Wednesday, June 2, 2010

பந்துவீச்சின் மூலம் சாதிக்க முடியவில்லை இர்பான் பதான்


மொகாலி, மே. 29

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவிச்சாளராக விளங்கிய இர்பான் பதான் பந்துவீச்சின் மூலம் என்னால் இந்திய அணியில் சாதிக்கமுடியவில்லை. இதனால் பேட்ஸ்மேனாக புதிய அவதாரம் எடுக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து இர்பான் பதான் கூறியதாவது:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு
அணியின் முக்கிய பந்துவீச்சாளராக வீரராக திகழ்ந்த நான், ஐ.பி.எல். போட்டிகளுக்கு பின் முழு அளவில் பேட்ஸ்மேனாக விரும்புகிறேன். சமிப காலமாக பந்துவீச்சில் என்னால் பெரிய அளவில் சாதிக்கமுடியவில்லை என்பதால் பேட்டிங்திறன் கொண்ட ஒரு ஆல்ரவுண்டராக விளங்க வேண்டும்மென்று விரும்புகிறேன்.
அதன் மூலம் இந்திய அணியின் முக்கிய இடதை பிடிக்க விரும்புகிறேன்.
என்னுடைய பந்து வீச்சை விட பேட்டிங் தற்போது கைகொடுக்கும் நிலையில் இந்திய அணியில் பேட்ஸ்மேனாக வளர்ச்சிகாணவே விரும்புகிறேன். அத்துடன் ஐ.பி.எல். அணியும் என்னை பேட்ஸ்மேனாக ஏற்கத்தான் தயாராக உள்ளது. மேலும் எந்த அணியிலும் பொருந்தக் கூடிய சிறந்த பேட்ஸ்மேனாக, பந்துவீச்சாளராக மற்றும் சிறந்த ஆல்ரவுண்டராக என்னை உருவாக்கிக் கொள்ளவே விரும்புகிறேன்.
என்னை பொறுத்தவரை இந்தியர்களின் மனஉணர்வை நன்கு உணர்ந்த யுவராஜ்சிங் தலைமையிலான அணியில் ஆடுவதையே விரும்புகிறேன். சங்ககாரா அனைத்து வீரர்களையும் திருப்திபடுத்தும் வகையில் செயல்பட விரும்பும்குணம் கொண்டவர். எனவே இருவரும் சிறந்த கேப்டன்கள் தான்.
தற்போது நான் இந்திய அணியில் இல்லாததால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை கைநழுவிப் போனதாக நான் கருதவில்லை மீண்டும் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment