Tuesday, May 18, 2010

மதுபான விடுதியில் ரகளை வீரர்கள் மீது நடவடிக்கை பி.சி.சி.ஐ

மும்பை மே.18

உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு மேற்கிந்திய தீவிலுள்ள மதுபான விடுதி ஒன்றில் மது அருந்த சென்ற இந்திய வீரர்கள் அங்கிருந்த ரசிகர்களுடன் ரகளையில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன.
மேற்கிந்திய தீவில் மதுபான விடுதியில் ரசிகர்களுடன் ரகளையில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ரோஹத் சர்மா, ஆசிஷ் நெஹரா, ஜடேஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறப்பட்டது. வீரர்களின் இந்த செயலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இந்த 4 பேர் மீது விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.சி.சி.ஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தின்போது, மேற்கிந்திய தீவில் மதுபான விடுதியில் இந்திய வீரர்கள் ரகளையில் ஈடுபட்டது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment