Wednesday, July 28, 2010

பயிற்சியாளராக நீடிக்க விருப்பம் மரடோனா


புனோஸ்,ஜுலை.28
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவின் தோல்வியால் அந்த அணியின் பயிற்சியாளர் பதவியில் மரடோனா நீடிப்பாரா ? இல்லையா? என்று குழப்பம் நிலவி வந்த நிலையில் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக தொடர எனக்கு விருப்பம்தான் என்று மரடோனா கூறியுள்ளார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் கால்யிறுதியில் ஜெர்மனியிடம் 04 என்ற கோல் கணக்கில் மிகவும் மோசமாக தோற்றது.
இந்த தோல்வியால் பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது.ஆனால் மரடோனாவை நீக்காமல் மேலும் 4 ஆண்டுகளுக்கு பயிற்சியாளராக நீடிப்பார் என்று கால்பந்து சங்கம் அறிவித்தது. அதோடு மட்டுமில்லாமல் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் இறுதி முடிவை மரடோனாவே எடுக்க வேண்டும் என்றும் கூறியது.
இந்நிலையில் பயிற்சியாளராக தொடருவது குறித்து கருத்து தெரிவித்த மரடோ னா:
அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக தொடர எனக்கு விருப்பம்தான்.ஆனால் தற்போது எனக்கு உதவியாளர்களாக இருப்பவர்களே தொடர்ந்து என்னுடன் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நான் நிச்சயமாக பயிற்சியாளர் பதவியில் நீடிக்க விரும்பமாட்டேன் என்று கூறியுள்ளார். மரடோனாவின் உதவியாளராக இருக்கும் ஆஸ்கர் ரக்கெரி மீது அர்ஜென்டினா கால்பந்து சங்கத் தலைவர் ஹம்பர்டோ கிராடனோவுக்கு நல்ல அபிப்பராயம் இல்லை மற்றும் ரக்கெரியை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று மரடோ னாவை ஹம்பர்டோ நிர்பந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment