Sunday, August 8, 2010

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி அரையிறுதியில் கோவாபஞ்சாப்


கொல்கத்தா,ஆக.5

64வது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்சந்தோஷ் டிராபி போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.இதில் கோவா ,பஞ்சாப் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி மேற்கு வங்காளத்தில் நடந்து வருகிறது. இதில் 'பி' பிரிவின் காலிறுதி கடைசி ஆட்டத்தில் கோவாசர்வீசஸ் அணிகள் மோதின.இந்த போட்டியில் 40 என்ற கோல் கணக்கில் சர்வீசஸ் அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது கோவா அணி.
மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி கர்நாடாகாவை 51 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து 'பி' பிரிவில் 2வது இடம் பிடித்தது.வருகிற 6ந் தேதி 'ஏ' பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் பஞ்சாப் அணியும் 2வது இடம் பிடிக்கும் அணியுடன் கோவா அணியும் மோதுகின்றன.

No comments:

Post a Comment