Sunday, August 8, 2010

வடகொரியா கால்பந்து பயிற்சியாளருக்கு மரண தண்டனை!


பான்யாங், ஆக.2
உலக கோப்பை கால்பந்து போட்டியில் வடகொரியா அணிக்கு ஏற்பட்ட மோசமான தோல்வியின் காரணமாக அந்த அணியின் பயிற்சியாளர் கிம்ஜாங்ஹபூன் நீக்கப்பட்டுள்ளார்.
வடகொரியா 1966ம் ஆண்டுக்கு பிறகு இந்த முறை தான் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.இந்நிலையில் அந்த தான் போட்டியிட்ட 3 லீக் ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. பிரேசிலிடம் 12 என்ற கணக்கிலும், ஐவேரிகோஸ்டிடம் 03 என்ற கணக்கிலும் ,போர்ச்சுக்கல்லிடம் 07 என்ற கோல்கணக்கிலும் தோல்வியுற்றது. இப்படி லீக் ஆட்டத்தில் வடகொரியா அணிக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாக அந்த அணியால் ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெறமுடியாமல் போனது.உலக கோப்பை கால்பந்து போட்டியின்முதல் சுற்றிலேயே வடகொரியா வெளியேறியதை அந்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இதனால் அந்த அணி நாடு திரும்பியதும் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்குட் படுத்தப்பட்டது. விசாரணையின் போது
தோல்விக்கு காரணம் பயிற்சியாளர் தான் என்று வீரர்கள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அவர் பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டார்.
மேலும் இந்த தோல்வியால் கிம்ஜாங் நாட்டையே அவமானப்படுத்தி விட்டதாக விசாரணை குழு குற்றம் சாட்டியது. இது அந்நாட்டு அதிபருக்கு அவமதிப்பு ஏற்பட்டதாக கருதப்படுகிறது.
அந்நாட்டு சட்டப்படி அதிபரை அவமானப்படுத்து வதற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் வடகொரியாவில் 2 அதிகாரிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது .உலக கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்காக பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலில் பிரேசில் பயிற்சியாளர் துங்கா நீக்கப்பட்டார். அவரை தொடர்ந்து அர்ஜென்டினா பயிற்சியாளர் மரடோனா நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment