Tuesday, May 18, 2010

இங்கிலாந்து அணி சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளதுஸ்ரீநாத்

மும்பை,மே .18

2010ம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சு தான் ஆதிக்கம் செலுத்தியது என்று இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.டி 20 உலக கோப்பை குறித்து ஸ்ரீநாத் மேலும் கூறியதாவது: நடந்த முடிந்த உலக கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வேகப்பந்து வீச்சை இன்னும் சிறப்பாக மேம்படுத்த வேண்டிய சூழ்நிலையை உணர்ந்திருக்குமென்று நம்புகிறேன்.இந்திய ஆடுகளங்களுக்கும்,வெளிநாட்டு ஆடுகளங்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை இப்போதாவது இந்திய வீரர்கள் உணர்ந்திருபார்கள்.வேகப்பந்து வீச்சை நன்றாக ஆடத் தெரிந்தவர்களே இந்த தொடரில் சிறந்த வீரர்களாக இருந்தனர்.இந்த தொடரில் ஆஸ்திரேலியா,இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே என்னைக் கவர்ந்தது.இந்த இரண்டு அணிகள் மட்டும் தான் எந்தவித சிக்கலுமின்றி அரையிறுதிக்கு சென்றது.ஆஸ்திரேலிய அணியின் வாட்சனும்,வார்னரும் ஷாட் பிட்ச் பந்துகளை கையாண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது.கடந்த சில மாதங்களாக சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ள இங்கிலாந்து அணி உலக கோப்பை வெல்லும் தகுதியான அணியாக தெரிந்தது.ஏனென்றால் இங்கிலாந்து அணியில் இளமையும், அனுபவும் கலந்த அணியாக இருந்தது என்று கூறினார்.

No comments:

Post a Comment