Monday, July 12, 2010

கால்பந்தாட்டத்திற்கு நான் அடிமை ஷகீரா


ஜோகன்னஸ்பர்க்,ஜுலை.11
19வது உலக கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க பாடலை பாடிய பிரபல பாப் பாடகி ஷகீரா தன்னுடைய வாகா வாகா என்ற பாடலின் மூலமூம்,தனது நெளிவு சுளிவான ஆட்டத்தின் மூலமூம் உலக கால்பந்து ரசிகர்களை தனக்கு அடிமையாக்கிவர் தற்போது கால்பந்தாட்டத்திற்கு அடிமையாகியுள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து ஷகீரா கூறும்போது :
தென்னாப்பிரிக்காவுக்கு வந்த முதல் நாளிலிருந்தே என் மீது இங்குள்ள மக்கள் அன்பைப் பொழிகிறார்கள். எனது வாகா வாகா பாடலை அத்தனை வாய்களும் முனுமுனுப்பதைப் பார்க்கவும், கேட்கவும் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.
இந்த ஒரு மாதமும் என்னால் மறக்க முடியாதது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளேன். சமீப காலங்களில் நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தது இந்த தென்னாப்பிரிக்க பயணத்தில்தான்.
இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள், பாசமானவர்கள். என் மீது அவர்கள் வைத்துள்ள பாசத்தையும், அன்பையும் என்னால் முழுமையாக விவரிக்க முடியவில்லை. எனது வாகா வாகா பாடல் இங்கு இந்தஅளவுக்கு பிரபலமாகியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
நான் தென்னாப்பிரிக்காவுக்கு முதல் நாள் வந்து இறங்கியபோது குடியேற்றப் பிரிவு அதிகாரிகளும், ஊழியர்களும் வாகா வாகா பாடலை பாடியபடி வரவேற்றதைப் பார்த்து குஷியாகி விட்டேன்.
இப்போது என்னால் கால்பந்து இல்லாமல் சுவாசிக்கவே முடியாத அளவுக்கு கால்பந்துக்கு அடிமையாகி விட்டேன்.செய்தித்தாள்களின் விளையாட்டுப் பக்கத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை.
விளையாட்டுக்கு அதிக ஆர்வம் காட்டாத என்னை இப்படி தூண்டி விட்டது கால்பந்துதான். கால்பந்து அற்புதமான விளையாட்டு. அதில் சந்தேகமே இல்லை.
நான் இந்த ஒரு மாத காலத்தில் 3 போட்டிகளை மட்டுமே நேரில் பார்த்தேன். தொடக்க நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த மெக்சிகோதென் னாப்பிரிக்கா போட்டி மற்றும் அர்ஜென்டினாநைஜீரியா போட்டி. அடுத்து ஸ்பெயின்பராகுவே போட்டியைப் பார்த்தேன்.
நான் லத்தீன் அமெரிக்க அணிகளையே ஆதரிக்கிறேன். காரணம், உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர்கள்தான் அபாரமான ஆட்டத்தைக் கொடுக்கிறார்கள். அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, பராகுவே ஆகிய அணிகளின் ரசிகை நான். நான் அடிப்படையில் ஸ்பெயின் பூர்வீகம் கொண்டவள். எனவே ஸ்பெயினை ஆதரிக்க வேண்டியது எனது கடமையாகும்.

No comments:

Post a Comment