Wednesday, May 12, 2010

சோயிப் பயிற்சி உள்ளூர் வீரர்கள் கடும் எதிர்ப்பு

ஐதராபாத் ,மே10
ஐதராபாத்தில் சானியா மிர்சாவின் கணவர் சோயிப் மாலிக் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வதற்கு உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய டென்னிஸ் வீரர் சானியா மிர்சாவை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் திருமணம் செய்வதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பின்னர், அது சுமுகமாகத் தீர்க்கப்பட்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சானியாசோயிப் ஜோடி ஐதராபாத் வந்துள்ளது. அங்குள்ள லால் பகதூர் ஸ்டேடியத்தில் சோயிப் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டார். அவருக்குத் துணையாக சானியாவும் அங்கு சென்றிருந்தார். அப்போது அங்கு சென்ற ஐதராபாத் நகர கிரிக்கெட் வீரர்கள் சிலர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்ட சோயப் மாலிக், பயிற்சிகள் மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment