்னி,ஆக.5
கிரிக்கெட் உலகில் பல சாதனைகளுக்குச்
சொந்தக்காரரான சச்சின் சாதனைகளின் சிகரம் என சைமண்ட்ஸ் புகழ்ந்துள்ளார்.ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதங்கள், ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் அடித்து சாதனை என பல உலக சாதனைகளை உரிதாக்கிக் கொண்டுள்ள சச்சின், இப்போது 169 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதன் மூலம் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.இது குறித்து கருத்து கூறிய சைமண்ட்ஸ்:
சச்சினின் சாதனைகளை முறியடிப்பது எளிதானத காரியமல்ல. எனக்குத் தெரிந்த வரையில் பாண்டிங், பவுச்சர், காலிஸ் ஆகியோரே டெண்டுல்கரின் சாதனையை நெருங்கமுடியும் என நினைக்கிறேன். இருப்பினும், அவ்வளவு எளிதானதல்ல அது என்று கூறினார்.

பாக்.அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் கனேரியா


கராச்சி,ஆக.5
இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் சரியாக பந்துவீசவில்லை என்று கூறி பாகிஸ்தான் சுழற் பந்து வீச்சாளர் கனேரியாவை அதிரடியாக நீக்கியது பாக்.கிரிக்கெட் வாரியம்.இந்நிலையில் இழந்த பார்மை மீட்டு, மீண்டும் அணிக்கு திரும்புவேன் என கனேரியா கூறியுள்ளார்.
இது குறித்து கனேரியா கூறியதாவது: .
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நாங்கள் 354 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளித்தது. இதற்கு பந்துவீச்சு மட்டும் காரணமல்ல. பேட்ஸ்மேன்கள் தான் சோபிக்க தவறி விட்டனர்.இப்போட்டியில் நான் சிறப்பாகவே பந்து வீசினேன். இருப்பினும் அணியிலிருந்து நீக்கப்பட்டது வருத்தம் அளித்தது. இருப்பினும் தேர்வாளர்களின் செயலுக்கு மரியாதை அளிக்கிறேன். இழந்த பார்மை மீட்டு விரைவில் அணிக்கு திரும்புவேன் என்று கனேரியா தெரிவித்தார். இவர் இதுவரை விளையாடியுள்ள 61 டெஸ்ட் போட்டிகளில் 261 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் நெதர்லாந்து அணிகளுக்கு 'பிபா' அபராதம்

ஜோகன்னஸ்பர்க்,ஆக.5
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.இறுதி போட்டியில் முரட்டுதனமாக ஆடியதால் இந்த இரு அணிகளுக்கும் 'பிபா' அபராதம் விதித்துள்ளது.
ஜோகன்ஸ்பர்க்கில் கடந்த 11ஆம் தேதி உலக கோப்பை இறுதி ஆட்டம் நடந்தது. இதில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணி வீரர்களுமே முரட்டு ஆட்டத்தை கடைபிடித்தனர். இதனால் போட்டியில் நடுவராக பணியாற்றிய ஹோவர்டு வெப் மொத்தம் 14 மஞ்சள் அட்டைகளை வழங்கினார்.இதில் நெதர்லாந்து வீரர் ஜான் ஹெட்டிங்கா இரு மஞ்சள் அட்டைகளை பெற்றதோடு களத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார்.
'பிபா'விதி முறைகளின் படி ஒரு போட்டியில் அதிகபட்சமாக இரு அணியிலும் 5 வீரர்கள் மஞ்சள் அட்டை பெறலாம். அதற்கு மேல் மஞ்சள் அட்டைகள் பெற்றால் இரு அணிகள் மீதும் ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விதிமுறைப்படி இறுதி போட்டியில் விளையாடிய இந்த இரு அணிகளுக்கும் 'பிபா' அபராதம் விதித்துள்ளது.ஸ்பெயின் அணிக்கு 6 ஆயிரம் பவுண்டுகளும் நெதர்லாந்து அணிக்கு 9 ஆயிரம் பவுண்டுகளும் அபராதமாக விதிக்கப்பட்டது.

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி அரையிறுதியில் கோவாபஞ்சாப்


கொல்கத்தா,ஆக.5

64வது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்சந்தோஷ் டிராபி போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.இதில் கோவா ,பஞ்சாப் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி மேற்கு வங்காளத்தில் நடந்து வருகிறது. இதில் 'பி' பிரிவின் காலிறுதி கடைசி ஆட்டத்தில் கோவாசர்வீசஸ் அணிகள் மோதின.இந்த போட்டியில் 40 என்ற கோல் கணக்கில் சர்வீசஸ் அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது கோவா அணி.
மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி கர்நாடாகாவை 51 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து 'பி' பிரிவில் 2வது இடம் பிடித்தது.வருகிற 6ந் தேதி 'ஏ' பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் பஞ்சாப் அணியும் 2வது இடம் பிடிக்கும் அணியுடன் கோவா அணியும் மோதுகின்றன.

ஜூனியர் பேட்மிண்டன் போட்டி சித்தார்த் வெற்றி

சென்னை, ஆக.5
சென்னை மாவட்ட அளவிலான 19 வயதுக்குட்பட்ட வர்களின் ஜூனியர் பேட்மிண்டன் போட்டி அடையாறிலுள்ள இந்திரா நகரில் நடந்தது.
இதில் ஆண்கள் பிரிவில் ஆர்.சித்தார்த் ராஜா 2118, 1821, 2110 என்ற செட்கணக்கில் மோகன கிருஷ்ணனை தோற்கடித்து பட்டம் வென்றார். இதேபோல் பெண்கள் இறுதி ஆட்டத்தில் கார்த்தி விசாலாட்சி 217, 217 என்ற நேர் செட்டில் சிந்தூரியை வீழ்த்தினார்.
இந்த போட்டிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சித்தார்த் ராஜா, கார்த்தி விசாலாட்சி உள்பட 7 ஜூனியர் வீரர், வீராங்கனைகள் கேரளாவில் நடக்கும் மாவட்டங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இருப்பதாக சென்னை மாவட்ட பேட்மிண்டன் சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஊழல் எதிரொலி ஆசிய விளையாட்டு போட்டிக்கு மத்திய அரசு மறுப்பு !

டெல்லி,ஆக.4
வரும் அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளதால், 2019ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கான ஏலத்தில் பங்கேற்க மத்திய அரசு தடை விதிக்கவுள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் குறித்து மிகப் பெரிய அளவில் நிதி மோசடிகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் 2019ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியை இந்தியா வில் நடத்த முடிவு செய்திருந்த இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முயற்சிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் தடை போட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த அனுமதி கோரி ரூ. 15 கோடியை கேட்டிருந்தது ஒலிம்பிக் சங்கம். ஆனால் அந்தக் கோரிக்கையை விளையாட்டு அமைச்சகம் நிராகரித்து விட்டது. இந்தப் பணத்தை வைத்துத்தான் விண்ணப்பிக்கவும், இந்தியாவுக்கு ஆதரவு சேகரிக்கும் பிரசாரத்தையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது இந்திய ஒலிம்பிக் சங்கம். ஆனால் அதை தற்போது மத்திய அரசு நிராகரித்து விட்டது.

பட்டம் வெல்வதே என் லட்சியம்சோம்தேவ்

டெல்லி,ஆக.4
டென்னிஸ் போட்டியில் பட்டம் வெல்வது மிகவும் கடினம் என்றாலும் அதனை நோக்கி முன்னேறுவதுதான்எனது லட்சியம் என்று இந்திய டென்னிஸ் சோம்தேவ் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து கூறிய சோம்தேவ் :
ஆடவர் டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் நுழைந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றாலும் நான் எப்போது முதல் பட்டம் வெல்வேன் என்று உறுதிபடக் கூறமுடியவில்லை. என்னுடைய முதல் சாம்பியன் பட்டம் எப்போது கிடைக்கும் என்பது என்னுடைய ஆட்டத்திறனை பொறுத்தது என்று கூறினார்.
இதற்கு முன்பு லியாண்டர் பயஸ் 73ஆம் இடத்திற்கு முன்னேறி சாதனை புரிந்தார். ஆனால் இந்தியாவின் மிகச்சிறந்த் டென்னிஸ் வீரராக விஜய் அமிர்தராஜ் ஏன் கணிக்கப்படுகிறார் என்றால் அவர் உலகத் தரவரிசையில் 16ஆம் இடம் வரை முன்னேறி சாதனை புரிந்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக ரமேஷ் கிருஷ்ணன் 23ஆம் இடம் வரை முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை

லண்டன்,ஆக.4
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் முதல் டெஸ்டில் விளையாடிய வீரர்களே இந்தப் போட்டியிலும் விளையாடுவார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் மோர்கன், பிரையர் ஆகியோரது பேட்டிங் சிறப்புடன், ஆண்டர்சனின் அபார ஸ்விங் பந்து வீச்சும் கைகொடுக்க பாகிஸ்தானை 354 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வச் செய்தது இங்கிலாந்து.
இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள இங்கிலாந்து அணி வரும் வெள்ளியன்று துவங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மாற்றங்கள் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது

பேடி சாதாரண பந்து வீச்சாளர் முரளிதரனுக்கு கண்டனம்


டெல்லி,ஆக.4இந்திய முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் பேடி ஒரு சாதாரண பந்து வீச்சாளர் என்றும் அவருக்கு சர்ச்சைகளை கிளப்புவதே வேலை என்றும் கூறியிருந்த முரளிதரனுக்கு பிரசன்னா மற்றும் மணீந்தர்சிங் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டிகயிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு முரளிதரன் அளித்த பேட்டி ஒன்றில் தனது பந்து வீசும் முறை பற்றி பேச பேடிக்கு தகுதியில்லை என்பது போல காரசாரமாக விமர்சித்திருந்தார்.
இது குறித்து முன்னாள் இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் கூறியதாவது:
முரளிதரனின் கருத்து தேவையற்றது.
பிரசன்னா:
அவரது பந்து வீச்சை அனுமதிப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகள் வளைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
மணீந்தர்சிங்:
பேடி போன்ற மிகச் சிறந்த பந்து வீச்சாளரை குறை கூறி தன்னுடைய பெருமையை குறைத்து கொள்கிறார் முரளிதரன்.
அவருக்கு அளித்தது போல பேடிக்கும் கையை வளைத்து பந்து வீச அனுமதிக்கப்பட்டிருந்தால் பேடியும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார் மேலும் முரளிதரன் இதுபோன்ற கருத்துக்களை கூறாமல் இருப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டில் கல்மாடி ஆதரவாளர்

டெல்லி,ஆக.4
காமன்வெல்த் போட்டி நடைபெறுமா என்று கேள்வி எழும் வண்ணம் நாளுக்கு நாள் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் நடைபெற்றுள்ள ஊழல்கள் பற்றி செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன.இந்நிலையில் காமன்வெல்த் போட்டிக்கான கட்டுமானப் பணிகளில், பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான கல்மாடியின் ஆதரவாளர் தர்பாரியை பதவியிலிருந்து நீக்குமாறு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளாதாக எழுந்த புகாரையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சுரேஷ் கல்மாடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காமன்வெல்த் போட்டிகள் ஒருங்கிணைப்பு கமிட்டியில் இருந்து அதன் துணைத் தலைவர் டி.எஸ்.தர்பாரியை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.டி.எஸ்.தர்பாரி காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டியின் வருவாய் மற்றும் நிதியை கையாள்பவர்.இவர் மீது ஏற்கனவே கேரளா சுங்கத்துறையில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காமன்வெல்த் முறைகேடுகளில் அயல்நாட்டு நிறுவனங்களின் பங்குள்ளதா என்று அமலாக்கத்துறை இயக்ககமும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

சென்னையில் அகில இந்திய கல்லுரிகள் கூடைப்பந்து போட்டி

சென்னை, ஆக. 4
சென்னையில் ஆண்டு தோறும் அகில இந்திய கல்லூரிகள் கூடைப்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 10வது அகில இந்திய கல்லூரிகள், பள்ளிகள் கூடைப்பந்து போட்டி வருகிற 6ந் தேதி முதல் 11ந் தேதி வரை தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது.
ஆண்கள் பிரிவில் மொத்தம் 30 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் பங்கேற்கின்றன.
நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1 லட்சம் ஆகும்.

நிர்வாகிகள் தேர்வு குறித்து ஹாக்கி இந்தியா விளக்கமளிக்க வேண்டும்

டெல்லி,ஆக.4
ஹாக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தலுக்கு சட்ட ரீதியாக சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து நிர்வாகிகள் தேர்வுமுறை குறித்து விளக்கம் அளிக்குமாறு, ஹாக்கி இந்தியா, இந்திய ஹாக்கி சம்மேளனம் ஆகிய அமைப்புகளுக்கு, மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிர்வாகிகள் தேர்வு மற்றும் சர்வதேச போட்டிகளில், எந்த விதிமுறைகளின் கீழ் இந்த இரு அமைப்புகளும் பங்கேற்கின்றன.மத்திய அரசின் விளையாட்டுத்துறைக்கான விதிமுறைகளையும்,சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் விதிமுறைகளையும் அந்த இரு அமைப்புகளும் பின்பற்றுகிறதா என்றும் நோட்டீசில் கேட்கப்பட்டுள்ளன.
இது குறித்த விளக்கங்களை இன்னும் இரு வாரங்களுக்குள் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ஏ.டி.பி. டென்னிஸ் பட்டம் வென்றது அமெரிக்க இணை


லாஸ் ஏஞ்சல், ஆக. 4 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏ.டி.பி. பார்மர்ஸ் கிளாசிக் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் இறுதி போட்டியில் வெற்றி பெற்று வாகையர் பட்டம் வென்றது அமெரிக்காவின் மைக் பிரையன் (இடது) பாப் பிரையன் (வலது) இணை. மைக், பாப் சகோதரர்கள் இணை 67, 62, 107 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் எரிக் பூட்டோராக், ஜீன் ஜூலியன் இணையை வீழ்த்தியது. இந்த இணை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது இது 100வது முறையாகும். அதில் அந்த இணை பெறும் 62வது வெற்றியாகும்.

கல்மாடி உறுதிமொழி தரவேண்டும்

புதுடெல்லி,ஆக.3
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளுக்குக் கட்டப்பட்ட கட்டுமானங்கள் மோசமான நிலையிலுள்ளதாக கூறி சுரேஷ் கல்மாடி மீது காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி விளையாட்டு மைதானங்கள் அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், ஆனால் கட்டுமானங்கள் பல இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளதால் கட்டுமானங்கள் சரிசெய்யப்படும் என்பதற்கான எழுத்துவழி உறுதிமொழியையும் கோரியுள்ளது. காமன்வெல்த் கட்டுமானப்பணிகள் பொதுப்பணித்துறையாலும், டெல்லி மாநகராட்சியாலும், மத்திய பொதுப்பணித் துறை மற்றும் டெல்லி நகர மேம்பாட்டு ஆணையம், புதுடெல்லி நகராட்சி கவுன்சில், ஆர்.ஐ.டி.இ.எஸ். ஆகியவையாலும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்புத் துறை அம்பலப்படுத்தியுள்ளது. கட்டுமானப்பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட பின்பும் ஒப்பந்தப்புள்ளி தொகையை மாற்றியது, அதிக விலைக்கு ஒப்பந்தங்களை வழங்கியது, தகுதியற்றவர்களுக்கு இந்த ஒப்பந்தங்களை வழங்கியது ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.பி.ஐ. விசாரணை தேவை என்று மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை பரிந்துரை செய்துள்ளது.

சர்வதேச டெஸ்ட் தரவரிசை முதலிடத்தை இழந்தார் சேவாக்


துபாய்,ஆக.3
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக் தனது முதல் இடத்தை இழந்துள்ளார். 866 புள்ளிகளுடன் அவர் 2 வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டில் அவர் 99 ரன் எடுத்தபோதும் முதல் இடத்தை இழந்தார். இலங்கை கேப்டன் சங்ககரா இரட்டை சதம் அடித்ததால் ஷேவாக்கை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை பிடித்தார். அவர் 882 புள்ளிகள் பெற்றுள்ளார்.
2009 ம் ஆண்டில் அவர் முதல் இடத்தில் இருந்தார். தற்போது மீண்டும் அந்த இடத்துக்கு வந்துள்ளார்.
ஜெயவர்த்தனே (இலங்கை) 832 புள்ளிகள் பெற்று 3 வது இடத்தில் உள்ளார்.
கொழும்பு டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததால் தெண்டுல்கர் 6 வது இடத்தில் இருந்து 4 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் 817 ரேட்டிங் புள்ளிகள் பெற்றுள்ளார்.மற்ற இந்திய வீரர்களில் காம்பீர் 11 வது இடத்திலும், லட்சுமண் 15 வது இடத்திலும், டிராவிட் 19 வது இடத்திலும் உள்ளனர்.மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா), சந்தர்பால் (வெஸ்ட்இண்டீஸ்), காலிஸ் சுமித் (தென்ஆப்பிரிக்கா), காடிச் (ஆஸ்திரேலியா), ரோஸ் டெய்லர் (நியூசிலாந்து) ஆகியோர் 5 முதல் 10வது இடங்களில் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களில் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த ஸ்டெயின் 887 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். முகமது ஆசிப் (பாகிஸ்தான்) 818 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும் முரளீதரன் (இலங்கை) 3வது இடத்திலும் உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் முத்திரை பதித்த இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
இந்திய வீரர்களில் ஜாகீர்கான் 8வது இடத்திலும், ஹர்பஜன்சிங் 9வது இடத்திலும் உள்ளனர்

தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்து கொள்ளுமா இந்தியா?


இலங்கையுடனான 3வது டெஸ்ட் இன்று ஆரம்பம்
கொழும்பு,ஆக.3இந்தியஇலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது.இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே ஐசிசி தரசரிசையிலுள்ள முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்ற கட்டாயத்திலிருக்கிறது இந்திய அணி.தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. காலேயில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், கொழும்புவில் நடைபெற்ற இரண்டாவது போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டிக்காக கொழும்பில் நேற்று இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்
தொடரும் சோகம்
ஆனால் பந்து வீச்சு தான் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது. முன்னணி வீரர்களான ஜாகீர்கான், ஸ்ரீசாந்த் இல்லாதது அணிக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங்கால் இந்த தொடரில் ஒன்றும் செய்ய முடியவில்லை.
களமிறங்குவது யார்?
காயம் காரணமாக 2வது டெஸ்டில் விளையாடாத காம்பீர் இன்றைய போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவர் களமிறங்கும் பட்சத்தில் தமிழக வீரர் விஜய் கழற்றி விடப்படுவார். காய்ச்சல் காரணமாக 2வது டெஸ்டில் விளையாடமுடியாமலிருந்த யுவராஜ்சிங் . தற்போது உடல் தகுதியுடன் இருந்தாலும் முதல் டெஸ்டிலேயே சதம் அடித்து முத்திரை பதித்த சுரேஷ் ரெய்னாவுக்கே இன்றைய போட்டியில் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கை அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் பரணவிதனா, கேப்டன் சங்ககரா, மகிளா ஜெயவர்த்தனே ஆகியோர் சிறப்பாக உள்ளனர். இதேபோல் பந்துவீச்சில் காயம் காரணமாக 2வது டெஸ்டில் விளையாடத முன்னணி வேகப்பந்து வீரர் மலிங்கா 3வது டெஸ்டில் ஆடுகிறார். அவரது வருகை அந்த அணிக்கு கூடுதல் பலம். இலங்கை அணியை பொறுத்தவரை இந்தப் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்தாலே தொடரை வென்றுவிடும்.இரு அணிகளும் இன்று மோதுவது 35வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 34 டெஸ்டில் இந்தியா 13 போட்டியிலும், இலங்கை 6 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
சாதனையின் சின்னம் சச்சின்
சாதனை மேல் சாதனைகளை நிகழ்த்தி வரும் சச்சினின் சாதனை பயணத்தில் மேலும் ஒரு சாதனையாக உலகிலேயே அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை இன்றைய போட்டியில் ஆடுவதன் மூலம் சச்சின் பெறுவார்.
இலங்கை அணிக்கு எதிராக இன்றைய போட்டியில் ஆடுவதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாக்கின் 168 டெஸ்ட் போட்டிகள் என்ற சாதனையை சச்சின் முறியடிப்பார். இதேபோல் 442 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள சச்சின் இன்னும் 3 போட்டிகளில் பங்கேற்றால் 444 போட்டிகளில் பங்கேற்று ஒருநாள் போட்டியில் அதிக போட்டியில் விளையாடியவர் என்ற சனத் ஜெயசூரியாவின் சாதனையையும் கடந்து விடுவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் 168 போட்டிகளில் 56.08 என்ற சராசரி விகிதத்தில் 13,742 ரன்களைக் குவித்துள்ளார்.
இதில்48 சதங்களும், 55 அரை சதங்களும் அடங்கும். ஒரு நாள் கிரிக்கெட்டில் 46 சதங்களுடன் 17,598 ரன்களைக்குவித்துள்ளார் சச்சின். ஒரு நாள் கிரிக்கெட்டில் முதன் முதலாக இரட்டைச்சதம் அடித்த உலக சாதனையும் சச்சின் பக்கமே உள்ளது.

சர்வதேச ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் ஸ்பெயின் வீரர்

ஜிஸ்டாட்,ஆக.3
சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் நிக்கோலஸ் அல்மெக்ரா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். ஜிஸ்டாட் நகரில் நடைபெற்ற போட்டியில், நிக்கோலஸ் அல்மெக்ரா, பிரான்ஸின் ரிச்சார்டை எதிர்கொண்டார். போட்டியின் துவக்கம் முதலே நிக்கோலஸ் ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டில் ரிச்சார்ட் கடுமையாக போராடினாலும், நிக்கோலஸின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். இருப்பினும் முதல் செட்டை 75 என்ற செட் கணக்கில் நிக்கோலஸ் கைப்பற்றினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியின் முடிவில் நிக்கோலஸ் இரண்டாவது செட்டை 61 என்ற கணக்கில் எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இந்த வெற்றியின் மூலம் ஏடிபி சர்வதேச டென்னிஸ் போட்டியில் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை நிக்கோலஸ் பெற்றுள்ளார்.

பாக் அணியில் மீண்டும் முகமது யூசுப்

லண்டன்,ஆக.3
பாக் அணியில் மீண்டும் மூத்த வீரரான முகமது யூசுப் அணியில் இடம் பெற்றுள்ளார்.
ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாக யூசுப்பை மீண்டும் டெஸ்ட் அணிக்குள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் 171 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றிய டேனிஷ் கனேரியாவும் அணியிலிருந்து நீக்கப்பட்டு ரஸா ஹசன் என்ற புதிய சுழற்பந்து வீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 354 ரன்களில் தோல்வியுற்றது.அந்த நாட்டு கிரிக்கெட் வரலாற்றில் 2வது மிகப்பெரிய தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதனத்தில் 491 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது அதன் மிகப்பெரிய தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

பாக் அணியின் பயிற்சியாளராக விருப்பம் இன்சமாம்


லாகூர்,ஆக.3
பாக் அணியின் பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் இஜாஷ் அகமத் பணியாற்றி வரும் நிலையில் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பு ஏற்க விரும்புவதாக முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் ஆசை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது:எனக்கு கிடைத்த பெயர், புகழ் எல்லாமே பாகிஸ்தான் கிரிக்கெட் எனக்கு தந்தது. அதற்கு பிரதிபலனாக பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் அதனை ஏற்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் முழுநேர பேட்டிங் பயிற்சியாளர் தேவை.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு ஏற்ப பாக் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு தேவையான நுணுக்கம்,பொறுமை இல்லை.அவர்களுக்கு போதுமான பொறுமையில்லாததால் 20 முதல் 30 ரன்களில் ஆட்டம் இழந்து விடுகின்றனர்.டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இது போதாது.ஓய்வு பெற்ற முகமது யூசுப் ,யூனிஸ்கான் ஆகிய சீனியர் வீரர்களை மீண்டும் அணியில் சேர்ப்பது குறித்து தேர்வு குழுவினர் பரிசீலிக்க வேண்டும்' என்றார்.இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக பாக் அணியில் முகமது யூசுப் மீண்டும் இடம் பெற்றுள்ள நிலையில் இன்சமாம் இப்படி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் சோம்தேவ் முன்னேற்றம்


சென்னை,ஆக.3
ஆண்களுக்கான ஒற்றையர் ஏ.டி.பி. டென்னிஸ் தரவரிசையில் 96வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்திய டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன்.
கடந்த 11 ஆண்டுகளில் முதல் 100ற்குள் நுழையும் ஒரே வீரர் சோம்தேவ் ஆவார்.ஏ.டி.பி. டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் லியாண்டர் பயஸுக்கு பிறகு முதல் 100 இடங்களூக்குள் நுழைந்து 96வது இடம் பிடித்துள்ளார் . தற்போது இவர் 96வது இடத்தில் இருப்பதால் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றுக்கு விளையாட நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.வளர்ந்து வரும் இளம் வீரரான சோம்தேவ் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் பலம் வாய்ந்த கார்லோஸ் மோயா, இவோ கார்லோவிச் போன்ற வீரர்களை வென்றுள்ளார்.மேலும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் சுற்றில் சுவிஸ் வீரர் சியுடிநெல்லியிடம் 5 கணக்கில் தோல்வியுற்றார்.தோல்வியடைந்தாலும் இவரது ஆட்டம் பாராட்டும் படியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்திக்கு ஆதரவாக கனடா வீராங்கனை!


புது டெல்லி,ஆக.2
ஆண் தன்மை மிக்கவராக அறிவிக்கப்பட்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள தமிழக வீராங்கனை சாந்திக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார் கனடா நாட்டு சைக்கிள் வீராங்கனை கிறிஸ்டன் ஒர்லி.இவர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்.
தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் சாந்தி. ஆனால் பின்னர் பாலின சோதனை நடத்தப்பட்டு அவர் ஆண் தன்மை மிக்கவர் என்று கூறி அவருடைய பதக்கத்தை பறித்து அவர் விளையாடவும் தடை விதித்தனர்.
இதனால் மனம் ஒடிந்து போன சாந்திக்கு தமிழக முதல்வர் கருணாநிதி ஆறுதல் கூறி, சாந்தி பிறந்த மாவட்டமான புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், இடைக்கால பயிற்சியாளர் வேலையை வழங்கினார். ஆனால் சம்பள உயர்வு தராமல் தான் அலட்சியப்படுத்தப்படுவதாக கூறி சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார் சாந்தி.
இந்த நிலையில் சாந்தி மீதான தடையை அகற்ற களத்தில் குதித்துள்ளார் கனடா வீராங்கனை கிறிஸ்டன் ஒர்லி.
தென்னாப்பிரிக்க சைக்கிள் வீராங்கனை காஸ்டர் செமன்யாவுக்கு, கடந்த ஆண்டு பெர்லினில் நடந்த உலக சாம்பியன்போட்டியின்போது சாந்திக்கு ஏற்பட்டதைப் போன்ற பிரச்சினை உருவானது. செமன்யா ஆண் தன்மை மிக்கவர் எனறு கூறி 11 மாத கால தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்காக கடுமையாக வாதாடினார் கிறிஸ்டன். இதன் விளைவாக சமீபத்தில் செமன்யா மீதான தடையை உலக சைக்கிள் சங்கம் நீக்கியது.
இந்த நிலையில், தற்போதுசாந்திக்காக குரல் கொடுக்க முன்வந்துள்ளார் கிறிஸ்டன். இதுதொடர்பாக சாந்திக்கு இமெயில்களை அனுப்பி தொடர்பு கொண்டுள்ளார். இதுகுறித்து கிறிஸ்டன் கூறுகையில், காஸ்டர் செமன்யா விவகாரத்தில் நான் வெற்றி பெற்றேன். அதேபோல சாந்திக்கும் நான் உதவப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
செமன்யாவுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்காவும் அவருக்காக அணி திரண்டது. போராட்டங்கள் வெடித்தன. சட்ட ரீதியான அணுகுமுறைகளும் உலக சைக்கிளிங் கழகத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
ஆனால் சாந்தி விவகாரத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. சாந்தி பாலின சோதனையில் தோல்வியடைந்து விட்டார் என்ற ஒற்றை வரியோடு இந்திய தடகளச் சங்கம் நின்று விட்டது. மத்திய அரசும் இதுகுறித்து கவலைப்படவில்லை. விளையாட்டு அமைப்புகளும் கண்டுகொள்ளவில்லை. யாருமே இதைப் பெரிய விஷயமாகவே நினைக்கவில்லை.
இதுகுறித்து சாந்தி கூறுகையில், எனக்கு கிறிஸ்டன் ஒர்லி மெயில்கள் அனுப்பியுள்ளது உண்மைதான்.பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் ஒருவர் தனக்காக போராட களத்தில் இறங்கியுள்ளது எனக்கு பெரும் மன ஆறுதலைக் கொடுத்துள்ளது. என்னை மீண்டும் ஓட வைக்க அவர் விரும்புகிறார். எனக்காக அனைவரும் உதவுமாறு தயை கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன் என்றார் .

