Wednesday, May 12, 2010

மகளிர் டுவென்டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வென்றது நியூசிலாந்து

செயின்ட் கிட்ஸ், மே7
ஆண்கள் டி 20 உலக கோப்பை போட்டி போல மகளிர்க்கும் டுவென்டி 20 உலகக் கோப்பை போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும்இடையிலான போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி 10ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சூசி பேட்ஸ் 32 ரன்களும், நிகோலா பிரவுன் 24 ரன்களும், ரேச்சல் ப்ரிஸ்ட் 20 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் டயானா டேவிட் 4 விக்கெட்டுகளையும், ரீமா மல்ஹோத்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
வெற்றி பெற 140 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் கடுமையாகப் போராடியும் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்திய அணியின் மிதாலி ராஜ் 44 ரன்களும், சுலக்ஷணா நாயக், அமிதா ஷர்மா தலா 28 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சியான் ருக், லூசி டூலன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

No comments:

Post a Comment