நியுயார்க்,ஜுலை.24
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்து வரும் 3 டென்னிஸ் தொடர்களிலில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் அவரது பயிற்சியாளர் அமெரிக்க ஓபன் டென்னிஸில் செரீனா விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓட்டல் ஒன்றுக்கு சென்ற போது,அங்கிருந்த கண்ணாடி டம்ளர் ஒன்று உடைந்து செரீனாவின் வலது காலில் குத்தி காயத்தை ஏற்படுத்தியது. இதற்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனால் இஸ்தான்புல், சின்சினாட்டி, மான்ட்ரியல் ஆகிய மூன்று தொடர்களிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது குறித்து கருத்து கூறிய செரீனாவின் செய்தித் தொடர்பாளர் : ஆகஸ்டு 30ந்தேதி தொடங்கும் அமெரிக்க ஓபன் போட்டிக்கு களம் திரும்ப செரீனா திட்டமிட்டுள்ளார். காயம் காரணமாக சிகிச்சை எடுத்து வரும் அவர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவார்.செரீனா விரைவாக குணம் அடைந்து வருகிறார். அவரால் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
No comments:
Post a Comment