Tuesday, May 18, 2010

இங்கிலாந்து அணி சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளதுஸ்ரீநாத்

மும்பை,மே .18

2010ம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சு தான் ஆதிக்கம் செலுத்தியது என்று இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.டி 20 உலக கோப்பை குறித்து ஸ்ரீநாத் மேலும் கூறியதாவது: நடந்த முடிந்த உலக கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வேகப்பந்து வீச்சை இன்னும் சிறப்பாக மேம்படுத்த வேண்டிய சூழ்நிலையை உணர்ந்திருக்குமென்று நம்புகிறேன்.இந்திய ஆடுகளங்களுக்கும்,வெளிநாட்டு ஆடுகளங்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை இப்போதாவது இந்திய வீரர்கள் உணர்ந்திருபார்கள்.வேகப்பந்து வீச்சை நன்றாக ஆடத் தெரிந்தவர்களே இந்த தொடரில் சிறந்த வீரர்களாக இருந்தனர்.இந்த தொடரில் ஆஸ்திரேலியா,இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே என்னைக் கவர்ந்தது.இந்த இரண்டு அணிகள் மட்டும் தான் எந்தவித சிக்கலுமின்றி அரையிறுதிக்கு சென்றது.ஆஸ்திரேலிய அணியின் வாட்சனும்,வார்னரும் ஷாட் பிட்ச் பந்துகளை கையாண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது.கடந்த சில மாதங்களாக சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ள இங்கிலாந்து அணி உலக கோப்பை வெல்லும் தகுதியான அணியாக தெரிந்தது.ஏனென்றால் இங்கிலாந்து அணியில் இளமையும், அனுபவும் கலந்த அணியாக இருந்தது என்று கூறினார்.

இரவு நேர பார்ட்டிகள் என்னை பாதிக்கவில்லை சோபர்ஸ்


பார்படாஸ், மே 18

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் கேரி சோபர்ஸ் இரவு நேர மதுபான பார்ட்டிகள் என்னுடைய கிரிக்கெட் ஆட்டத்தை எப்போதும் பாதித்ததில்லை என்று கூறியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் 35 ஆண்டுகால சாதனையை கடந்த சனிக்கிழமையன்று (15.05.2010) கொண்டாடினார். உலக கோப்பை போட்டியில் தோற்பதற்கு ஐ.பி.எல் பார்ட்டி தான் காரணம் என்ற தோனியின் கருத்து கூறியது முதற்கொண்டு பல்வேறு கண்டனக் குரல் வந்த வண்ணம் இருந்தது. இந்த கருத்து குறித்து சோபர்ஸிடம் கேட்ட போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கு முதல் நாள் இரவு நான் பல பார்ட்டிகளில் பங்கேற்றாலும் அது என் கிரிக்கெட் ஆட்டத்திறனை பாதிக்காமல் பார்த்துக்கொண்டேன். இதனை உறுதி செய்யும் விதமாக ஆடுகளத்தில் இறங்கி பலமுறை சதம் அடித்து என் ஆட்டத்திறனை உறுதி செய்துள்ளேன். இந்த முறையானது எல்லா வீரர்களுக்கும் பொருந்தாது. அது அவரவர்களின் உடல் திறனைப் பொறுத்தது. எத்தகைய சூழலையும் தாங்கிக் கொள்ளும் தன்மை என் உடலில் இயற்கையாகவே இருந்ததால் இரவு பார்ட்டிகள் என்னை பாதித்ததில்லை. இதற்காக ஆட்டத்திற்கு முதல்நாள் இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வது சிறந்தது என்று சொல்லமாட்டேன். வீரர்களின் உடல் நிலையைப் பொறுத்து இரவு பார்ட்டிகளில் பங்கேற்பதும்,பங்கேற்காமலிருப்பதும். பார்ட்டிகளில் கலந்து கொண்ட நாட்களில் துங்கினால் அடுத்த நாள் சரியான நேரத்திற்கு எழுந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்பதால் பெரும்பாலான நேரங்களில் நான் தூங்கமாட்டேன்.வெற்றி இலக்கை எட்டும் வரை எனக்கு ஓய்வு என்பதே இல்லை. இதனால் என்னைப் பொறுத்தவரை இரவு நேர கட்டுப்பாடு என்பது தேவையில்லாத ஒன்று என கூறினார்.

மதுபான விடுதியில் ரகளை வீரர்கள் மீது நடவடிக்கை பி.சி.சி.ஐ

மும்பை மே.18

உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு மேற்கிந்திய தீவிலுள்ள மதுபான விடுதி ஒன்றில் மது அருந்த சென்ற இந்திய வீரர்கள் அங்கிருந்த ரசிகர்களுடன் ரகளையில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன.
மேற்கிந்திய தீவில் மதுபான விடுதியில் ரசிகர்களுடன் ரகளையில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ரோஹத் சர்மா, ஆசிஷ் நெஹரா, ஜடேஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறப்பட்டது. வீரர்களின் இந்த செயலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இந்த 4 பேர் மீது விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.சி.சி.ஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தின்போது, மேற்கிந்திய தீவில் மதுபான விடுதியில் இந்திய வீரர்கள் ரகளையில் ஈடுபட்டது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது.

உலககோப்பை டுவென்டி20 ஆஸ்திரேலியா சாம்பியன்

பார்படாஸ், மே.18

மேற்கு இந்திய தீவுகளில் நடைப் பெற்று வந்த பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெஸ்ட் இண்டீசில் டுவென்டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பெண்களுக்கான இறுதிபோட்டியில் ஆஸ்திரேலியாநியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.
டாஸ் வென்று முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20ஓவரில் 8விக்கெட் இழப்பிற்கு 106ரன் எடுத்தது.
பின்னர் 107ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து பெண்கள் அணி இறுதி வரை போராடியது. ஆனால் 20ஓவர் முடிவில் அந்த 6விக்கெட் இழப்பிற்கு 103ரன் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா பெண்கள் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.


சிறந்த வீரர்களால் சிறப்பான வெற்றி காலிங்வுட்

பார்படாஸ், மே.18

கிரிக்கெட் போட்டிகளின் தாயமாக கருதப்படும் இடம் இங்கிலாந்து.கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கப்பட்ட 1975ம் ஆண்டிலிருந்து 2010 இருபதுக்கு 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு வரை முக்கியமான தொடரிகளில் இங்கிலாந்து அணி சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பதிவு செய்ததில்லை.முதல் முதலாக இருபதுக்கு இருபது ஒவர் உலக கோப்பையில் வென்றுள்ளது.
உலக கோப்பையை வென்றது குறித்து இங்கிலாந்து அணித் தலைவர் காலிங்வுட் கூறுகையில், உலக கோப்பையை முதன் முறையாக இங்கிலாந்து அணி வென்றதில் பெருமை அடைகிறோம் என்றார்.
உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது ஆசஷ் வெற்றியை விட சிறந்தது என்று கூறிய காலிங்வுட், எங்கள் அணியில் சிறந்த வீரர்கள் இருந்ததால் கோப்பையை வெல்ல முடிந்தது என்றார்.
இந்தப் போட்டி முழுவதுமே நாங்கள் நன்றாக ஆடினோம் என்றும் சிறந்த அணியை வீழ்த்தி தான் உலக கோப்பையை வென்றுள்ளோம் என்றும் காலிங்வுட் கூறினார்.

மோடிக்கு எதிராக பிசிசிஐ நிர்வாகிகளின் அவசரக் கூட்டம்

மும்பை, மே.18

ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு எதிராக நேற்று மும்பையில் பிசிசிஐ தலைமை நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் லலித் மோடி ஐ.பி.எல் அமைப்பின் தலைவராக இருந்த போது நடைபெற்ற நிதி பரிவர்த்தனை மற்றும் ஐபிஎல் விவகாரம் ,மோடிக்கும் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே நடந்த இ மெயில் பரிவர்த்தனைகள்,ஏல ஆவணங்கள், அணி நிர்வாகங்களின் ஒப்பந்தங்கள், மீடியா உரிமைகள் குறித்த ஆவணங்கள், உரிமங்கள், ஸ்பான்சர்கள் குறித்த விவரங்கள் உள்ளிட்டவைப்பற்றிய
மோடியின் விளக்கம் ஆகியவை குறித்த ஆலோசனை நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கிறது. நேற்று முன்தினம் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட விளக்கத்தை லலித் மோடி சமர்ப்பித்த 48 மணி நேரங்களில் இக்கூட்டம் நடைபெறுவதால், இக்கூட்டம் அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிசிசிஐ மற்றும் ஐஎம்ஜி நிர்வாகிகளுக்கும் இடையே நடைபெறும் இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில், பிசிசிஐ தலைவர் சசன்க் மனோகர் மற்றும் செயலாளர் சீனிவாசன், ஐஎம்ஜி துணை தலைவர் ஆன்ட்ரிவ் ஒயிட்பிளட் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இங்கிலாந்து அணி சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது ஸ்ரீநாத்

மும்பை,மே .18

2010ம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சு தான் ஆதிக்கம் செலுத்தியது என்று இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.டி 20 உலக கோப்பை குறித்து ஸ்ரீநாத் மேலும் கூறியதாவது: நடந்த முடிந்த உலக கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வேகப்பந்து வீச்சை இன்னும் சிறப்பாக மேம்படுத்த வேண்டிய சூழ்நிலையை உணர்ந்திருக்குமென்று நம்புகிறேன்.இந்திய ஆடுகளங்களுக்கும்,வெளிநாட்டு ஆடுகளங்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை இப்போதாவது இந்திய வீரர்கள் உணர்ந்திருபார்கள்.வேகப்பந்து வீச்சை நன்றாக ஆடத் தெரிந்தவர்களே இந்த தொடரில் சிறந்த வீரர்களாக இருந்தனர்.இந்த தொடரில் ஆஸ்திரேலியா,இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே என்னைக் கவர்ந்தது.இந்த இரண்டு அணிகள் மட்டும் தான் எந்தவித சிக்கலுமின்றி அரையிறுதிக்கு சென்றது.ஆஸ்திரேலிய அணியின் வாட்சனும்,வார்னரும் ஷாட் பிட்ச் பந்துகளை கையாண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது.கடந்த சில மாதங்களாக சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ள இங்கிலாந்து அணி உலக கோப்பை வெல்லும் தகுதியான அணியாக தெரிந்தது.ஏனென்றால் இங்கிலாந்து அணியில் இளமையும், அனுபவும் கலந்த அணியாக இருந்தது என்று கூறினார்.

Wednesday, May 12, 2010

டி20 உலக கோப்பை அரையிறுதில் ஆஸ்திரேலியா

பார்படாஸ்,மே.11
தற்போதைக்கு ஆஸி அணிதான் யாராலும் வெல்ல முடியாத அணியாகத் தெரிகிறது. நன்றாக ஆடிவரும் இலங்கை அணியை சர்வ சாதாரணமாக அது தோற்கடித்தது.
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியிடம் இலங்கை படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்ட்ரலியா அரையறுதிக்கு சென்றது.
'எப்' பிரிவில் நடந்த சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்ட்ரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அந்த அணியின் ஒயிட் 49 பந்துகளில் 85 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.
பின்னர் விளையாடிய இலங்கை அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 87 ரன் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதையடுத்து 81 ரன் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலிய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு சென்றது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்சான் 12 பந்துகளில் 20 ரன் எடுத்தார்.

பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள் ,பேட்ஸ்மேன்கள் தான்....டோனி

கயானா,மே.11
இந்தியா மேற்கு இந்திய தீவுகளுக்கிடையே நேற்று முன் தினம் நடந்த போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியா அணியின் பலமே ""பேட்டிங்'' தான் 170 ரன் எடுக்க முடியாத இலக்கு இல்லை. ஆனால் எங்களது பேட்டிங் மோசமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் சரியாக ஆட வில்லை. நீண்ட பேட்டிங் வரிசை இருந்தும் இந்த இலக்கை எடுக்க முடியாமல் போனது ஏமாற்றமே.
சிறப்பான பந்துவீச்சு
பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர்.
எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே பந்து வீசினார்கள்.
பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் எங்களது சுழற்பந்து வீச்சுக்கு திணறினார்கள். குறிப்பாக ஹர்பஜன்சிங் சிறப்பாக வீசி நெருக்கடி கொடுத்தார். மற்ற அணிகளுடன் எங்களை ஒப்பிடுகையில் பந்துவீச்சு வரிசை வித்தியாசமானது தான்.
ஐ.பி.எல். காரணமல்ல
ஒய்வில்லாமல் ஐ.பி.எல். போட்டியில் விளையாடியது தான் தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்ட முடியாது. ஐ.பி.எல். போட்டிக்கும், 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கும் இடைவெளி சற்று குறைவுதான். ஓய்வு இல்லாமல் ஆடுவது ஒரு பெரிய விஷயம் இல்லை. அதனுடன் ஒப்பிடுவது துரதிருஷ்டவசமானது.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
டோனியின் சொதப்பல் முடிவு
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் ""டாஸ்'' வென்ற டோனி முதலில் பேட்டிங் செய்யாமல் பீல்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செய்த அதே தவறை மீண்டும் செய்தார்.டோனி தொடர்ந்து தவறான முடிவை எடுத்தது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.
மேலும் அணியில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. கூடுதலாக ஒரு வேகப்பந்து வீரரை தேர்வு செய்து இருக்கலாம். வினய்குமாருக்கு வாய்ப்பு அளித்து இருக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா 2 ஓவரில் 36 ரன்களை வாரி கொடுத்தார். இதனால் அவரை நீக்கி விட்டு வினய்குமாருக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டோனி அவ்வாறு செய்யாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஜடேஜாவின் செயல்பாடு நேற்று மோசமாக இருந்தது. ""பீல்டிங்'' பவுலிங், பேட்டிங்கில் சொதப்பினார். சந்திராபால் அடித்த பந்தை ""கேட்ச்'' பிடிக்க தவறினார். 2 ஓவரில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

அதிசயம் நிகழ்ந்தால் மட்டும் அரையிறுதியில்
இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்த நிலையில் உள்ளது. தொடரில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில் தான் உள்ளது.இருந்தாலும் கடைசி வாய்ப்பாக இலங்கையுடனான ஆட்டத்தில் இந்திய அணி மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் அதோடு மட்டுமில்லாமல் வெஸ்ட் இண்டிஸ் அணி ஆஸ்திரேலியாவிடம் மோசமாக தோற்க வேண்டும்.

ஜிம்பாப்வேவுடனான முத்தரப்பு தொடர் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு

சென்னை,மே10
ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா,இலங்கை, ஜிம்பாப்வே என 3 நாடுகள் கலந்து கொள்ளும் போட்டி மே 28ந்தேதி முதல் ஜூன் 9ந்தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான இந்திய வீரர்களை ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வு குழுவினர் நேற்று கொடைக்கானலில் தேர்வு செய்தனர்.
ஜிம்பாப்வேயில் இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் நடைபெற உள்ளது. மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2 சர்வதேச டுவென்டி 20 போட்டி நடக்க உள்ளது.
இப்போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
தெண்டுல்கர், டோனி, யுவராஜ் சிங், சேவாக், ஜாகீர்கான், கம்பீர், ஹர்பஜன்சிங், பிரவீன்குமார், ஆஷிஷ் நெஹரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் ரெய்னா (கேப்டன்) கோக்லி(துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், யூசுப் பதான், ரோகித் ஷர்மா, முரளி விஜய், வினய்குமார், உமேஷ் யாதவ், அசோக் திண்டா, அமித் மிஸ்ரா, நமன் ஓஜா, பிரையன் ஓஜா ,அஸ்வின்,பங்கத் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சோயிப் பயிற்சி உள்ளூர் வீரர்கள் கடும் எதிர்ப்பு

ஐதராபாத் ,மே10
ஐதராபாத்தில் சானியா மிர்சாவின் கணவர் சோயிப் மாலிக் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வதற்கு உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய டென்னிஸ் வீரர் சானியா மிர்சாவை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் திருமணம் செய்வதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பின்னர், அது சுமுகமாகத் தீர்க்கப்பட்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சானியாசோயிப் ஜோடி ஐதராபாத் வந்துள்ளது. அங்குள்ள லால் பகதூர் ஸ்டேடியத்தில் சோயிப் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டார். அவருக்குத் துணையாக சானியாவும் அங்கு சென்றிருந்தார். அப்போது அங்கு சென்ற ஐதராபாத் நகர கிரிக்கெட் வீரர்கள் சிலர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்ட சோயப் மாலிக், பயிற்சிகள் மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போர்ச்சுகல் ஒபன் டென்னிஸ் ரோஜர் ஃபெடரர் தோல்வி

எஸ்டோலியல்,மே10

உலகின் முதல் நிலை ஆட்டக்காரரும் சுவிட்சர்லாந் நாட்டு வீரருமான ரோஜர் ஃபெடரர் போர்ச்சுகல்லில் நடைபெற்று வரும் ஒபன் டென்னிஸ் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
எஸ்டோலியல் நகரில் நடைபெற்ற அரையிறுதி சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் மாண்டேன்சுடன் மோதினார் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் .
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 62 என்ற கணக்கில் முதல் சுற்றில் தன்னுடைய வெற்றியை பதிவு செய்தார் மாண்டே.
இதன் பிறகு 2வது சுற்றில் பெடரர் சுதாரித்துக் கொண்டு விளையாட இருவருக்கும் கடும் பலப்பரீட்சை நிலவியது. எவ்வளவோ முயர்ச்சித்தும் முடிவில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரோஜர் ஃபெடரர் தோல்வி அடைந்தர்.
அவரை எதிர்த்து விளையாடிய மாண்டே 76 (75) என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நுழைந்தார்.

டெல்லியில் ஆசிய மல்யுத்தப் போட்டி

டெல்லி,மே10
ஆசியாவைச் சேர்ந்த 21 நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய மல்யுத்த போட்டிகள் வரும் 12ந் தேதி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. 12 ந் தேதி தொடங்கும் மல்யுத்தப் போட்டிகள் 16 ந் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த தொடரில் இந்தியா ,ஈரான்,உஸ்பெகிஸ்தான்,கஜகஸ்தான்,கிர்கிஸ்தான்,
ஜப்பான்,வடகொரியா,தென்கொரியா,சீனா,
மங்கோலியா உட்பட மொத்தம் 21 நாடுகள் பங்கேற்கின்றன.இது குறித்து மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மந்தர் கூறியாதாவது:
நடக்கப் போகும் ஆசிய மல்யுத்தப் போட்டிகள் டெல்ல்யில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சியாக இந்த தொடர் அமையும்.
சீனியர் பிரிவில் நடக்கும் மல்யுத்தப் போட்டியில் பிரீ ஸ்டைல் ,கிரெகோ ரோமன் ஸ்டைல் முறைகளில் வீரர்கள் மோதவுள்ளனர்.இந்த தொடரில் பெய்ஜிங் ஒலிம்பிக்(2008),டென்மார்க் உலக சீனியர் மல்யுத்தப் சாம்பியன்ஷிப்பில்(2009) கலந்து கொண்டு பதக்கம் வென்ற பல வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.மல்யுத்த வீராங்கனைகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டியும் இத்தொடரில் இடம் பெறுகிறது.இந்த போட்டி தொடருக்காக டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்றார்.

டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தோல்வி குறித்து விசாரணை

கராச்சி, மே 10

நடைபெற்றுவரும் இருபதுக்கு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து நியுஸிலாந்துடனான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததால் வெளியேறுகிறது.இருபதுக்கு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸீலாந்து அணியிடம் ஒரு ரன்னில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது குறித்து அந்நாட்டு நாடாளுமன்ற குழு விசாரணை நடத்துகிறது.பர்படாசில் நேற்றுமுன் தினம் நடந்த ஆட்டத்தல் முதலில் விளையாடிய நியூஸீலாந்து அணி 20 ஓவர் முடிவில் 134 ரன்கள் எடுத்திருந்தது.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களே எடுத்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது. அதோடு இந்த இருபதுக்கு 20 உலக கோப்பை தொடரிலிருந்தும் வெளியேறியது.
பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான ஆட்டம் குறித்து அந்நாட்டு நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த உள்ளது.

நாடு திரும்புகிறார்பீட்டர்சன்

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பீட்டர்சன். அவருக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளது.இதனால் அவர் தனது நாட்டிற்கு செல்ல தீர்மானித்துள்ளதால் இன்று நடைபெறும் நியுஸிலாந்துடனான போட்டியில் மட்டும் விளையாடமாட்டார் என தெரிகிறது. நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் இரண்டு ஆட்டங்களிலும் பீட்டர்சன்னின் அதிரடியால் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணிக்கு இது மிகப் பெரிய இழப்புதான்.கிட்ட தட்ட ஏற்கனவே அரை இறுதியிக்கு தகுதி பெற்றுள்ள இங்கிலாந்து அணிக்கு நியுஸிலாந்துடனான ஆட்டம் மிகப் பெரிய நெருக்கடி இல்லை என்றாலும் பீட்டர்சன் இல்லாதது மிகப் பெரிய இழப்புதான் இங்கிலாந்து அணிக்கு.அரையிறுதியில் இங்கிலாந்து ஆடும்போது அவர் அணியோடு இணைந்து கொள்வார். சூப்பர் 8' சுற்றில் 2 ஆட்டத்தில் பீட்டர்சன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 33 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 53 ரன்களும், பாகிஸ்தானிற்கு எதிராக பீட்டர்சன் 70 ரன்கள் எடுத்து (52 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் டுவென்டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வென்றது நியூசிலாந்து

செயின்ட் கிட்ஸ், மே7
ஆண்கள் டி 20 உலக கோப்பை போட்டி போல மகளிர்க்கும் டுவென்டி 20 உலகக் கோப்பை போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும்இடையிலான போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி 10ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சூசி பேட்ஸ் 32 ரன்களும், நிகோலா பிரவுன் 24 ரன்களும், ரேச்சல் ப்ரிஸ்ட் 20 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் டயானா டேவிட் 4 விக்கெட்டுகளையும், ரீமா மல்ஹோத்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
வெற்றி பெற 140 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் கடுமையாகப் போராடியும் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்திய அணியின் மிதாலி ராஜ் 44 ரன்களும், சுலக்ஷணா நாயக், அமிதா ஷர்மா தலா 28 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சியான் ருக், லூசி டூலன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்திய குடிமகளாகவே இருப்பேன் சானியா மிர்ஸா

ஐதராபாத், மே7
பலத்த சர்ச்சைகளுக்கு இடையே கடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நான் எப்போதும் இந்திய பெண்ணாகவே இருப்பேன். ஒருபோதும் பாகிஸ்தான் குடியுரிமை பெற மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்.12ஆம் தேதி இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே துபாயில் திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பிறகு பாகிஸ்தான் சென்றிருந்த சானியா தற்போது இந்தியா வந்துள்ளார்.
அவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது; திருமணம் வாழ்க்கை என்னை எந்தவிதத்திலும் மாற்றிவிடவில்லை. மாலிக்கோடு நான் சேர்ந்து வாழ்வதை தவிர மற்றபடி எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்.
மாலிக்கை எனக்கு கடந்த 6 வருடங்களாக தெரியும். 2004 ஆம் ஆண்டு மாலிக்கை முதலில் சந்தித்தேன். அதன் பிறகு தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்திருக்கிறோம். அப்போதெல்லாம் எங்களின் பேச்சில் திருமணம் பற்றிய எந்தவித திட்டமிடலும் இல்லாமல் இருந்தது.ஆனால் நாளாக நாளாக நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தோம்.எங்களின் உள்ளுணர்வு சொன்னதை கேட்டு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தோம்.
பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்து கொண்டிருந்தாலும், நான் எப்போதுமே இந்தியர் தான். ஒருபோதும் பாகிஸ்தான் குடியுரிமை பெற முயற்சிக்க மாட்டேன். துபாயில் அடிக்கடி தங்கும் பழக்கத்தை மாலிக்கொண்டிருப்பதால் எங்கள் இல்வாழ்க்கையை துபாயில் துவங்க முடிவு செய்துள்ளோம்.மேலும்
சோயிப் மாலிக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை பார்த்ததே இல்லை என்று அந்த போட்டியில் கூறியுள்ள சானியா, எதிர் வரவுள்ள காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.


சூப்பர்8 சுற்றில் தென்ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்தது நியூசிலாந்து

பிரிட்ஜ்டவுன், மே 8
டி20 உலக கோப்பை போட்டி சூப்பர்8 சுற்றில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதிக் கொண்ட ஆட்டம் பார்படோசில் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது.பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்தது தென் ஆப்பிரிக்கா அணி .
மந்தமான ஆட்டம்
தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக கல்லீசும், கேப்டன் ஸ்மித்தும் களம் இறங்கினார்கள். மந்தமாக ஆடிய ஸ்மித் 14 ரன்களில் சோதியின் பந்து வீச்சில் வீழ்ந்தார். ஐ.பி.எல்லில் கலக்கிய கல்லிஸ் இப்போட்டியிலும் 2 சிக்சர்களை விளாசினார்.கல்லிஸ் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த கிப்ஸ் 30 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
மோர்கல் அதிரடி
தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் அல்பி மோர்கல்லும் ,டிவில்லியர்ஸ்ஸும் இணைந்து தென் ஆப்பிரிக்காவின் ரன் விகிதத்தினை உயர்த்தினர். மோர்கல்40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட் ஆனார். இவர் நியுஸிலாந்து வீரர் சோதி வீசிய ஆட்டத்தின் 19 வது ஒவரில் 3 அபார சிக்சர்களை வீசி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடில்லாமல் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு உதவினார். முடிவில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப் புக்கு 170 ரன்கள் எடுத்தது. டிவில்லியர்ஸ் 47 ரன்களுடன் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கியது நியுஸிலாந்து. 40 ரன்களுக்குள் முக்கிய இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது நியுஸிலாந்து அணி.நியுஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களான மெக்குல்லம் 6 ரன்னிலும், ரைடர் 33 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து களமிறங்கிய குப்தில் 18 ரன்னும், டெய்லர் 19 ரன்னும் எடுத்து வெளியேறினார்கள். அதற்கு அடுத்து வந்த நியுஸிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 18 பந்தில் 40 ரன் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் மோர்கல் தேர்வு செய்யப்பட்டார்.

Tuesday, May 4, 2010

டக் வொர்த் லீவிஸ் முறையை மாற்ற வேண்டும்
காலிங்வுட்

இந்த போட்டியில் நாங்கள் எடுத்த 191 ரன்கள் அதிகபட்ச ரன்னாகும். இதன் மூலம் எங்களின் வெற்றி வாய்ப்பு 95 சதவீதம் பிரகாசமாக இருந்தது.
ஆனால் ""டக் வொர்த் லீவிஸ்'' முறையால் தான் நாங்கள் தோல்வியை சந்திக்க நேரிட்டு விட்டது. இது எங்களுக்கு மிகவும் மன வருத்தத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
டக் வொர்த் லீவிஸ் முறை 50 ஒவர் போட்டிக்கு பொருத்தமாக இருக்கிறது. அதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் இது 20 ஓவர் போட்டிக்கு டக் வொர்த் லீவிஸ் முறை சரியானதாக இல்லை
எனவே இந்த விதியை 20 ஓவர் போட்டிக்கு தகுந்த முறையில் மாற்றி அமைத்து புதிய விதிகளை உருவாக்க வேண்டும். இப்போதுள்ள முறை இரு அணிக்கும் சரியான முடிவை தரவில்லை. இந்த விதி ஒரு அணிக்கு சாதகமாகவும் ஒரு அணிக்கு பாதகமாகவும் உள்ளது. இது இப்படியே நீடிப்பது சரியாக இருக்காது.
வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் கெய்ல் கூறும்போது
,
காலிங்வுட் சொல்லும் சில கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவருடைய கருத்தை முழுமையாக ஏற்க முடியாது. டக் வொர்த் லீவிஸ் முறை ஓரளவுக்கு சரியாகவே இருக்கிறது. கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியின்போது இதே நிலை எங்கள் அணிக்கும் ஏற்பட்டது. அப்போது 9 ஓவரில் 82 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு எங்களுக்கு நிர்ணயித்து இருந்தனர். அப்போது நாங்கள் வெற்றி பெற்றோம். அதேபோல இப்போதும் வெற்றி பெற்று இருக்கிறோம் என்றார்

டக் வொர்த் லீவிஸ் விதியால் வெற்றியை இழந்த இங்கிலாந்து

கயானா ,மே. 5
20 ஒவர் உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டிஸுடன் மோதிய இங்கிலாந்து அணி டக் வொர்த் லீவிஸ் காரணமாக தோல்வியை எதிர்கொண்டது.
மேற்கு இந்திய தீவுகளில்நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று முன்தினம் டி பிரிவில் நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டிஸ் இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணி வீரர் மோர்கன் அதிகபட்சமாக 35 பந்துகளில் 55 ரன்களும், ரைட் 25 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி விளையாடி முடிந்ததும் மழை குறுக்கிட்டதன் விளைவாக டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 6 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன் பிறகு விளையாடிய வெஸ்ட் இண்டிஸ் அணி 5.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது . கடந்த 20 ஓவர் உலககோப்பை போட்டியில் இதே நிலைமைக்கு இங்கிலாந்து அணி தள்ளப்பட்டது.அப்போது ""இ'' பிரிவில் இடம் பெற்றிருந்த இந்த இரு அணிகளும் ஒவல் மைதானத்தில் ஆடிய ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வெஸ்ட் இண்டிஸ் அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
முதலில் ஆடிய இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து இருந்தது.
அடுத்து வெஸட் இண்டீஸ் ஆடியபோது மழை குறுக்கிட்டதால் டக் வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வெஸ்ட் இண்டீஸ் 9 ஓவரில் 80 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இதனை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் 8.2 ஓவரிலேயே 82 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Monday, May 3, 2010

