Wednesday, May 12, 2010

டெல்லியில் ஆசிய மல்யுத்தப் போட்டி

டெல்லி,மே10
ஆசியாவைச் சேர்ந்த 21 நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய மல்யுத்த போட்டிகள் வரும் 12ந் தேதி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. 12 ந் தேதி தொடங்கும் மல்யுத்தப் போட்டிகள் 16 ந் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த தொடரில் இந்தியா ,ஈரான்,உஸ்பெகிஸ்தான்,கஜகஸ்தான்,கிர்கிஸ்தான்,
ஜப்பான்,வடகொரியா,தென்கொரியா,சீனா,
மங்கோலியா உட்பட மொத்தம் 21 நாடுகள் பங்கேற்கின்றன.இது குறித்து மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மந்தர் கூறியாதாவது:
நடக்கப் போகும் ஆசிய மல்யுத்தப் போட்டிகள் டெல்ல்யில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சியாக இந்த தொடர் அமையும்.
சீனியர் பிரிவில் நடக்கும் மல்யுத்தப் போட்டியில் பிரீ ஸ்டைல் ,கிரெகோ ரோமன் ஸ்டைல் முறைகளில் வீரர்கள் மோதவுள்ளனர்.இந்த தொடரில் பெய்ஜிங் ஒலிம்பிக்(2008),டென்மார்க் உலக சீனியர் மல்யுத்தப் சாம்பியன்ஷிப்பில்(2009) கலந்து கொண்டு பதக்கம் வென்ற பல வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.மல்யுத்த வீராங்கனைகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டியும் இத்தொடரில் இடம் பெறுகிறது.இந்த போட்டி தொடருக்காக டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment