Thursday, July 22, 2010

கால்பந்து மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள்

டர்பன், ஜூலை.17
நடந்து முடிந்த 19வது உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக தென்னாப்பிரிக்காவில் புதிதாக 5 மைதானங்கள் கட்டப்பட்டன.இந்த மைதானங்களி இனி கால்பந்து போட்டிகள் அவ்வளவாக நடைபெறாது என்பதால்
இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடக்க முயற்சிகள் எடுத்துவருகின்றனர்.அதற்காக மைதானத்தில் சிறியளவு மாற்றங்கள் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இந்த மைதானங்களில் 20 ஓவர் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். டர்பன் மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்கா இந்தியா இடையே 20 ஓவர் போட்டி நடக்க வுள்ளது.இதற்காக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கால்பந்து சங்கத்தை அணுகியுள்ளது.

No comments:

Post a Comment