Sunday, August 8, 2010

ஊழல் குற்றச்சாட்டில் கல்மாடி ஆதரவாளர்

டெல்லி,ஆக.4
காமன்வெல்த் போட்டி நடைபெறுமா என்று கேள்வி எழும் வண்ணம் நாளுக்கு நாள் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் நடைபெற்றுள்ள ஊழல்கள் பற்றி செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன.இந்நிலையில் காமன்வெல்த் போட்டிக்கான கட்டுமானப் பணிகளில், பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான கல்மாடியின் ஆதரவாளர் தர்பாரியை பதவியிலிருந்து நீக்குமாறு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளாதாக எழுந்த புகாரையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சுரேஷ் கல்மாடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காமன்வெல்த் போட்டிகள் ஒருங்கிணைப்பு கமிட்டியில் இருந்து அதன் துணைத் தலைவர் டி.எஸ்.தர்பாரியை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.டி.எஸ்.தர்பாரி காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டியின் வருவாய் மற்றும் நிதியை கையாள்பவர்.இவர் மீது ஏற்கனவே கேரளா சுங்கத்துறையில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காமன்வெல்த் முறைகேடுகளில் அயல்நாட்டு நிறுவனங்களின் பங்குள்ளதா என்று அமலாக்கத்துறை இயக்ககமும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

No comments:

Post a Comment