மும்பை, ஜூலை. 22
ஐ.பி.எல்லில் நடந்த முறைகேட்டினை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவில் மாற்றம் வேண்டும் என்று முன்னாள் ஐ.பி.எல். அமைப்பின் தலைவர் லலித்மோடி கேட்டுகொண்டுள்ளார்.மோடி ஐ.பி.எல் அமைப்பின் நிதி பரிவர்த்தனை மற்றும் இ மெயில் பரிவர்த்தனைகள்,ஏல ஆவணங்கள், அணி நிர்வாகங்களின் ஒப்பந்தங்கள், மீடியா உரிமைகள், ஸ்பான்சர்கள் என அனைத்து துறைகளிலும் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஐ.பி.எல் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து மோடி சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த புகாரின் மீது விசாரணை நடத்த ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் ஐ.பி.எல். இடைக்கால சேர்மன் அமீன், அருண்ஜேட்லி, மத்திய மந்திரி ஜோதிரத்யா சிந்தியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.ஒழுங்கு நடவடிக்கை குழுவின் கூட்டம் வருகிற 27ந்தேதி டெல்லியில் நடக்கவுள்ள நிலையில் குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்று லலித்மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த குழுவில் மத்திய மந்திரி ஜோதிரத்யா சிந்தியா இடம் பெறக்கூடாது என்று அவர் கேட்டுகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு தடை விதிக்க கோரி லலித்மோடி தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment