Monday, May 3, 2010

டைம்ஸ் சதுக்கம் மூடப்பட்டது கார் வெடிகுண்டால் பதற்றம்!

நியூயார்க், மே 3
அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரமான நியூயார்க்கில் டைம்ஸ் சதுக்கம் அருகே காரினுள் மறைக்கபட்டிருந்த குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து டைம்ஸ் சதுக்கம் மூடப்பட்டு, அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
டைம்ஸ் சதுக்கம் அருகே நின்றிருந்த ஒருகாரில் தீ விபத்து ஏற்பட்டது. காரினுள் ஏற்பட்ட தீயை அணைக்க வந்த காவல் துறையினர் தீ எதனால் ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகப்பட்டு காரைப் பரிசோதித்தனர். அப்போது காரின் பின் சீட்டில் வெடிகுண்டு போன்ற மர்மமான பொருள் சிக்கியது.
இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் சீல்வைக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
உடனடியாக அங்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், எப்.பி.ஐ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அத்துடன் ரோபோட் ஒன்றை வைத்து காரிலிருந்து மீட்கப்பட்ட பொருளை அதிகாரிகள் ஆராய்ந்தனர். இதில் காரினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது வெடிகுண்டு என தெரிய வந்தது.
இந்த பதற்றம் காரணமாக அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
கார் குண்டு மூலம் அங்கு குண்டுவெடிப்பை நிகழ்த்த நடந்த சம்பவம் நியூயார்க்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment