Monday, June 28, 2010

இந்தேனேஷியா ஒபன் பேட்மின்டன் சாய்னா சாம்பியன்

ஜகார்தா,ஜுன்.28
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் நடந்த பெண்களுக்கான ஒற்றையர் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் உலகின் "நம்பர்3 வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவல், தொடர்ந்து இரண்டாவது முறையாக, சாம்பியன் பட்டம் கைப்பற்றினார். இந்தோனேஷியா ஓபன் சூப்பர் தொடர் இறகுப்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை சகாயோ சாடோயும் இந்திய நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும் மோதிக்கொண்டனர்.
இந்த போட்டியின் முதல் செட்டில் 2119 என்ற கணக்கில், சாய்னா வென்றார். பின் இரண்டாவது செட்டில் பதிலடி கொடுத்த ஜப்பான் வீராங்கனை, 2113 என கைப்பற்றினார்.இறுதி செட்டில் 2111 என்ற கணக்கில் சாய்னா வெற்றிபெற்றார்.இதனால் 2119, 1321, 2111 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.
கடந்த இரு வாரத்துக்கு முன் இந்தியாவில் நடந்த, இந்திய ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் இதேபோல் கடந்த வாரம் நடந்த சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் ஆகிய இரண்டு தொடரிலும் கோப்பை வென்று அசத்தி இருந்தார்.தற்போது இந்தோனேஷியா ஒபன் பேட்மிண்டன் பட்டத்தை கைப்பற்றியதின் மூலம் சாய்னா ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
2009ஆம் ஆண்டில் நடந்த இந்தோனேஷியா ஒபன் பேட்டியிலும் சாய்னா பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment