Thursday, July 22, 2010

அடுத்த ஆண்டு வெளிவருகிறது சச்சினின் சுயசரிதை புத்தகம்



லண்டன், ஜூலை. 21
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 21 ஆண்டுகளாக விளையாடி வரும் சச்சினனை பாராட்டும் விதமாக லண்டனை சேர்ந்த கிரகென் மீடியா நிறுவனம் ரத்தப்பதிப்பு என்ற அவரது சுயசரிதை புத்தகத்தை வெளியிடுகிறது.சிறப்பு புத்தகம், சாதாரண புத்தகம் என்று 2 வகைகளில் தெண்டுல்கரின்சுயசரிதை வெளியிடப்படுகிறது. சிறப்பு புத்தகத்தில் தெண்டுல்கர் ரத்தத்தில் கையெழுத்திட்டது இருக்கும். இதில் இதுவரை வெளிவராத அவரது குடும்பப் புகைப்படங்கள், அவரது கிரிக்கெட் வாழ்வு பற்றிய சிந்தனைகள் மற்றும் பல சுவையான அரிய பகுதிகளுடன் வெளிவருகிறது.
852 பக்கங்கள் கொண்ட இந்த நூல் தங்க நிற அட்டையுடன் வெளிவருகிறது. இதன் விலை 75,000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே!37 கிலோ எடையுள்ள இந்தப் புத்தகம் 10 பதிப்புகளே வெளிவரவுள்ளன. இதற்கான ஆர்டர்களும் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன.உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா, இலங்கை, வங்காளதேசத்தில் நடக்கிறது. அந்த சமயத்தில் அதாவது பிப்ரவரி மாதம் இந்த புத்தகம் வெளியிடப்படுகிறது.
இந்த சிறப்பு புத்தகத்தின் மூலம் கிடைக்கும் பணம் மும்பையில் கட்டப்பட்டும் பள்ளிகளுக்கு பயனபடுத்தப்படவுள்ளது.கிரிக்கெட் கடவுள், இந்திய ரசிகர்களின் கடவுள் என்றேல்லாம் கூறப்படும் சச்சினின் சுயசரிதை புத்தகம் கடைசியில் கடவுளின் சாதாரண பக்தர்கள் நினைத்துப்பார்க்க முடியாத விலையில் உள்ளது.
கடவுளை சாதாரணர்கள் நெருங்க முடியுமா என்ற ஏக்கத்தை தீர்க்கும் வண்ணமாக இந்த 852 பக்க நூலை அதன் ரத்தப்பகுதிகள் நீங்கலாக மலிவு விலை பதிப்பையும் கிரேகன் பதிப்பகம் வெளியிடுகிறது. இதன் விலை 2000 டாலர்கள் முதல் 3000 டாலர்கள் வரை இருக்கலாம். ஆனால் இதுவும் 1000 பதிப்புகளே வரவுள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பில் சாதாரண புத்தகத்தின் விலை ரூ.92 ஆயிரம் முதல் ரூ.1.38 லட்சம் வரை இருக்கும்.

No comments:

Post a Comment