Wednesday, May 12, 2010

நாடு திரும்புகிறார்பீட்டர்சன்

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பீட்டர்சன். அவருக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளது.இதனால் அவர் தனது நாட்டிற்கு செல்ல தீர்மானித்துள்ளதால் இன்று நடைபெறும் நியுஸிலாந்துடனான போட்டியில் மட்டும் விளையாடமாட்டார் என தெரிகிறது. நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் இரண்டு ஆட்டங்களிலும் பீட்டர்சன்னின் அதிரடியால் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணிக்கு இது மிகப் பெரிய இழப்புதான்.கிட்ட தட்ட ஏற்கனவே அரை இறுதியிக்கு தகுதி பெற்றுள்ள இங்கிலாந்து அணிக்கு நியுஸிலாந்துடனான ஆட்டம் மிகப் பெரிய நெருக்கடி இல்லை என்றாலும் பீட்டர்சன் இல்லாதது மிகப் பெரிய இழப்புதான் இங்கிலாந்து அணிக்கு.அரையிறுதியில் இங்கிலாந்து ஆடும்போது அவர் அணியோடு இணைந்து கொள்வார். சூப்பர் 8' சுற்றில் 2 ஆட்டத்தில் பீட்டர்சன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 33 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 53 ரன்களும், பாகிஸ்தானிற்கு எதிராக பீட்டர்சன் 70 ரன்கள் எடுத்து (52 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment