Wednesday, June 2, 2010

முத்தரப்பு கிரிக்கெட் இன்று இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதல்

புலவாயோ, ஜூன். 3
ஜிம்பாவேயில் நடந்துவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே, இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றது.தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன்ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இன்று இந்திய அணி ஜிம்பாவேயை சந்திக்கிறது.ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
3 அணிகளும் தலா ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் பெற்றுள்ள நிலையில்
4வது லீக் ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் இந்தியாஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி ஏற்கனவே ஜிம்பாப்வேயிடம் தோற்றதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளது. அதோடு இறுதிப்போட்டிக்கு நுழைய நாளை ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடியும் உள்ளது.
280 ரன்னுக்கு மேல் இலக்கை எடுத்து ஜிம்பாப்வே வெற்றி பெற்றதால் இந்திய வீரர்கள் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.
இந்திய அணியின் பேட்டிங்கில் ரோகித் சர்மா மிகவும் நல்ல நிலையில் உள்ளார். தொடர்ந்து 2 சதம் அடித்து முத்திரை பதித்தார். ""ஹாட்ரிக்'' சதம் அடிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

No comments:

Post a Comment