Tuesday, May 18, 2010

சிறந்த வீரர்களால் சிறப்பான வெற்றி காலிங்வுட்

பார்படாஸ், மே.18

கிரிக்கெட் போட்டிகளின் தாயமாக கருதப்படும் இடம் இங்கிலாந்து.கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கப்பட்ட 1975ம் ஆண்டிலிருந்து 2010 இருபதுக்கு 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு வரை முக்கியமான தொடரிகளில் இங்கிலாந்து அணி சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பதிவு செய்ததில்லை.முதல் முதலாக இருபதுக்கு இருபது ஒவர் உலக கோப்பையில் வென்றுள்ளது.
உலக கோப்பையை வென்றது குறித்து இங்கிலாந்து அணித் தலைவர் காலிங்வுட் கூறுகையில், உலக கோப்பையை முதன் முறையாக இங்கிலாந்து அணி வென்றதில் பெருமை அடைகிறோம் என்றார்.
உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது ஆசஷ் வெற்றியை விட சிறந்தது என்று கூறிய காலிங்வுட், எங்கள் அணியில் சிறந்த வீரர்கள் இருந்ததால் கோப்பையை வெல்ல முடிந்தது என்றார்.
இந்தப் போட்டி முழுவதுமே நாங்கள் நன்றாக ஆடினோம் என்றும் சிறந்த அணியை வீழ்த்தி தான் உலக கோப்பையை வென்றுள்ளோம் என்றும் காலிங்வுட் கூறினார்.

No comments:

Post a Comment