Wednesday, June 2, 2010

ஐ.பி.எல் முறைகேடு நடுநிலையான குழுவேண்டும்லலித்மோடி

மும்பை, மே. 27
ஐ.பி.எல் புகார் குறித்து மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென்று இந்திய கிரிக்கெட் சங்கம் உத்தரவிட்டிருந்த நிலையில்
ஐ.பி.எல். புகாரை விசாரணை செய்ய நடுநிலையான குழு ஒன்றை அமைக்க வேண்டுமென்று லலித்மோடி கூறியுள்ளார். ஊழல் புகார் வெளிவந்த பாதை
நடந்து முடிந்த ஐ.பி.எல்லால் ஏகப்பட்ட குழப்பங்களும், ஒரு மத்திய அமைச்சர் தன் பதவியையே ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமைக்கு கொண்டு சென்றது.அதோடு மட்டுமில்லாமல் சில அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. இதற்கெல்லாம் முதன்மை காரணமாக இருந்தவர் ஐ.பி.எல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி தான். இவர் தான் முதன் முதலில் ஐ.பி.எல் ஏலத்தின் போது கொச்சி அணிக்காக தன்னை மத்திய அமைச்சர் சசி தருர் நிர்பந்தபடுத்தியதாக கூறி பரபரப்பான ஒரு குற்றசாட்டை தொடங்கிவைத்தார்.இதனை தொடந்து மோடியின் மீதும் பல ஊழல் புகார்கள் கூறப்பட்டுள்ளன.தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியாக கூறி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட தன்னுடைய பதவியை இழந்தார் சசி தருர் .இதேபோல் பணபரிவர்த்தனை ,ஊழல் புகார் என பல குற்றசாட்டுகளுக்குள்ளாகி அமைப்பின் தலைவர் பதவியை இழந்தார் மோடி.
ஐ.பி.எல். தலைவராக இருந்த லலித்மோடி பல்வேறு முறைகேடுகளை செய்ததாக வந்த புகாரை அடுத்து அவர் ஐ.பி.எல். தலைவர் பதவியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
வாரிய விசாரணை வேண்டாம்

கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை குறித்து மோடி குறியதாவது:
வாரியம் ஐ.பி.எல் புகார் குறித்து விளக்கம் கேட்டதால் 160 பக்கம் கொண்ட விளக்க கடிதமும், 15 ஆயிரம் பக்க ஆவணங்களையும் அனுப்பியிருந்தேன்.
இது தொடர்பாக கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் ஒன்று எழுதி யுள்ளேன் என்றும்அதில், ஐ.பி.எல். முறைகேடு குறித்து விசாரணை நடத்த சுதந்திரமான நடுநிலைக்குழுவை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment