போன்ஸ்ஏர்ஸ், ஜூலை. 17
பிரேசிலில் நடக்கவிருக்கும் அடுத்த உலக கோப்பை வரை மரடோனாவை அர்ஜென்டினா பயிற்சியாளராக நீட்டிக்க கால்பந்து சங்கம் திட்டமிட்டு உள்ளது.ஆனால் நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வியுற்று வெளியேறியதால் கடும் அதிர்ச்சியுள்ளானார் பயிற்சியாளர் மரடோனா.இந்த தோல்வியின் காரணமாக அவர் பயிற்சியாளர் பணியில் இருந்து விலக போவதாக தகவல்கள் வந்தன. ஆனால் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மரடோனாவை இழக்க விரும்ப வில்லை. தொடர்ந்து அவர் பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என்று விரும்பு கிறது.
எனவே மரடோனாவை 2014ம் ஆண்டு நடக்கும் அடுத்த உலக கோப்பை போட்டி வரை பயிற்சியாளராக நீடிக்க வைக்க அர்ஜென்டினா கால்பந்து சங்கம் திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து அர்ஜென்டின அணியின் செய்தி தொடர்பாளர் எமஸ் டோபியாலோ கூறும்போது:
மரடோனாவை தொடர்ந்து பயிற்சியாளராக நீடிக்க வைக்க விரும்புகிறோம். இது தொடர்பாக கால்பந்து சங்க தலைவர் ஜூலியோ காண்டனா அடுத்த வாரம் மரடோனாவை சந்தித்து பேச இருக்கிறார்.
மரடோனாவை தவிர வேறு யாரையும் பயிற்சியாளராக நியமிப்பது பற்றி நாங்கள் சிந்தித்து பார்க்கவில்லை என்று கூறினார்.
No comments:
Post a Comment