கொழும்பு, ஜுலை.28
இரண்டாம் நாளான நேற்று இலங்கை அணி 642 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
கொழும்பு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில்2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி வழக்கம் போல தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியாவும் முதல் நாள் போலவே தங்களது ஒன்றுமில்லாத பந்துவீச்சை வீசினர். இந்திய அணியின் மோசமான பந்துவீச்சினால் இலங்கை அணியின் ரன்விகிதம் வேகமாக வளர்ந்தது. நேற்று இலங்கை எதிர்கொண்ட 69.4 ஓவர்களில் 330 ரன்களை விளாசியது.அந்த அணியின் கேப்டனும்,துணை கேப்டனும் இணைந்து இந்திய பந்துவீச்சாளர்களை படாய் படுத்தினர்.
சங்கக்காரா அவுட்
ஒரு கட்டத்தில் இந்தப் பிட்சில் ஒன்றும் இல்லை என்று தோனி விரக்தியடைந்து 2வது ஸ்லிப்பை எடுத்தவுடன் அந்த இடத்தில் சங்கக்காரா அதித்த ஷாட் ஒன்று கேட்ச் பிடிக்கும் உயரத்தில் சென்றது. இதன் பிறகு ஓஜாவின் ஒரே ஒவரில் 4 பவுண்டரிகளை அடித்து சங்கக்காரா டெஸ்ட் போட்டியில் தனது ஏழாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இரட்டை சதம் அடித்த பிறகு சேவாக் வீசிய பந்தை கட் செய்ய முயன்றார் சங்கக்காரா .ஆனால் பந்து மட்டையின் வெளி விளிம்பில் பட்டு திராவிட்டிடம் கேட்சாகச் சென்றது.திராவிட் அதனை அழகாக பிடித்துகொண்டார் .335 பந்துகளை சந்தித்த அவர் 219 ரன்கள் எடுத்து வெளியேறினார்.அதில் 29 பவுண்டரிகளும் அடங்கும்.சங்கக்காரா ஆட்டமிழக்கும் போது இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 466 ரன்கள் எடுத்திருந்தது.இதன் பிறகு களமிறங்கிய இலங்கை அணியின் சமரவீரா களமிறங்கினார்.
புதிய சாதனை
இந்நிலையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜெயவர்தனே டெஸ்ட் போட்டியில் தனது 28வதுசதத்தை எடுத்தார்.இந்த சதத்தின் மூலம் ஓரே மைதானத்தில்அதிக சதங்கள் எடுத்த டெஸ்ட் வீரர் என்ற உலகச் சாதனை புரிந்தார்.ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் மெல்பர்ன் மைதானத்தில் எடுத்த 9 சதங்கள் தான் இதுநாள் வரை ஓரே மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச சதங்கள் என்ற சாதனையாக இருந்தது.ஜெயவர்தனே மூலம் பிராட்மேனின் இந்த சாதனை முறியடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.இலங்கை தன் முதல் இன்னிங்சில் தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 587 ரன்கள் குவித்திருந்தது.இலங்கை உணவு இடைவேளைக்குப் பிறகு 31 ஓவர்களில் 130 ரன்களைக் குவித்துள்ளது.ஜெயவர்தனே 143 ரன்களுடனும், திலன் சமரவீரா 52 ரன்கள் எடுத்தும் விளளயாடி வருகின்றனர்.
சதமடித்த பந்து வீச்சாளர்கள்
இந்தியப் பந்து வீச்சாளார்களான மிதுன், ஓஜா, ஹர்பஜன் சிங் ,இஷாந்த் ஷர்மா ஆகியோர் தங்களது பந்து வீச்சில் சதம் கண்டனர்.
இந்நிலையில் இலங்கை அணியில் ஸ்கோர் 600 ரன்னை நோக்கி சென்றது. சதம் அடித்த ஜெயவர்த்தனே அதிரடியாக விளையாடினார். அவரும் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 174 ரன்னில் ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழந்தார்.அவர் 42.4 ஓவர் வீசி 147 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.ஹர்பஜன் சிங் இந்த தொடரில் பெறும் முதல் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இலங்கை அணி ஸ்கோர் 4 விக்கெட் இழப்பிற்கு 642 ரன்னிற்கு தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இலங்கை அணியின் சமரவீரா 76 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.நேற்றைய ஆட்டத்தில் 18 ஓவர்கள் மீதமிருக்கையில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக சேவாக்கும்விஜய்யும் களமிறங்கினார்கள்.
சேவாக் அதிரடி
களமிறங்கியது முதலே சேவாக் அதிரடியாய் விளையாடினார்.அவருக்கு பக்க பலமாக விஜய்யும் ஆடினார்.அதிலும் துவக்க ஓவரை வீசிய டம்மீக்க பிரசாத்தின் ஓவரை விளாசித் தள்ளினார் சேவாக்.பிரசாத் வீசிய 3 ஓவர்களில் மொத்தம் 23 ரன்கள் எடுக்கப்பட்டது.டம்மிக்க பிரசாத்தின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளையும் பெர்ணாண்டோ ஓவரில் இரண்டு பவுண்டரிகளையும், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் சுரஜ் ரந்திவ் பந்தில் இரண்டு பவுண்டரிகளையும், அஜந்தா மெண்டிஸ் பந்தில் இரண்டு பவுண்டரிகளையும் அவர் விளாசினார்.
இதில் மெண்டிஸ் வீசிய மிடில் ஸ்டம்ப் நோக்கி வந்த பந்தை பௌலருக்கும் மிட் ஆனுக்கும் இடையே செலுத்தி அடித்த பவுண்டரி நேற்றைய தினத்தின் சிறந்த ஷாட் என்று கூறலாம்.சிறப்பாக ஆடிய சேவாக் டெஸ்ட் போட்டியில் தனது 22வது அரை சதத்தினை எடுத்தார்.அவர் மொத்தம் 63 பந்துகளை சந்தித்து 64 ரன்களை எடுத்தார்.அதில்12 பவுண்டரிகளும் அடங்கும்.இதேபோல் விஜய்யும் தன் பங்கிற்கு22 ரன்களை எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.இந்திய அணி தனது முதல் இன்னிங்சின் பாலே ஆனை தவிற்க இன்னும் 348 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இன்று ஆடவுள்ளது.
No comments:
Post a Comment