Sunday, August 8, 2010

லண்டன் ஒலிம்பிக் போட்டி இந்திய வீரர் தகுதி


புதுடெல்லி,ஆக.2
உலக துப்பாக்கி சுடும் போட்டி ஜெர்மனியில் உள்ள முனிச்நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் ககன் நரங்குக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் முதல் இந்திய வீரர் என்னும் சிறப்பை பெற்றுள்ளார்.
உலகத் துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் ககன் நரங் வெண்கல பதக்கம் வென்றார். உலகின் இரண்டாம் நிலை வீரரான ககன் தகுதி சுற்றில் 597 புள்ளிகளும், இறுதி சுற்றில் 102 புள்ளிகளும் ஆக மொத்தம் 699 புள்ளிகள் பெற்றார்.
உலக சாம்பியன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றதன் மூலம் ககன்நரங் 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதனால், லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் ககன் நரங் ஆவார். ராஜூவ்காந்தி கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்ட மறுதினத்தில் ககன் இந்த முத்திரையை பதித்து உள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சுடும் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனான அபினவ் பிந்த்ரா ஏமாற்றம் அளித்தார். 25வது இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. இத்தாலி வீரர் நிக்கோலோ 702.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கமும், அங்கேரி வீரர் பீட்டர் சிடி 700.4 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

No comments:

Post a Comment