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது –சுரேஷ்ரெய்னா

செயிண்ட்லூசியா, மே.4

டி20 உலக கோப்பை போட்டியில் சதம் அடித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று சுரேஷ்ரெய்னா கூறியுள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ""சி'' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர் 8'' முன்னேறியுள்ளது. .
நேற்றுமுன்தினம் தனது2வது ஆட்டத்தில் தென் ஆப்பிக்கா எதிர்கொண்டஇந்திய அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் சுரேஷ்ரெய்னா 60 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 101ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
விருது பெற்ற பிறகு ரெய்னா அளித்த பேட்டியில் :
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து வெற்றிக்கு உதவியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.முதலில் 50 முதல் 60 ரன்கள் வரை எடுப்பதை இலக்காக நினைத்தேன். பின்னர் கடைசி வரை களத்தில் நின்று ஆடுவது என்று முடிவு செய்தேன். கடவுளின் கருணையால் இந்த ஆண்டு எனக்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய சீனியர் வீரர்களான டோனி, ஹைடன் எனக்கு ஆதரவாக இருந்தனர். தேசிய அணியில் தெண்டுல்கர், டிராவிட் ஆகியோர் எப்போதுமே ஆதரவு கொடுத்தனர். அவர்களது ஆதரவு எனக்கு ஊக்கம் அளித்தது என்று கூறியுள்ளார்.

20 ஒவர் உலக கோப்பை போட்டி முரளிதரன் விலகல்

கயானா மே4
மேற்கு இந்திய தீவுகளில் நடை பெற்றுவரும் டி20 உலக கோப்பை போட்டியிலிருந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் காயம் காரணமாக வெளியேருகிறார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (ஆயிரத்திற்கும் மேல் )வீழ்த்தி உலக சாதனை புரிந்த முரளிதரனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து அணியின் பிஸியோதெரபிஸ்ட் கூறுகையில் முரளிதரனுக்கு வலது தொடையில் உள்ள தசையில் காயம் ஏற்பட்டுள்ளது. குறைந்தது மூன்று வார கால ஓய்வு முரளிதரனுக்கு தேவைபபடுகிறது என்று தெரிவித்தார்.

முரளிதரனின் சாதனை துளிகள்:
டெஸ்ட் மேச்சில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர்(60 ஆட்டங்களில்)

எதிர் அணியின் 10 விக்கெட்டுகளை 4 முறை வீழ்த்தியுள்ளார்.
ஐந்து நாடுகளுக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பாலியல் புகாரில் நைஜீரியா செனட்டர்!

லாகோஸ், மே 3
13 வயது எகிப்து சிறுமியை மணந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார் நைஜீரியா செனட்டர்.
சட்டத்தை மீறிய செனட்டர்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்தவர் அகமது சானி எரிமா (48). நைஜீரியாவில் செனட்டர் ஆக பதவி வகிக்கும் இவர் 13 வயது எகிப்து சிறுமியை திருமணம் செய்து கொண்டார். நைஜீரியாவில் பெண்ணின் திருமண வயது 18.எனவே எரிமா மீது மனித உரிமை கமிஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுமியை எகிப்தில் இருந்து கடத்தி வந்ததாகவும், அவளக்கு வரதட்சணையாக ரூ.50 லட்சம் கொடுத்ததாகவும்
,இவரது குழந்தையை கவனித்துக் கொள்ள 15 வயது சிறுமியை பணியில் அமர்த்தியிருந்தார் எனவும் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த புகாரில் சிறுமயை திருமணம் செய்து கொண்ட எரிமா 2 வருடங்கள் கழித்து அவளை விவாகரத்து செய்துவிட்டார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

கடலில் எண்ணை படலம் அவசர நிலை அறிவிப்பு

வாஷிங்டன், மே 3
அமெரிக்காவின் கடல் பகுதியில் எண்ணெய் படலங்கள் பரவியதால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் கடந்த மாதம் 20ந் தேதி எண்ணெய் கிணறு ஒன்று எரிந்தது. இதனால் எண்ணை தோண்டும் சூரிக்' கருவி கடலுக்குள் விழுந்து மூழ்கியது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகினர். இதற் கிடையே எண்ணை கிணற்றில் இருந்து எண்ணை படலங்கள் தொடர்ந்து வெளியேறி கடல் நீரில் கலந்து வருவதால் லூசியானா கடற்கரையில் சுற்றுச் சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அலபாமா, மிஸ்சி சிப்பி மாகாணங்களில் உள்ள கடற்கரை நகரங்களில் எண்ணெய் பரவியுள்ளது. இதனால் அங்கு சுற்று சூழல் பாதிக்கப் பட்டு கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அப்பகுதி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் சதுக்கம் மூடப்பட்டது கார் வெடிகுண்டால் பதற்றம்!

நியூயார்க், மே 3
அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரமான நியூயார்க்கில் டைம்ஸ் சதுக்கம் அருகே காரினுள் மறைக்கபட்டிருந்த குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து டைம்ஸ் சதுக்கம் மூடப்பட்டு, அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
டைம்ஸ் சதுக்கம் அருகே நின்றிருந்த ஒருகாரில் தீ விபத்து ஏற்பட்டது. காரினுள் ஏற்பட்ட தீயை அணைக்க வந்த காவல் துறையினர் தீ எதனால் ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகப்பட்டு காரைப் பரிசோதித்தனர். அப்போது காரின் பின் சீட்டில் வெடிகுண்டு போன்ற மர்மமான பொருள் சிக்கியது.
இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் சீல்வைக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
உடனடியாக அங்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், எப்.பி.ஐ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அத்துடன் ரோபோட் ஒன்றை வைத்து காரிலிருந்து மீட்கப்பட்ட பொருளை அதிகாரிகள் ஆராய்ந்தனர். இதில் காரினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது வெடிகுண்டு என தெரிய வந்தது.
இந்த பதற்றம் காரணமாக அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
கார் குண்டு மூலம் அங்கு குண்டுவெடிப்பை நிகழ்த்த நடந்த சம்பவம் நியூயார்க்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனித் தமிழீழத்தை வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல்

கொழும்பு, மே 3
இலங்கையில் தனித் தமிழீழத்தை வலியுறுத்தி, நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல் நடைபெற்றது. இது தொடர்பாக 16 நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் மேலும் இனப்படுகொலையாளர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கையில் தனித் தமிழீழத்தை வலியுறுத்தி நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலுக்காக பிரிட்டனில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் திரண்டு வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். இவ்வாக்கெடுப்பில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
உலக தமிழர்களுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலாக கருதப்படும் நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் நடைபெற்றுது.
பிரிட்டனில் நேற்று முன்தினம் காலை ஆரம்பமான இந்த வாக்களிப்பு நிகழ்ச்சியில் தமிழர்கள் தமக்கென்று ஒரு நாடு கடந்த அரசு அமைக்க இடும் முதல் வாக்கு என்பதால் இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க தேர்தலில் தாமும் வாக்களித்து வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் என்ற நினைவோடு சென்று அவர்கள் வாக்களிப்பதை காணமுடிந்தது.
நேற்று முன்தினம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வடமேற்கு லண்டன் வாக்களிப்பு நிலையத்தில் நாடுகடந்த தமிழீழத்திற்காக முதலாவது வாக்கு பதிவுசெய்யப்பட்டது. மக்கள் தொடர்ந்து வரிசையில் காத்து நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
நாட்டிற்காகவும், மக்களின் விடுதலை பெற்ற சுதந்திர வாழ்வுக்காகவும் தாம் தமது வரலாற்றுக் கடமையினை செய்துள்ளோம் என்ற திருப்தியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவதை காணமுடிந்தது
.

கனமழையிலும் வாக்கு பதிவு
நேற்று பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளுக்கு சென்று மக்கள் வாக்களித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு கடந்த தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு பதினாறு நாடுகளில் நடை பெற்றது.அந்த நாடுகளில் ஆஸ்திரேலியா,கனடா,சுவிட்சர்லாந்து,பிரான்ஸ்
ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்க நாடுகளாகும்.இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு கூறிவந்ததையடுத்து இலங்கையில் தனித் தமிழீழத்தை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலை நடத்தியுள்ளது இலங்கை அரசிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாக்கெடுப்பு குறித்து கனடா நாட்டு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வெளியிட்டு அறிக்கையில்: இலங்கையில் தமிழர்கள் தங்கள் அரசியல் உரிமைகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத நிலைமை உள்ளது. ஆகவே தமிழீழத்திற்கான அரசியல் ராஜதந்திரத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உள்ளது. வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து உலகளவில் வாக்கெடுப்பு மூலம் தமிழீழ அரசை நிறுவுவதற்கான ஆணை பெறப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆதரித்து 99% புலம் பெயர்ந்த தமிழர்கள் வாக்களித்தனர். இப்போது நடைபெறும் வாக்கெடுப்பின் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசு வெற்றிபெறும் போது தமிழீழ மக்கள் தங்களுக்கு இருக்கும் தன்னாட்சி உரிமையையும் பயன்படுத்தி தமிழீழ அரசை மீண்டும் உருவாக்க முடியும். நாங்கள் இல்லாத அரசு ஒன்றை கேட்கவில்லை. காலனித்துவ நாடுகள் இலங்கையில் காலடி எடுத்து வைக்கும் முன்பே கொடியோடும், முடியோடும் நான்கு நூற்றாண்டுகளாக இலங்கையில் தமிழீழ அரசு அமைந்திருந்தது. அந்த தமிழீழ அரசை தான் நாங்கள் மீண்டும் கேட்கிறோம். மேலும் தங்களது வாழ்வாதாரங்களை முழுவதுமாக இழந்து முகாம்களிலும், வெளியிலும் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் மறுவாழ்வுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். போரின் போது போர்க்குற்றங்களை இழைத்த சிங்களபௌத்தப் பேரினவாதிகளை சர்வதேச நீதிமன்றங்களில் நிறுத்தி தண்டனை வாங்கித்தர வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.