Sunday, August 8, 2010

பேடி சாதாரண பந்து வீச்சாளர் முரளிதரனுக்கு கண்டனம்


டெல்லி,ஆக.4இந்திய முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் பேடி ஒரு சாதாரண பந்து வீச்சாளர் என்றும் அவருக்கு சர்ச்சைகளை கிளப்புவதே வேலை என்றும் கூறியிருந்த முரளிதரனுக்கு பிரசன்னா மற்றும் மணீந்தர்சிங் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டிகயிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு முரளிதரன் அளித்த பேட்டி ஒன்றில் தனது பந்து வீசும் முறை பற்றி பேச பேடிக்கு தகுதியில்லை என்பது போல காரசாரமாக விமர்சித்திருந்தார்.
இது குறித்து முன்னாள் இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் கூறியதாவது:
முரளிதரனின் கருத்து தேவையற்றது.
பிரசன்னா:
அவரது பந்து வீச்சை அனுமதிப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகள் வளைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
மணீந்தர்சிங்:
பேடி போன்ற மிகச் சிறந்த பந்து வீச்சாளரை குறை கூறி தன்னுடைய பெருமையை குறைத்து கொள்கிறார் முரளிதரன்.
அவருக்கு அளித்தது போல பேடிக்கும் கையை வளைத்து பந்து வீச அனுமதிக்கப்பட்டிருந்தால் பேடியும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார் மேலும் முரளிதரன் இதுபோன்ற கருத்துக்களை கூறாமல் இருப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment