Thursday, July 22, 2010

சதர்ன் சமிதி கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்

கல்கத்தா, ஜுலை.21

கல்கத்தாவின் சதர்ன் சமிதி என்ற கால்பந்து அணிக்கு இந்திய கால்பந்து அணியின் முன்னாள்வீரர் ஐ.எம்.விஜயன் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
கேரள மாநிலத்தில் பிறந்த ஐ.எம்.விஜயன் இந்திய கால்பந்தின் அடையாளங்களில் ஒருவர். உலகிலேயே அதி விரைவில் கோல் அடித்தவர் இவர்தான் . கடந்த 1999ம் ஆண்டு நடந்த தெற்காசிய போட்டியில் பூடான் அணிக்கு எதிராக ஆட்டம் துவங்கிய 12வது வினாடியில் கோல் அடித்து விஜயன் செய்த சாதனையை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை. கடந்த 2003ம் ஆண்டு சர்வதேச கால்பந்தில் இருந்து விஜயன் ஓய்வு பெற்றார்.சமீபத்தில்தான் ஆசிய கால்பந்து சம்மேளனத்திடம் இருந்து பயிற்சியாளராக பணியாற்ற லைசென்ஸ் பெற்றார்.
பயிற்சியாளராக பொறுப்பேற்றது குறித்து விஜயன் கூறும் போது:என்னை சிறந்த கால்பந்து வீரானாக கல்கத்தான் உருவாக்கியது. அதே கல்கத்தாவில் இருந்துதான் இப்போது பயிற்சியாளர் பணியையும் தொடங்கியுள்ளேன். பயிற்சியாளர் பதவியில் கடும் சவால் இருக்கிறது. ஆனாலும் எனது அத்தனை அனுபவத்தையும் திரட்டி சதர்ன் சமிதியை சிறந்த அணியாக உருவாக்கி காட்டுவேன் என்றார்.

No comments:

Post a Comment