லண்டன்,ஜுலை.21
இங்கிலீஸ் பிரீமியர் லீக் போட்டியில் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது இங்கிலாந்து கால்பந்து சங்கம்.
இங்கிலீஸ் பிரீமியர் லீக் போட்டியில் உள்ளுர் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் வகையிலும், ஒரு அணியில் குறைந்தது 8 உள்ளுர் வீரர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி செல்சி என்றால் லண்டனை சேர்ந்த 8 வீரர்கள் கண்டிப்பாக அந்த அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும். மான்செஸ்டர் சிட்டி என்றால் மான்செஸ்டரை சேர்ந்த 8 வீரர்களுக்கு கண்டிப்பாக அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று இந்த புதிய விதி சொல்கிறது.
இந்த விதி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்சனல் பயிற்சியாளர் ஆர்சானே வெங்கர், ''இந்த புதிய விதியால் எங்களிடம் உள்ள வெளிநாட்டு வீரர்களை விற்பனை செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். புதிய விதியை நாங்கள் மதிக்கிறோம்.ஆனால் அதே வேளையில் இதனை செயல்படுத்த எங்களுக்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment