Sunday, August 8, 2010

ஸ்பெயின் நெதர்லாந்து அணிகளுக்கு 'பிபா' அபராதம்

ஜோகன்னஸ்பர்க்,ஆக.5
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.இறுதி போட்டியில் முரட்டுதனமாக ஆடியதால் இந்த இரு அணிகளுக்கும் 'பிபா' அபராதம் விதித்துள்ளது.
ஜோகன்ஸ்பர்க்கில் கடந்த 11ஆம் தேதி உலக கோப்பை இறுதி ஆட்டம் நடந்தது. இதில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணி வீரர்களுமே முரட்டு ஆட்டத்தை கடைபிடித்தனர். இதனால் போட்டியில் நடுவராக பணியாற்றிய ஹோவர்டு வெப் மொத்தம் 14 மஞ்சள் அட்டைகளை வழங்கினார்.இதில் நெதர்லாந்து வீரர் ஜான் ஹெட்டிங்கா இரு மஞ்சள் அட்டைகளை பெற்றதோடு களத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார்.
'பிபா'விதி முறைகளின் படி ஒரு போட்டியில் அதிகபட்சமாக இரு அணியிலும் 5 வீரர்கள் மஞ்சள் அட்டை பெறலாம். அதற்கு மேல் மஞ்சள் அட்டைகள் பெற்றால் இரு அணிகள் மீதும் ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விதிமுறைப்படி இறுதி போட்டியில் விளையாடிய இந்த இரு அணிகளுக்கும் 'பிபா' அபராதம் விதித்துள்ளது.ஸ்பெயின் அணிக்கு 6 ஆயிரம் பவுண்டுகளும் நெதர்லாந்து அணிக்கு 9 ஆயிரம் பவுண்டுகளும் அபராதமாக விதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment