Sunday, August 8, 2010

பாக்.அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் கனேரியா


கராச்சி,ஆக.5
இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் சரியாக பந்துவீசவில்லை என்று கூறி பாகிஸ்தான் சுழற் பந்து வீச்சாளர் கனேரியாவை அதிரடியாக நீக்கியது பாக்.கிரிக்கெட் வாரியம்.இந்நிலையில் இழந்த பார்மை மீட்டு, மீண்டும் அணிக்கு திரும்புவேன் என கனேரியா கூறியுள்ளார்.
இது குறித்து கனேரியா கூறியதாவது: .
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நாங்கள் 354 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளித்தது. இதற்கு பந்துவீச்சு மட்டும் காரணமல்ல. பேட்ஸ்மேன்கள் தான் சோபிக்க தவறி விட்டனர்.இப்போட்டியில் நான் சிறப்பாகவே பந்து வீசினேன். இருப்பினும் அணியிலிருந்து நீக்கப்பட்டது வருத்தம் அளித்தது. இருப்பினும் தேர்வாளர்களின் செயலுக்கு மரியாதை அளிக்கிறேன். இழந்த பார்மை மீட்டு விரைவில் அணிக்கு திரும்புவேன் என்று கனேரியா தெரிவித்தார். இவர் இதுவரை விளையாடியுள்ள 61 டெஸ்ட் போட்டிகளில் 261 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment