Wednesday, May 12, 2010

ஜிம்பாப்வேவுடனான முத்தரப்பு தொடர் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு

சென்னை,மே10
ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா,இலங்கை, ஜிம்பாப்வே என 3 நாடுகள் கலந்து கொள்ளும் போட்டி மே 28ந்தேதி முதல் ஜூன் 9ந்தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான இந்திய வீரர்களை ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வு குழுவினர் நேற்று கொடைக்கானலில் தேர்வு செய்தனர்.
ஜிம்பாப்வேயில் இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் நடைபெற உள்ளது. மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2 சர்வதேச டுவென்டி 20 போட்டி நடக்க உள்ளது.
இப்போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
தெண்டுல்கர், டோனி, யுவராஜ் சிங், சேவாக், ஜாகீர்கான், கம்பீர், ஹர்பஜன்சிங், பிரவீன்குமார், ஆஷிஷ் நெஹரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் ரெய்னா (கேப்டன்) கோக்லி(துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், யூசுப் பதான், ரோகித் ஷர்மா, முரளி விஜய், வினய்குமார், உமேஷ் யாதவ், அசோக் திண்டா, அமித் மிஸ்ரா, நமன் ஓஜா, பிரையன் ஓஜா ,அஸ்வின்,பங்கத் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment