சென்னை, ஜூலை 27
பெங்களூரில் நடந்த தேசிய சப்ஜூனியர் நீச்சல் போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட இளம் நீச்சல் வீரர் தனுஷ் 200 மீட்டர் தனிநபர் பிரிவில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
பிணி தீர்க்க
தனது ஐந்தாவது வயதில் ஏற்பட்ட நுரையீரல் ஒவ்வாமை நோய்க்காக நீச்சல் பயிற்சி மேற்கொண்ட தனுஷ் பின்னர் ஆர்வமாகி நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வந்தார். சமீபத்தில் பெங்களூரில் நடந்த தேசிய சப்ஜூனியர் நீச்சல் போட்டியில் தமிழகம் சார்பில் தனுஷ் பங்கேற்றார். அதில், தனிநபர் 200 மீட்டர் "மெட்லி' பிரிவில், தேசிய அளவில் புதிய சாதனையும், இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை தனுஷ் வென்றார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வரும் தனுஷ், இதுவரை தேசிய அளவில் ஏழு, தென்மண்டல அளவில் நான்கு, மாநில அளவில் 52, மாவட்ட அளவில் 43 பதக்கங்கள் மற்றும் ஒன்பது சாம்பியன்ஷிப் பட்டங்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.
வெற்றி குறித்து தனுஷ் கூறும்போது, "தொடர்ந்து நீச்சல் பழகுவதால், சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை மற்றும் படிப்பிலும் அதிக ஆர்வம் ஏற்படுகிறது' என்றார்.
No comments:
Post a Comment