Monday, May 3, 2010

20 ஒவர் உலக கோப்பை போட்டி முரளிதரன் விலகல்

கயானா மே4
மேற்கு இந்திய தீவுகளில் நடை பெற்றுவரும் டி20 உலக கோப்பை போட்டியிலிருந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் காயம் காரணமாக வெளியேருகிறார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (ஆயிரத்திற்கும் மேல் )வீழ்த்தி உலக சாதனை புரிந்த முரளிதரனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து அணியின் பிஸியோதெரபிஸ்ட் கூறுகையில் முரளிதரனுக்கு வலது தொடையில் உள்ள தசையில் காயம் ஏற்பட்டுள்ளது. குறைந்தது மூன்று வார கால ஓய்வு முரளிதரனுக்கு தேவைபபடுகிறது என்று தெரிவித்தார்.

முரளிதரனின் சாதனை துளிகள்:
டெஸ்ட் மேச்சில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர்(60 ஆட்டங்களில்)

எதிர் அணியின் 10 விக்கெட்டுகளை 4 முறை வீழ்த்தியுள்ளார்.
ஐந்து நாடுகளுக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

No comments:

Post a Comment