Sunday, August 8, 2010

/கடைசி டெஸ்ட்
425 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது இலங்கை
கொழும்பு,ஆக.5
இந்தியா இலங்கை மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றுவருகிறது.இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேரமுடிவில் 425 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
இரண்டாவது நாள் ஆட்டம்
முதல் நாள் ஆட்டமுடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது இலங்கை அணி.நேற்று சமரவீரா 65 ரன்னுடனும், மேத்ஹீஸ் 26 ரன்னுடனும் தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கி விளையாடினார்கள்.ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இந்த ஜோடி நிதான போக்கை கடைபிடித்தது.இந்த ஜோடிகளின் சீரான ஆட்டத்தால் இலங்கை அணி 88.5 வது ஓவரில் 300 ரன்னை தொட்டது.
ஒஜா அபாரம்
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடியை ஒஜா பிரித்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மேத்யுஸ் 45 ரன்னில் ஒஜாவின் பந்தில் எல்.பி.டபிள்ஹீயு ஆகி வெளியேறினார். மேத்யுஸ் அவுட்டாகியபோது இலங்கை அணியின் ஸ்கோர் 330 ஆக இருந்தது. 5வது விக்கெட்டுக்கு இனைந்த இந்த ஜோடி 89 ரன் எடுத்தது.அடுத்ததாக பிரசன்ன ஜெயவர்த்தனே களமிறங்கினார்.இவரை வந்த சிறிது நேரத்திலேயே பெவிலியனுக்கு அனுப்பினார் ஒஜா.இவரது விக்கெட்டையும் எல்.பி.டபிள்ஹீயு முறையிலேயே ஒஜா கைப்பற்றினார்.
சமரவீரா சதம்
பிரசன்ன ஜெயவர்த்தனே9 ரன்களே எடுத்தார்.அடுத்து ரந்தீவுடன் ஜோடி சேர்ந்த சமரவீரா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 229 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 60வது டெஸ்ட்டு போட்டியில் விளையாடும் அவருக்கு இது 12வது சதம் ஆகும். இந்தியாவுக்கு எதிராக இது 3வது சதமாகும்.சமரவீராவின் ஆட்டத்தால்தான் நேற்று இலங்கை அணியின் ரன்கள் எண்ணிக்கை ஒரளவுக்கு உயர்ந்தது. இந்த இரு ஜோடிகளும் மதிய உணவு இடைவேளையின்வரை ஆட்டமிழக்காமல் சமரவீரா 107 ரன்னுடனும், ரந்தீவ் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 369 ரன் எடுத்திருந்தது.
விரைவாக விழுந்த விக்கெட்டுகள்
அதன் பிறகு களமிறங்கிய இந்த ஜோடியால் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடமுடியவில்லை.ரந்தீவ் 8 ரன்கள் எடுத்திருந்த போது சேவாக் பந்துவீச்சில் டிராவிட்டிம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த வீரர்களை இந்திய வீரர் இஷாந்த சர்மா தனது வேகத்தில் வீழ்த்தினார்.மலிங்கா 4 ரன்னிலும், மெண்டீஸ் 3 ரன்னிலும், வெளிகேந்திரா 4 ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர்.அபாரமாக விளையாடி சமரவீரா 137 ரன்கள் எடுத்து கடைவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.முடிவில் இலங்கை அணி 138 ஓவரில்425 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்தியா தரப்பில் ஓஜா 4 விக்கெட்டுகளும், இசாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், சேவாக் மற்றும் மிஸ்ரா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதில் சங்கக்காரா, மகிளா ஜெயவர்த்தனே , மேத்தீயுஸ், பிரசன்னா ஜெயவர்த்தனே ஆகியோர் ஒஜாவின் சுழலில் சிக்கினார்கள்.
சேவாக் அபாரம்
இதன் பிறகு இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடியது.இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சேவாக்கும்தமிழக வீரர் விஜய்யும் களமிறங்கினர்.இன்னிங்ஸ் ஆரம்பித்தவுடன் முதல் நான்கு ஒவர் அமைதியாக இருந்த சேவாக் பிறகு தனது வழக்கமான அதிரடியை காட்டத் தொடங்கினார்.அதிலும் இலங்கையின் வெலகேதரா வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.ஒவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து இலங்கை அணியிரை படாய்படுத்தினார்.இவருக்கு பக்கபலமாக விளையாடிக் கொண்டிருந்த விஜய் மலிங்காவின் பந்துவீச்சில் ஆப் சைடில் அடிக்க அது அவருக்கு ஆப்பாக அமைந்துவிட்டது.விஜய் அடித்த அந்த பந்தை மெண்டிஸ் அழகாக கேட்ச் பிடித்து அவரை 14 ரன்களில்வெளியேற்றினார்.
நிதான ஆட்டம்
இதன் பிறகு டிராவிட் களமிறங்கினார்.வழக்கம் போல் அவர் தனது நிதான ஆட்டத்தை தொடர்ந்தார்.மறுமுனையில் சேவாக் தனது வழக்கமான ஆட்டத்தை தொடர்ந்தார்.இந்நிலையில் பொறுமையாக அடிக்கொண்டிருந்த டிராவிட் மேத்யு வீசிய பந்தினை தவறுதுலாக கால்காப்பினுள் வாங்கி 23 ரன்களில் வெளியேறினார்.அவர் அவுட்டாகும்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.இதன் பிறகு சாதனை மன்னன் சச்சின் களமிறங்கினார்.சச்சின் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார்.மறுமுனையில் சேவாக் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஆட்டம் பாதிப்பு
போதிய வெளிச்சமின்மையால் நேற்றைய ஆட்டம் இரண்டு ஓவர்களுக்கு முன்னாதாக முடிக்கப்பட்டது.இந்த இரண்டு ஓவர்கள் விளையாடப்பட்டிருந்தால் சேவாக் தனது 21சதத்தை நிறைவு செதிருப்பார்.முடிவில் இந்திய அணி 2விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது.

சச்சினுக்கு பாராட்டு
அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்ததற்காக சச்சின் தெண்டுல்கருக்கு நாடாளுமன்றத்தில் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கேள்வி நேரத்துக்கு முன்பு பேசிய சபாநாயகர் மீராகுமார், சச்சின் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
அடுத்தடுத்து சாதனைகள் மூலம் இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை தேடித்தரும் அவர்,
தற்போது 169வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்றுள்ளவர் என்ற பெருமையை பெற்றுள்ளதற்காக, மக்களவை உறுப்பினர்கள் சார்பில் சச்சினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment