Sunday, August 8, 2010

ஸ்பானீஷ் லீக் போட்டிநடத்தும் வாய்ப்பை இழந்தது சிங்கப்பூர்

சிங்கப்பூர்,ஆக.2
முதல் ஸ்பானீஷ் லீக் சர்வதேச கோப்பைக்கான கால்பந்து போட்டியை சிங்கப்பூரில் நடத்த வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
ஸ்பானீஷ் லீக் போட்டியை ஆசிய நாடுகளில் பிரபலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் சர்வதேச ஸ்பானீஷ் லீக் போட்டியும் ஒன்று. அதாவது ஒவ்வொரு வருடமும் இந்த போட்டி ஸ்பெயினை தவிர்த்து ஏதாவது ஒரு ஆசிய நாட்டில் நடைபெறும்.இதில் ஸ்பானீஷ் லீக்கில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுடன் போட்டியை நடத்தும் நாட்டின் தலைசிறந்த அணி ஒன்றும் மோதும்.ஒவ்வொரு ஸ்பானீஷ் லீக் போட்டி துவங்குவதற்கு முன் இந்த போட்டி நடைபெறும்.
முதல் சர்வதேச ஸ்பானீஷ் லீக் வருகிற 2011ம் ஆண்டு ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் போட்டியை தென்கிழக்காசிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் நடத்த லாலீகா விரும்புகிறது. இது குறித்து விவாதிப்பதற்காக அந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பிரான்சிஸ்கோ ரோகா பெரஸ் நேற்று சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூர் கால்பந்து சங்க நிர்வாகிகளுடன் இது குறித்து விவாதித்ததார். ஆனால் சிங்கப்பூரில் முதல் சர்வதேச ஸ்பானீஷ் லீக் போட்டியை நடத்த வாய்ப்பு குறைவு எனத் தெரிய வருகிறது. முக்கியமாக அங்கு ஸ்டேடியம் வசதி குறைவாக உள்ளதே இதற்கு காரணம்.
இது குறித்து சிங்கப்பூர் கால்பந்து சங்கத் தலைவர் சைனுதீன் நுர்தீன் கூறுகையில்,''புகழ்பெற்ற பார்சிலோனா, ரியல்மாட்ரிட் போன்ற அணிகள் விளையாடும்பட்சத்தில் பிரமாண்டமான ஸ்டேடியங்கள் தேவை. சிங்கப்பூரின் பெரிய ஸ்டேடியமான நேஷனல் ஸ்டேடியத்தில் தற்போது புணரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அதனால் முதல் போட்டி சிங்கப்பூரில் நடக்க வாய்ப்பில்லை.புணரமைப்பு பணி முடிந்து விட்டால் இந்த போட்டியை சிங்கப்பூரில் நடத்த வாய்ப்பிருக்கிறது'' என்றார்.

No comments:

Post a Comment