Sunday, August 8, 2010

காமன்வெல்த் கட்டுமானப் பணிகளில் நிதிமுறைகேடு விசாரனை நடத்த உத்தரவு

புது டெல்லி,ஆக.2

காமன்வெல்த் போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட சில நிறுவனங்கள் நிதிமுறைகேட்டில் ஈடுபட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சக செயலாளர் சந்திரசேகர், நேரில் ஆய்வு செய்து இதுதொடர்பான விசாரணையை மேற்கொள்வார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காமன்வெல்த் போட்டிகளுக்கான திட்டங்கள் தாமதமாவதற்கான காரணங்கள் குறித்தும் சந்திரசேகர் விசாரணை நடத்துவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, லண்டனைச் சேர்ந்த ஏ எம் பிலிம்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களிடம் அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என்று டெல்லி மாநில முதலமைச்சர் ஷீலா தீட்சித் உறுதியளித்துள்ளார். காமன்வெல்த் போட்டிகள் தொடர்பான அனைத்துப் புகார்களையும் போட்டிக்குழு நிர்வாகம் நிராகரித்துள்ளது. இப்போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒரு சில நிறுவனங்கள் நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதால், அவற்றின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐயிடம் மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை புகார் அளித்துள்ளது

No comments:

Post a Comment