புனோஸ்,ஜுலை.23
அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளராக நீடிப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யவுள்ளதாக மாரடோனா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19வது உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தின் காலி றுதி போட்டியில் ஜெர்மனி அணியிடம் 40 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி தோல்வி யடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. மோசமான தோல்வியின் காரணமாக அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகப்போவதாக மாரடோனா கூறியிருந்தார். ஆனால் அர்ஜென்டினா அதிபர் மற்றும் அணி நிர்வாகிகள் 2014ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அடுத்த உலகக்கோப்பை வரை மாரடோனா பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். இதுபற்றி ஆலோசனை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த வாரம் இப்பதவி குறித்து இறுதி முடிவு எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment