Wednesday, June 30, 2010

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ரொனால்டோ


ஸ்பெயினுக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தோல்வியடைந்த போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னைப் பின்தொடர்ந்த கேமரா மேன் மீது எச்சில் துப்பியதாக புகார் எழுந்துள்ளது.
ரொனால்டோவைப் பொறுத்தவரை இது அவரது ஆட்டத்திறனுக்கு ஒரு மோசமான உலகக் கோப்பையாக அமைந்தது. 4 ஆட்டங்களில் 3 ஆட்டங்கள் போர்ச்சுக்கல் அணி கோலே போடவில்லை.
ஸ்பெயின் அனியுடன் தோல்வியடைந்த ஆட்டம் முடிந்த பிறகு கேமரா மேன் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முகபாவனையை படம் பிடிக்க அவரை பின் தொடர்ந்தார்.
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ரொனால்டோ எச்சிலைத் திரட்டி துப்பினார். அது கேமரா மேன் காலருகில் சென்று விழுந்தது.
இதனை அவர் வேண்டுமென்றே செய்தாரா என்பது தெரியவில்லை. இந்த செயல் அவரது ஆளுமையின் மீது கறை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment