Sunday, August 8, 2010

ஊழல் எதிரொலி ஆசிய விளையாட்டு போட்டிக்கு மத்திய அரசு மறுப்பு !

டெல்லி,ஆக.4
வரும் அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளதால், 2019ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கான ஏலத்தில் பங்கேற்க மத்திய அரசு தடை விதிக்கவுள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் குறித்து மிகப் பெரிய அளவில் நிதி மோசடிகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் 2019ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியை இந்தியா வில் நடத்த முடிவு செய்திருந்த இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முயற்சிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் தடை போட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த அனுமதி கோரி ரூ. 15 கோடியை கேட்டிருந்தது ஒலிம்பிக் சங்கம். ஆனால் அந்தக் கோரிக்கையை விளையாட்டு அமைச்சகம் நிராகரித்து விட்டது. இந்தப் பணத்தை வைத்துத்தான் விண்ணப்பிக்கவும், இந்தியாவுக்கு ஆதரவு சேகரிக்கும் பிரசாரத்தையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது இந்திய ஒலிம்பிக் சங்கம். ஆனால் அதை தற்போது மத்திய அரசு நிராகரித்து விட்டது.

No comments:

Post a Comment