கிளாசிக் டென்னிஸ் தொடர் இறுதிப் போட்டியில் ஷரபோவா

கலிபோர்னியா,ஆக.2
கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் பேங்க் ஆஃப் தி வெஸ்ட் கிளாசிக் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது.இந்த தொடரின் அரையிறுதிப் போட்டியில் போலந்து வீராங்கனை ராத்வான்ஸ்காவை வீழ்த்தி ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா இறுதி போட்டிக்குள் நுழைந்தார். அரையிறுதியில் 1 6, 6 2, 6 2 என்றே சற்றே போராடி வீழ்த்தி இறுதியில் விக்டோரியா அசரென்காவை சந்திக்கிறார்.
விக்டோரியா அசரென்கா அரையிறுதியில் ஆஸ்ட்ரேலிய வீராங்கனை சமந்தா ஸ்டோசரை 6 2, 6 3 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.முன்னனி வீரர்கள் மோதுவதால் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காமன்வெல்த் கட்டுமானப் பணிகளில் நிதிமுறைகேடு விசாரனை நடத்த உத்தரவு

புது டெல்லி,ஆக.2

காமன்வெல்த் போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட சில நிறுவனங்கள் நிதிமுறைகேட்டில் ஈடுபட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சக செயலாளர் சந்திரசேகர், நேரில் ஆய்வு செய்து இதுதொடர்பான விசாரணையை மேற்கொள்வார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காமன்வெல்த் போட்டிகளுக்கான திட்டங்கள் தாமதமாவதற்கான காரணங்கள் குறித்தும் சந்திரசேகர் விசாரணை நடத்துவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, லண்டனைச் சேர்ந்த ஏ எம் பிலிம்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களிடம் அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என்று டெல்லி மாநில முதலமைச்சர் ஷீலா தீட்சித் உறுதியளித்துள்ளார். காமன்வெல்த் போட்டிகள் தொடர்பான அனைத்துப் புகார்களையும் போட்டிக்குழு நிர்வாகம் நிராகரித்துள்ளது. இப்போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒரு சில நிறுவனங்கள் நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதால், அவற்றின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐயிடம் மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை புகார் அளித்துள்ளது

ஸ்பானீஷ் லீக் போட்டிநடத்தும் வாய்ப்பை இழந்தது சிங்கப்பூர்

சிங்கப்பூர்,ஆக.2
முதல் ஸ்பானீஷ் லீக் சர்வதேச கோப்பைக்கான கால்பந்து போட்டியை சிங்கப்பூரில் நடத்த வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
ஸ்பானீஷ் லீக் போட்டியை ஆசிய நாடுகளில் பிரபலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் சர்வதேச ஸ்பானீஷ் லீக் போட்டியும் ஒன்று. அதாவது ஒவ்வொரு வருடமும் இந்த போட்டி ஸ்பெயினை தவிர்த்து ஏதாவது ஒரு ஆசிய நாட்டில் நடைபெறும்.இதில் ஸ்பானீஷ் லீக்கில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுடன் போட்டியை நடத்தும் நாட்டின் தலைசிறந்த அணி ஒன்றும் மோதும்.ஒவ்வொரு ஸ்பானீஷ் லீக் போட்டி துவங்குவதற்கு முன் இந்த போட்டி நடைபெறும்.
முதல் சர்வதேச ஸ்பானீஷ் லீக் வருகிற 2011ம் ஆண்டு ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் போட்டியை தென்கிழக்காசிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் நடத்த லாலீகா விரும்புகிறது. இது குறித்து விவாதிப்பதற்காக அந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பிரான்சிஸ்கோ ரோகா பெரஸ் நேற்று சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூர் கால்பந்து சங்க நிர்வாகிகளுடன் இது குறித்து விவாதித்ததார். ஆனால் சிங்கப்பூரில் முதல் சர்வதேச ஸ்பானீஷ் லீக் போட்டியை நடத்த வாய்ப்பு குறைவு எனத் தெரிய வருகிறது. முக்கியமாக அங்கு ஸ்டேடியம் வசதி குறைவாக உள்ளதே இதற்கு காரணம்.
இது குறித்து சிங்கப்பூர் கால்பந்து சங்கத் தலைவர் சைனுதீன் நுர்தீன் கூறுகையில்,''புகழ்பெற்ற பார்சிலோனா, ரியல்மாட்ரிட் போன்ற அணிகள் விளையாடும்பட்சத்தில் பிரமாண்டமான ஸ்டேடியங்கள் தேவை. சிங்கப்பூரின் பெரிய ஸ்டேடியமான நேஷனல் ஸ்டேடியத்தில் தற்போது புணரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அதனால் முதல் போட்டி சிங்கப்பூரில் நடக்க வாய்ப்பில்லை.புணரமைப்பு பணி முடிந்து விட்டால் இந்த போட்டியை சிங்கப்பூரில் நடத்த வாய்ப்பிருக்கிறது'' என்றார்.

காமன்வெல்த் ஸ்டேடியம் ஒழுகுகிறது

புதுடெல்லி,ஆக.2
காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளுக்காக கட்டப்பட்ட பளுதூக்கும் விளையாட்டு மைதானம் ஒரு மூண்டுண்ட அமைப்பாகும். ஆனால் டெல்லியில் பெய்த மழைஇல் அந்த ஸ்டேடியத்தில் மழை நீர் ஒழுகி மைதானத்தில் தண்ணீர் ஆங்காங்கே இருந்தது.
ஏற்கனவே ஊழல் நடைபெற்றுவருவதாக கடும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நிலையில் தற்போது மழை நீர் கூரையிலிருந்து ஒழுகுவது மேலும் பல சிக்கல்களை எழுப்பியுள்ளது.
ஆனால் விளையாட்டுத் துறை அமைச்சர் பதட்டமடைய வேண்டியதில்லை, இதனை சரி செய்து விடலாம் என்றார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி இந்திய வீரர் தகுதி


புதுடெல்லி,ஆக.2
உலக துப்பாக்கி சுடும் போட்டி ஜெர்மனியில் உள்ள முனிச்நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் ககன் நரங்குக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் முதல் இந்திய வீரர் என்னும் சிறப்பை பெற்றுள்ளார்.
உலகத் துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் ககன் நரங் வெண்கல பதக்கம் வென்றார். உலகின் இரண்டாம் நிலை வீரரான ககன் தகுதி சுற்றில் 597 புள்ளிகளும், இறுதி சுற்றில் 102 புள்ளிகளும் ஆக மொத்தம் 699 புள்ளிகள் பெற்றார்.
உலக சாம்பியன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றதன் மூலம் ககன்நரங் 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதனால், லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் ககன் நரங் ஆவார். ராஜூவ்காந்தி கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்ட மறுதினத்தில் ககன் இந்த முத்திரையை பதித்து உள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சுடும் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனான அபினவ் பிந்த்ரா ஏமாற்றம் அளித்தார். 25வது இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. இத்தாலி வீரர் நிக்கோலோ 702.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கமும், அங்கேரி வீரர் பீட்டர் சிடி 700.4 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

வடகொரியா கால்பந்து பயிற்சியாளருக்கு மரண தண்டனை!


பான்யாங், ஆக.2
உலக கோப்பை கால்பந்து போட்டியில் வடகொரியா அணிக்கு ஏற்பட்ட மோசமான தோல்வியின் காரணமாக அந்த அணியின் பயிற்சியாளர் கிம்ஜாங்ஹபூன் நீக்கப்பட்டுள்ளார்.
வடகொரியா 1966ம் ஆண்டுக்கு பிறகு இந்த முறை தான் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.இந்நிலையில் அந்த தான் போட்டியிட்ட 3 லீக் ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. பிரேசிலிடம் 12 என்ற கணக்கிலும், ஐவேரிகோஸ்டிடம் 03 என்ற கணக்கிலும் ,போர்ச்சுக்கல்லிடம் 07 என்ற கோல்கணக்கிலும் தோல்வியுற்றது. இப்படி லீக் ஆட்டத்தில் வடகொரியா அணிக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாக அந்த அணியால் ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெறமுடியாமல் போனது.உலக கோப்பை கால்பந்து போட்டியின்முதல் சுற்றிலேயே வடகொரியா வெளியேறியதை அந்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இதனால் அந்த அணி நாடு திரும்பியதும் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்குட் படுத்தப்பட்டது. விசாரணையின் போது
தோல்விக்கு காரணம் பயிற்சியாளர் தான் என்று வீரர்கள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அவர் பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டார்.
மேலும் இந்த தோல்வியால் கிம்ஜாங் நாட்டையே அவமானப்படுத்தி விட்டதாக விசாரணை குழு குற்றம் சாட்டியது. இது அந்நாட்டு அதிபருக்கு அவமதிப்பு ஏற்பட்டதாக கருதப்படுகிறது.
அந்நாட்டு சட்டப்படி அதிபரை அவமானப்படுத்து வதற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் வடகொரியாவில் 2 அதிகாரிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது .உலக கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்காக பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலில் பிரேசில் பயிற்சியாளர் துங்கா நீக்கப்பட்டார். அவரை தொடர்ந்து அர்ஜென்டினா பயிற்சியாளர் மரடோனா நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, July 28, 2010

இந்திய அணி சிறப்பான துவக்கம்


கொழும்பு, ஜுலை.28
இரண்டாம் நாளான நேற்று இலங்கை அணி 642 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
கொழும்பு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில்2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி வழக்கம் போல தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியாவும் முதல் நாள் போலவே தங்களது ஒன்றுமில்லாத பந்துவீச்சை வீசினர். இந்திய அணியின் மோசமான பந்துவீச்சினால் இலங்கை அணியின் ரன்விகிதம் வேகமாக வளர்ந்தது. நேற்று இலங்கை எதிர்கொண்ட 69.4 ஓவர்களில் 330 ரன்களை விளாசியது.அந்த அணியின் கேப்டனும்,துணை கேப்டனும் இணைந்து இந்திய பந்துவீச்சாளர்களை படாய் படுத்தினர்.
சங்கக்காரா அவுட்
ஒரு கட்டத்தில் இந்தப் பிட்சில் ஒன்றும் இல்லை என்று தோனி விரக்தியடைந்து 2வது ஸ்லிப்பை எடுத்தவுடன் அந்த இடத்தில் சங்கக்காரா அதித்த ஷாட் ஒன்று கேட்ச் பிடிக்கும் உயரத்தில் சென்றது. இதன் பிறகு ஓஜாவின் ஒரே ஒவரில் 4 பவுண்டரிகளை அடித்து சங்கக்காரா டெஸ்ட் போட்டியில் தனது ஏழாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இரட்டை சதம் அடித்த பிறகு சேவாக் வீசிய பந்தை கட் செய்ய முயன்றார் சங்கக்காரா .ஆனால் பந்து மட்டையின் வெளி விளிம்பில் பட்டு திராவிட்டிடம் கேட்சாகச் சென்றது.திராவிட் அதனை அழகாக பிடித்துகொண்டார் .335 பந்துகளை சந்தித்த அவர் 219 ரன்கள் எடுத்து வெளியேறினார்.அதில் 29 பவுண்டரிகளும் அடங்கும்.சங்கக்காரா ஆட்டமிழக்கும் போது இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 466 ரன்கள் எடுத்திருந்தது.இதன் பிறகு களமிறங்கிய இலங்கை அணியின் சமரவீரா களமிறங்கினார்.
புதிய சாதனை
இந்நிலையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜெயவர்தனே டெஸ்ட் போட்டியில் தனது 28வதுசதத்தை எடுத்தார்.இந்த சதத்தின் மூலம் ஓரே மைதானத்தில்அதிக சதங்கள் எடுத்த டெஸ்ட் வீரர் என்ற உலகச் சாதனை புரிந்தார்.ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் மெல்பர்ன் மைதானத்தில் எடுத்த 9 சதங்கள் தான் இதுநாள் வரை ஓரே மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச சதங்கள் என்ற சாதனையாக இருந்தது.ஜெயவர்தனே மூலம் பிராட்மேனின் இந்த சாதனை முறியடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.இலங்கை தன் முதல் இன்னிங்சில் தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 587 ரன்கள் குவித்திருந்தது.இலங்கை உணவு இடைவேளைக்குப் பிறகு 31 ஓவர்களில் 130 ரன்களைக் குவித்துள்ளது.ஜெயவர்தனே 143 ரன்களுடனும், திலன் சமரவீரா 52 ரன்கள் எடுத்தும் விளளயாடி வருகின்றனர்.
சதமடித்த பந்து வீச்சாளர்கள்
இந்தியப் பந்து வீச்சாளார்களான மிதுன், ஓஜா, ஹர்பஜன் சிங் ,இஷாந்த் ஷர்மா ஆகியோர் தங்களது பந்து வீச்சில் சதம் கண்டனர்.
இந்நிலையில் இலங்கை அணியில் ஸ்கோர் 600 ரன்னை நோக்கி சென்றது. சதம் அடித்த ஜெயவர்த்தனே அதிரடியாக விளையாடினார். அவரும் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 174 ரன்னில் ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழந்தார்.அவர் 42.4 ஓவர் வீசி 147 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.ஹர்பஜன் சிங் இந்த தொடரில் பெறும் முதல் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இலங்கை அணி ஸ்கோர் 4 விக்கெட் இழப்பிற்கு 642 ரன்னிற்கு தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இலங்கை அணியின் சமரவீரா 76 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.நேற்றைய ஆட்டத்தில் 18 ஓவர்கள் மீதமிருக்கையில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக சேவாக்கும்விஜய்யும் களமிறங்கினார்கள்.
சேவாக் அதிரடி
களமிறங்கியது முதலே சேவாக் அதிரடியாய் விளையாடினார்.அவருக்கு பக்க பலமாக விஜய்யும் ஆடினார்.அதிலும் துவக்க ஓவரை வீசிய டம்மீக்க பிரசாத்தின் ஓவரை விளாசித் தள்ளினார் சேவாக்.பிரசாத் வீசிய 3 ஓவர்களில் மொத்தம் 23 ரன்கள் எடுக்கப்பட்டது.டம்மிக்க பிரசாத்தின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளையும் பெர்ணாண்டோ ஓவரில் இரண்டு பவுண்டரிகளையும், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் சுரஜ் ரந்திவ் பந்தில் இரண்டு பவுண்டரிகளையும், அஜந்தா மெண்டிஸ் பந்தில் இரண்டு பவுண்டரிகளையும் அவர் விளாசினார்.
இதில் மெண்டிஸ் வீசிய மிடில் ஸ்டம்ப் நோக்கி வந்த பந்தை பௌலருக்கும் மிட் ஆனுக்கும் இடையே செலுத்தி அடித்த பவுண்டரி நேற்றைய தினத்தின் சிறந்த ஷாட் என்று கூறலாம்.சிறப்பாக ஆடிய சேவாக் டெஸ்ட் போட்டியில் தனது 22வது அரை சதத்தினை எடுத்தார்.அவர் மொத்தம் 63 பந்துகளை சந்தித்து 64 ரன்களை எடுத்தார்.அதில்12 பவுண்டரிகளும் அடங்கும்.இதேபோல் விஜய்யும் தன் பங்கிற்கு22 ரன்களை எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.இந்திய அணி தனது முதல் இன்னிங்சின் பாலே ஆனை தவிற்க இன்னும் 348 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இன்று ஆடவுள்ளது.

பிபா கால்பந்து போட்டி நடுவராக இந்தியப் பெண்

கேரளா,ஜுலை.28
சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபாவின் நடுவர் பயிற்சிக்கு கேரளத்தைச் சேர்ந்த பென்ட்லா டி கோத் இந்த பயிற்சிக்கு முதல் இந்தியப் பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நடுவர் பயிற்சி ஆகஸ்ட் 1 முதல் 6ம் தேதி வரை நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 27 ஆண்களும் 3 பெண்களும் பங்கேற்கின்றனர். சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கும் நடுவர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
பென்ட்லா டி கோத் முன்னாள் கால்பந்து வீராங்கனையாவார். இதுவரை ஒலிம்பிக் போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், தென்கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளின் கால்பந்து நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார் .

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா பின்னடைவு

லண்டன்,ஜுலை.28
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்ட்ரேலியா 11 என்று சமன் செய்ததால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்ட்ரேலியா சமீபத்தில் முதன் முறையாக 4வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
லீட்ஸ் டெஸ்ட் தோல்வியானது கேப்டனாக ரிக்கி பாண்டிங் பொறுப்பேற்று பாகிஸ்தானுக்கு எதிராக வாங்கும் முதல் தோல்வியாகும்.இலங்கை அணி இந்தியாவை படுதோல்வியுறச் செய்ததன் மூலம் 3வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்ததால் இந்தத் தோல்வி ஏற்பட்டது . இதனால் வீரர்களின் தன்னம்பிக்கை பறிபோய்விட்டது என்று கூறுவதற்கிடமில்லை. இந்த வாரம் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை என்று பாக்வுடனான தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பாண்டிங்.
சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள அணிகளின் விவரம்
1.இந்தியா,2.தென்னாப்பிரிக்கா,3.இலங்கை,
4.ஆஸ்திரேலியா,5.இங்கிலாந்து,6.பாகிஸ்தான்,
7.நியுஸிலாந்து,8.வெஸ்ட் இண்டிஸ்,9.பங்களாதேஷ்

ஏ.டி.பி. தரவரிசை நடால் தொடர்ந்து முதலிடம்

லண்டன்,ஜுலை.28
ஏ.டி.பி. வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் விம்பிள்டன் சாம்பியன் ரஃபேல் நடால் 10,475 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.அவரை தொடர்ந்து செர்பியாவின் ஜோகோவிச் 6,905 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலுள்ளார்.
முதல் 10 இடங்கள் வருமாறு:
1.நடால் 10,475
2.ஜோகோவிச் 6,905
3.ரோஜர் ஃபெடரர் 6,795
4.ஆன்டி முர்ரே 5,155
5.ராபின் சோடர்லிங் 4,835
6.நிகோலே டேவிடென்கோ 4,285
7.யுவான் மார்டின் 4,270
8. டொமாஸ் பெர்டிச் 3,780
9. ஆன்டி ரோடிக் 3,490
10.பெர்ணான்டோ வெர்டாஸ்கோ 3,475

பயிற்சியாளராக நீடிக்க விருப்பம் மரடோனா


புனோஸ்,ஜுலை.28
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவின் தோல்வியால் அந்த அணியின் பயிற்சியாளர் பதவியில் மரடோனா நீடிப்பாரா ? இல்லையா? என்று குழப்பம் நிலவி வந்த நிலையில் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக தொடர எனக்கு விருப்பம்தான் என்று மரடோனா கூறியுள்ளார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் கால்யிறுதியில் ஜெர்மனியிடம் 04 என்ற கோல் கணக்கில் மிகவும் மோசமாக தோற்றது.
இந்த தோல்வியால் பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது.ஆனால் மரடோனாவை நீக்காமல் மேலும் 4 ஆண்டுகளுக்கு பயிற்சியாளராக நீடிப்பார் என்று கால்பந்து சங்கம் அறிவித்தது. அதோடு மட்டுமில்லாமல் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் இறுதி முடிவை மரடோனாவே எடுக்க வேண்டும் என்றும் கூறியது.
இந்நிலையில் பயிற்சியாளராக தொடருவது குறித்து கருத்து தெரிவித்த மரடோ னா:
அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக தொடர எனக்கு விருப்பம்தான்.ஆனால் தற்போது எனக்கு உதவியாளர்களாக இருப்பவர்களே தொடர்ந்து என்னுடன் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நான் நிச்சயமாக பயிற்சியாளர் பதவியில் நீடிக்க விரும்பமாட்டேன் என்று கூறியுள்ளார். மரடோனாவின் உதவியாளராக இருக்கும் ஆஸ்கர் ரக்கெரி மீது அர்ஜென்டினா கால்பந்து சங்கத் தலைவர் ஹம்பர்டோ கிராடனோவுக்கு நல்ல அபிப்பராயம் இல்லை மற்றும் ரக்கெரியை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று மரடோ னாவை ஹம்பர்டோ நிர்பந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 27, 2010

தேசிய சப்ஜூனியர் நீச்சல் போட்டி: தமிழக வீரர் புதிய சாதனை!

சென்னை, ஜூலை 27
பெங்களூரில் நடந்த தேசிய சப்ஜூனியர் நீச்சல் போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட இளம் நீச்சல் வீரர் தனுஷ் 200 மீட்டர் தனிநபர் பிரிவில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
பிணி தீர்க்க
தனது ஐந்தாவது வயதில் ஏற்பட்ட நுரையீரல் ஒவ்வாமை நோய்க்காக நீச்சல் பயிற்சி மேற்கொண்ட தனுஷ் பின்னர் ஆர்வமாகி நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வந்தார். சமீபத்தில் பெங்களூரில் நடந்த தேசிய சப்ஜூனியர் நீச்சல் போட்டியில் தமிழகம் சார்பில் தனுஷ் பங்கேற்றார். அதில், தனிநபர் 200 மீட்டர் "மெட்லி' பிரிவில், தேசிய அளவில் புதிய சாதனையும், இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை தனுஷ் வென்றார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வரும் தனுஷ், இதுவரை தேசிய அளவில் ஏழு, தென்மண்டல அளவில் நான்கு, மாநில அளவில் 52, மாவட்ட அளவில் 43 பதக்கங்கள் மற்றும் ஒன்பது சாம்பியன்ஷிப் பட்டங்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.
வெற்றி குறித்து தனுஷ் கூறும்போது, "தொடர்ந்து நீச்சல் பழகுவதால், சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை மற்றும் படிப்பிலும் அதிக ஆர்வம் ஏற்படுகிறது' என்றார்.

இந்திய அணி சிம்ம சொப்பனமாகத் திகழும்!

சிட்னி, ஜூலை 27
பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறது. அந்தப் பயணத்தின்போது ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறது.
இந்தத் தொடர் குறித்து கருத்து கூறிய கேடிச், இந்தியாவுடனான டெஸ்ட் தொடருக்காக ஆஸி. அணியில் இடம் பெற்றுள்ள சில இளம் வீரர்களுக்கு இந்த தொடர் மிகவும் கடினமான ஒன்றாக அமையும். இந்தியாவில் இதற்கு முன் விளையாடாத சில இளம் வீரர்களுக்கு இந்த தொடர் ஒரு பெரிய சவால் என்றார்.



பாக்.குடனான டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன், ஜூலை 27
ஆஸ்திரேலியாவுடனான தொடர் முடிவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துடன் 4 டெஸ்ட், இரண்டு 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் போட்டி ஆகியவற்றில் விளையாடுகிறது.
இந்தப் போட்டிக்காக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:
ஸ்ட்ராஸ் (கேப்டன்), அலிஸ்டர் கூக், காலிங்வுட், பீட்டர்சன், ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஸ்டீபன் பின், மார்கன், பிரையர், அஜ்மல் ஷாசாத், ஸ்வான், ஜோனதன் டிராட் ஆகியோர் அனியில் இடம் பெற்றுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி வரும் 29ம் தேதி தொடங்குகிறது.

பிரான்ஸ் வீரர்கள் கூண்டோடு நீக்கம்!


பாரிஸ், ஜூலை 27
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இடம் பெற்றிருந்த 23 பிரான்ஸ் வீரர்ளையும் புதிய பயிற்சியாளர் லாரன்ட் பிளாங்க் அணியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் அணி பல சர்ச்சைகளை சந்தித்தது.
1. பிரான்ஸ் அணியின் முன்னணி வீரரான நிகோலஸ் அனால்கா பயிற்சியாளர் ரேமாண்ட் டொமினிக்குடன் மோதலில் ஈடுபட்டார்.
2. தொடர்ந்து உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட அனால்கா பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
3. பயிற்சியாளர் ரேமாண்ட் டொமினிக்கை எதிர்த்து பிரான்ஸ் வீரர்கள் கேப்டன் பேட்ரிஸ் எவ்ரா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு நாள் பயிற்சியில் ஈடுபடவும் மறுத்தனர்.
4. உலகக் கோப்பையில் இறுதியாக தென்னாப்பிரிக்காவுடன் நடந்த போட்டியில் பிரான்ஸ் கேப்டன் பேட்ரிஸ் எவ்ரா உள்பட பல முக்கிய வீரர்கள் கரையில் வைக்கப்பட்டனர். தென்னாப்பிரிக்காவிடம் 21 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் தோற்றது.
5. உலகக் கோப்பை போட்டியில் ஒரு வெற்றி கூட பெறாமல் பிரான்ஸ் அணி படுதோல்வி கண்டு நாடு திரும்பியது.
6. பயிற்சியாளர் ரேமாண்ட் டொமினிக் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக லாரன்ட் பிளாங்க் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
7. படுதோல்விக்குப் பொறுப்பேற்று பிரான்ஸ் கால்பந்து சங்கத் தலைவர் ஜீன் பியரா பதவி விலகினார். அவர் மீது பிரெஞ்சு நாடாளுமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு "பிபா' கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
8. கடந்த 1998ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த மார்ஷல் டிசெய்லி, லிலியன் துராம் ஆகியோர் உலகக் கோப்பையில் பிரான்ஸ் கேப்டனாகப் பணியாற்றிய பேட்ரிஸ் எவ்ராவுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரிக்கை விடுத்தனர்.
9. உலகக் கோப்பை படுதோல்வி குறித்து தன்னிடம் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிரான்ஸ் கேப்டன் தியேரி ஹென்றிக்கு பிரான்ஸ் அதிபர் சர்கோசி உத்தரவிட்டார்.
10. உலகக் கோப்பை தோல்விக்குக் காரணமாக இருநத அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரான்ஸ் அதிபர் சர்கோசி அறிவித்தார்.
இப்படி பல சர்ச்சைகளை உருவாக்கிய பிரான்ஸ் வீரர்கள் அத்தனை பேரும் கூண்டோடு அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆஸ்லோ நகரில் நார்வே அணியுடன் பிரான்ஸ் ஒரு நட்பு ஆட்டத்தில் மோதுகிறது. இந்தப் போட்டியில் உலக கோப்பை போட்டியில் இடம் பெற்ற 23 பிரான்ஸ் வீரர்களும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குப் பதிலாக முற்றிலும் புதிய 23 வீரர்கள் அணியில் இடம் பெற உள்ளனர். புதிய வீரர்களை பிரான்ஸ் பயிற்சியாளர் லாரண்ட் பிளாங்க் ஆகஸ்ட் 5ம் தேதி பிரான்ஸ் கால்பந்து சங்க நிர்வாகிகள் முன்னிலையில் அறிவிக்கிறார்.