Wednesday, June 2, 2010

முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கை இன்று மோதல்

புலவாயோ, மே. 29
முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இன்று இந்தியா இலங்கை அணியை எதிர்கொள்ளகிறது.
நேற்று முன்தினம் இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் தொடங்கியது.
தொடரின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாவே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.2வது ""லீக்'' ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணியை சந்திக்கின்றது.இந்த 3 நாடுகள் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
ஜிம்பாப்வே அணியிடம் தோற்றுள்ளதால் இலங்கையுடனான இந்தப் போட்டியில் வென்றால் சிக்கலில்லாமல் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்லும்.
சீனியர் வீரர்கள் இல்லாத இந்திய அணி இலங்கையை வெல்ல கடுமையாக போராட வேண்டும்.

பந்துவீச்சே தோல்விக்கு காரணம்: ரெய்னா
ஜிம்பாப்வே அணியுடனான தோல்வி குறித்து ரெய்னா கூறியதாவது:
இந்திய அணி285 ரன்கள் குவித்தும் ஜிம்பாப்வேயிடம் தோற்றதை தோற்றதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. சில பவுலர்களுக்கு இதுதான் முதல் ஆட்டமென்பதால் அவர்களின் அனுபவமில்லாத பந்துவீச்சே தோல்விக்கு காரணம். புதுமுக பவுலர்கள் தாங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். ஜடேஜா, மிஸ்ரா மட்டுமே சிறப்பாக பந்து வீசினார்கள்.
ஜிம்பாவேயுடனான எங்களது பேட்டிங் சிறப்பாக இருந்தது. இன்று நடக்கும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் ,பீல்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்று கூறினார்.

No comments:

Post a Comment