Sunday, August 8, 2010

ஜூனியர் பேட்மிண்டன் போட்டி சித்தார்த் வெற்றி

சென்னை, ஆக.5
சென்னை மாவட்ட அளவிலான 19 வயதுக்குட்பட்ட வர்களின் ஜூனியர் பேட்மிண்டன் போட்டி அடையாறிலுள்ள இந்திரா நகரில் நடந்தது.
இதில் ஆண்கள் பிரிவில் ஆர்.சித்தார்த் ராஜா 2118, 1821, 2110 என்ற செட்கணக்கில் மோகன கிருஷ்ணனை தோற்கடித்து பட்டம் வென்றார். இதேபோல் பெண்கள் இறுதி ஆட்டத்தில் கார்த்தி விசாலாட்சி 217, 217 என்ற நேர் செட்டில் சிந்தூரியை வீழ்த்தினார்.
இந்த போட்டிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சித்தார்த் ராஜா, கார்த்தி விசாலாட்சி உள்பட 7 ஜூனியர் வீரர், வீராங்கனைகள் கேரளாவில் நடக்கும் மாவட்டங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இருப்பதாக சென்னை மாவட்ட பேட்மிண்டன் சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment