Wednesday, May 12, 2010

போர்ச்சுகல் ஒபன் டென்னிஸ் ரோஜர் ஃபெடரர் தோல்வி

எஸ்டோலியல்,மே10

உலகின் முதல் நிலை ஆட்டக்காரரும் சுவிட்சர்லாந் நாட்டு வீரருமான ரோஜர் ஃபெடரர் போர்ச்சுகல்லில் நடைபெற்று வரும் ஒபன் டென்னிஸ் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
எஸ்டோலியல் நகரில் நடைபெற்ற அரையிறுதி சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் மாண்டேன்சுடன் மோதினார் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் .
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 62 என்ற கணக்கில் முதல் சுற்றில் தன்னுடைய வெற்றியை பதிவு செய்தார் மாண்டே.
இதன் பிறகு 2வது சுற்றில் பெடரர் சுதாரித்துக் கொண்டு விளையாட இருவருக்கும் கடும் பலப்பரீட்சை நிலவியது. எவ்வளவோ முயர்ச்சித்தும் முடிவில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரோஜர் ஃபெடரர் தோல்வி அடைந்தர்.
அவரை எதிர்த்து விளையாடிய மாண்டே 76 (75) என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நுழைந்தார்.

No comments:

Post a Comment