Thursday, July 22, 2010

உலக பேட்மிட்டன் போட்டி பட்டம் வெல்வேன்சாய்னா

புதுடெல்லி,ஜுலை.15
பிரான்சில் அடுத்த மாதம் நடக்கும் உலக பேட்மிட்டன் போட்டியில்சாம்பியன் பட்டத்தை வெல்வேன்'' என்று இந்திய வீராங்களை சாய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சாய்னா தலைமையில்
உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 9 பேர் கொண்ட இந்திய அணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்த போட்டிக்கு இந்திய அணியின் தலைவராக சாய்னா நேவால் செயல்படுவார் என்று இந்திய பேட்மிட்டன் சம்மேளன தலைவர் வி.கே.வர்மா அறிவித்துள்ளார்.
அணி விவரம் பெண்கள் பிரிவு: சாய்னா (தலைவர்), அதிதி முடாட்கர், ஜுவாலா கட்டா, அஷ்வினி, ஆண்கள் அணி விவரம்: சேத்தன் ஆனந்த், காஷியாப், சானாவ் தாமஸ், ருபேஷ் குமார், திஜு. தலைமை பயிற்சியாளர் கோபிசந்த், உதவி பயிற்சியாளர் விஜய் தீப்சிங் ஆகியோர் அணியில் உள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் சாய்னாவுக்கு தொடர்ச்சியாக 3 சர்வதேச பட்டங்கள் வென்று சாதனை படைத்தற்காக பாராட்டு விழா நடந்தது. விழாவில் அவரது வயதை குறிக்கும் வகையில் அவருக்கு 20 தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு பிறகு சாய்னா பேசும்போது:
பேட்மிண்டன் தனிநபர் ஆட்டம். இங்கு ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது.உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டனிலிருந்து நமது அணியில் சிறந்த வீரர்களின் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன். ஒவ்வொருவரும் திறமையுடன் விளையாடி வருகிறார்கள்.
உலக சாம்பியன் போட்டியில் பட்டத்தை வெல்வேன் என்று நம்புகிறேன் என்று கூறினார்.உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றால் அவருக்கு 101 தங்க நாணயங்கள் வழங்குவதாக இந்திய பேட்மின்டன் அணியின் ஸ்பான்சர் நிறுவனம் அறிவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment