Sunday, August 8, 2010

கல்மாடி உறுதிமொழி தரவேண்டும்

புதுடெல்லி,ஆக.3
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளுக்குக் கட்டப்பட்ட கட்டுமானங்கள் மோசமான நிலையிலுள்ளதாக கூறி சுரேஷ் கல்மாடி மீது காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி விளையாட்டு மைதானங்கள் அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், ஆனால் கட்டுமானங்கள் பல இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளதால் கட்டுமானங்கள் சரிசெய்யப்படும் என்பதற்கான எழுத்துவழி உறுதிமொழியையும் கோரியுள்ளது. காமன்வெல்த் கட்டுமானப்பணிகள் பொதுப்பணித்துறையாலும், டெல்லி மாநகராட்சியாலும், மத்திய பொதுப்பணித் துறை மற்றும் டெல்லி நகர மேம்பாட்டு ஆணையம், புதுடெல்லி நகராட்சி கவுன்சில், ஆர்.ஐ.டி.இ.எஸ். ஆகியவையாலும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்புத் துறை அம்பலப்படுத்தியுள்ளது. கட்டுமானப்பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட பின்பும் ஒப்பந்தப்புள்ளி தொகையை மாற்றியது, அதிக விலைக்கு ஒப்பந்தங்களை வழங்கியது, தகுதியற்றவர்களுக்கு இந்த ஒப்பந்தங்களை வழங்கியது ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.பி.ஐ. விசாரணை தேவை என்று மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை பரிந்துரை செய்துள்ளது.

No comments:

Post a Comment