கராச்சி, ஜூலை27
லண்டனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட பாக். வீரர் சோயிப் மாலிக் சரியாக விளையாடாததால் அணியிலிருந்து நீக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்து வெளியேறியது. அந்தப் போட்டிகளின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. பின்னர் தடை நீக்கப்பட்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக தேர்வு செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுடன் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சோயிப் மாலிக் ஆட்டம் எடுபடவில்லை. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சோயிப் மாலிக் 26 ரன்களும், 2வது இன்னிங்சில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் கூட சோயிப் மாலிக் சரியாக ஆடாததால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஆலோசித்து வருகிறது. இதேபோல சகோதரர்களான உமர் அக்மல், கமரன் அக்மல் ஆகியோரும் சரியாக ஆடவில்லை. எனவே இவர்கள் 3 பேருமே அடுத்து வரும் போட்டிகளில் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுடன் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்ற பாக். வீரர் சோயிப் மாலிக் பயிற்சியில் ஈடுபடாமல் தனது மனைவி சானியா மிர்சாவுடன் ஊர் சுற்றியதால் அணியிலிருந்து நீக்கப்படலாம் என்று ஏற்கெனவே தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment