Monday, May 3, 2010

கடலில் எண்ணை படலம் அவசர நிலை அறிவிப்பு

வாஷிங்டன், மே 3
அமெரிக்காவின் கடல் பகுதியில் எண்ணெய் படலங்கள் பரவியதால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் கடந்த மாதம் 20ந் தேதி எண்ணெய் கிணறு ஒன்று எரிந்தது. இதனால் எண்ணை தோண்டும் சூரிக்' கருவி கடலுக்குள் விழுந்து மூழ்கியது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகினர். இதற் கிடையே எண்ணை கிணற்றில் இருந்து எண்ணை படலங்கள் தொடர்ந்து வெளியேறி கடல் நீரில் கலந்து வருவதால் லூசியானா கடற்கரையில் சுற்றுச் சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அலபாமா, மிஸ்சி சிப்பி மாகாணங்களில் உள்ள கடற்கரை நகரங்களில் எண்ணெய் பரவியுள்ளது. இதனால் அங்கு சுற்று சூழல் பாதிக்கப் பட்டு கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அப்பகுதி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment