Monday, May 3, 2010

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது –சுரேஷ்ரெய்னா

செயிண்ட்லூசியா, மே.4

டி20 உலக கோப்பை போட்டியில் சதம் அடித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று சுரேஷ்ரெய்னா கூறியுள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ""சி'' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர் 8'' முன்னேறியுள்ளது. .
நேற்றுமுன்தினம் தனது2வது ஆட்டத்தில் தென் ஆப்பிக்கா எதிர்கொண்டஇந்திய அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் சுரேஷ்ரெய்னா 60 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 101ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
விருது பெற்ற பிறகு ரெய்னா அளித்த பேட்டியில் :
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து வெற்றிக்கு உதவியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.முதலில் 50 முதல் 60 ரன்கள் வரை எடுப்பதை இலக்காக நினைத்தேன். பின்னர் கடைசி வரை களத்தில் நின்று ஆடுவது என்று முடிவு செய்தேன். கடவுளின் கருணையால் இந்த ஆண்டு எனக்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய சீனியர் வீரர்களான டோனி, ஹைடன் எனக்கு ஆதரவாக இருந்தனர். தேசிய அணியில் தெண்டுல்கர், டிராவிட் ஆகியோர் எப்போதுமே ஆதரவு கொடுத்தனர். அவர்களது ஆதரவு எனக்கு ஊக்கம் அளித்தது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment